Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி                               26.07.2012

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 57 கோடியே 83 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி பகுதிகளும் பயனடைய உள்ளன.

செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் நிலையத்திலிருந்து, இத்திட்டத்துக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், பெரியம்மாபாளையம், அரும்பாவூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்தும் நிலையங்களையும், பாடாலூர், நாரணமங்கலம், தெரணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி 306 கிராமங்களுக்கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக ரூ. 156 லட்சத்தில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, கூட்டுக் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயராகவன், கனகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

குடிநீர் குழாய் பதிக்கும் பணி : மேயர் விஜிலா துவக்கினார்

Print PDF

தினமலர்       26.07.2012   

குடிநீர் குழாய் பதிக்கும் பணி : மேயர் விஜிலா துவக்கினார்

திருநெல்வேலி : தச்சநல்லூர் 4வது வார்டு உடையார்பட்டியில் குடிநீர் திட்ட பிரதான குழாய் பதிக்கும் பணியை மேயர் விஜிலா துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 4வது வார்டு உடையார்பட்டி, திலக் நகர் குடிநீர் திட்டத்திற்காக பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் 7.80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.மேயர் விஜிலா தலைமை வகித்து, புதிய திட்டப்பணிகளை துவக்கிவைத்தார். துணைமேயர் ஜெகநாதன், மண்டல தலைவர் மாதவன், உதவிக் கமிஷனர் ஜான் சுந்தர்ராஜ், உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், இளநிலைப்பொறியாளர் பைஜூ, கவுன்சிலர் வேல்ராஜ், வட்ட செயலாளர் ஆறுமுகம், பேச்சாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகரத்தில் இன்றும் குடிநீர் 'கட்'

Print PDF

தினமலர்       26.07.2012   

திருச்சி மாநகரத்தில் இன்றும் குடிநீர் 'கட்'

திருச்சி: பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, திருச்சி மாநகராட்சியின் முக்கியப்பகுதியில் இன்றும் (26ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இருந்து டர்பைன் நீரேற்று நிலையம் மூலமாக விநியோகம் செய்யும் பிரதான ராட்ஷத உந்துகுழாய், குடமுருட்டி பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை உடைப்பெடுத்தது.இந்த உடைப்பை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கம்பரசம்பேட்டை நீர்ப்பணி நிலையத்துக்குட்பட்ட மரக்கடை, விறகுப்பேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்றும் (26ம் தேதி) இருக்காது.மேலும், கலெக்டர் வெல் நிலையத்துக்குட்பட்ட தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோண்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் இன்றும் குடிநீர் விநியோகிக்கப்படாது.நாளை (27ம் தேதி) முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்கவேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 115 of 390