Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர்                         25.07.2012

ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

தஞ்சாவூர்: ""கொள்ளிடம் ஆற்றில், புதிதாக அமைக்கப்பட்ட அதிக விட்டம் கொண்ட ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி இன்னும் ஒருவாரத்தில் துவங்கும். இனிமேல் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது'' என, தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் பெறும் வகையில் கொள்ளிடத்தின் மையப்பகுதியில் திருமானூர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, 18 கி.மீ., தூரம் குழாய்கள் அமைத்து, வெண்ணாற்றிலுள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.கொள்ளிடம் ஆற்றிலுள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து ஆற்றுக்கரை ஆற்றின் தரைமட்ட தளத்தில் ராட்சத இரும்புக்குழாய்கள் பதித்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இந்த குழாய்களில் அடிக்கடி கசிவும், பழுதும் ஏற்பட்டு வந்தது. இதனால், குறிப்பிட்ட அளவுக்கு நீரை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆற்றில் தண்ணீர் வராத காலத்தில், கசிவு ஏற்பட்டால் உடனடியாக குழாய்களில் பழுதை சீரமைக்க முடியும். ஆனால், தண்ணீர் ஓடும் சமயத்தில் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ பழுது பார்ப்பது சிரமம்.

அதனால், நீரேற்று நிலையத்திலிருந்து, கொள்ளிடைக்கரை வரை ஆற்றின் தரைத்தளத்திலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில், நடைபாதையை 1,010 மீட்டர் நீளத்துக்கு அமைத்து, அதில், கான்கிரீட் மேடை போட்டு, அதன் மீது ராட்சத குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.நகராட்சித்தலைவர் சாவித்திரி கூறுகையில், ""நடைபாதை அமைப்பின் மீது நீரேற்று நிலையத்திலிருந்து ஆற்றின் மீது குழாய்கள் பதித்து, குடிநீரை எடுத்து வருவதன் மூலம் குடிநீர் வீணாவது தடுக்கப்படும். பழுதுகளை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். கொள்ளிடத்திலிருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்து வர முடியும். இன்னும் ஒருவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிக விட்டம் கொண்ட ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி துவங்கும். இனிமேல் தஞ்சை நகர மக்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது,'' என்றார்.ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

மஞ்சூரில் ரூ.5 லட்சத்தில் தண்ணீர் தொட்டி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினமலர்                         25.07.2012

மஞ்சூரில் ரூ.5 லட்சத்தில் தண்ணீர் தொட்டி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை

மஞ்சூர் : மஞ்சூர் ஹட்டியில் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தண்ணீர் தொட்டி கட்டும் வகையில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கீழ்குந்தா பேரூராட்சிக்கு 6வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சூர் ஹட்டியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு சரிவர தண்ணீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பல முறை சென்று புகார் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்தனர். "புதியதாக தண்ணீர் தொட்டி கட்டி தடையின்றி தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என 6வது வார்டு கவுன்சிலர் அர்ஜூணன் வலியுறுத்தினார்.இந்நிலையில், பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மஞ்சூர் ஹட்டியில் தண்ணீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ., நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மஞ்சூர் ஹட்டியில் நடந்தது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி தலைவர் ஜெயா, செயல் அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர்த் திட்ட சீரமைப்புப் பணிகள்

Print PDF
தினமணி         13.07.2012

மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர்த் திட்ட சீரமைப்புப் பணிகள்


மேட்டுப்பாளையம், ஜூலை 12: மேட்டுப்பாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் மூன்று குடிநீர்த் திட்டங்களில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில் வசித்து வரும் மக்களுக்கென பழைய முதல் குடிநீர்த் திட்டம், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம், மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டம் என, மூன்று குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 பழைய முதல் குடிநீர்த் திட்டம் மூலம் சத்தியமூர்த்தி நகர், மகாதேவபுரம், காட்டூர், ரயில் நிலைய சாலை, சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டம் மூலம் அண்ணாஜி ராவ் சாலை, நியூ எக்ஸ்டன்ஷன் வீதி, சந்தைக்கடை, பங்களாமேடு ஆகிய பகுதிகளுக்கும், மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டம் மூலம் கே.கே.நகர், நடூர், கோ-ஆபரேடிவ் காலனி, கோவிந்தசாமி நகர், சாந்தி நகர், காட்டூர், கெண்டையூர், நாடார் காலனி, சங்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கும் சுமார் 12.75 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

 இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில், நகரின் மூன்று குடிநீர்த் திட்டங்களிலும் குடிநீர் வடிகால் படுகைகள் மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 அதன் முதல்கட்டமாக மேட்டுப்பாளையம் 2-ம் குடிநீர்த் திட்டத்திலுள்ள குடிநீர் வடிகால் படுகையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இக் குடிநீர்த் திட்டத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சுத்திகரிப்புக் குழாய் மாற்றம், நீரை வடித்தெடுக்கும் மணல், கூழாங்கற்களைப் புதிதாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

 இத் திட்டப் பணிகளை, நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் ரமாசெல்வி, கவுன்சிலர் ராதா, நகராட்சி மின் கண்காணிப்பாளர் அன்வர், உதவி பொறியாளர் நாகராஜ், உதவியாளர் மகேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

 சீரமைப்புப் பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் கூறியது:

 மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மூன்று குடிநீர்த் திட்டங்களில் முதல் கட்டமாக 2-ம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வடிகால் படுகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து பழைய முதல் குடிநீர்த் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டங்களில் ரூ. 20 லட்சம் மதிப்பில் வடிகால் படுகைகள் மாற்றியமைக்கும் பணி நடைபெறும்.

 பழைய குடிநீர்த் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னரும் குடிநீர் வடிகால் படுகைகள் மாற்றும் பணி நடைபெறுகிறது. இப் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் சுத்திகரிக்கப்பட்ட, தூய குடிநீர் நகர மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
 


Page 116 of 390