Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குழாய் உடைப்பு சீரமைப்பு தீவிரம் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நாளை சீரடையும்

Print PDF

தினகரன்        15.12.2010

குழாய் உடைப்பு சீரமைப்பு தீவிரம் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நாளை சீரடையும்

நாகர்கோவில், டிச.15: திருப்பதிசாரம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளில் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பழையாற்றில் வீரநாராயணமங்கலத்தில் இருந்து திருப்பதிசாரம் பிரிவு கால்வாய் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வடக்கு பகுதியில் 3 உடைப்புகள் என்று மொத்தம் 4 இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் ரூ4 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பழையாற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு தேரூரில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நடந்து வரும் குடிநீர் விநியோக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பதிசாரம், தேரேகால்புதூர், தேரூர், சுசீந்திரம், கன்னியாகுமரி மற்றும் வழியோர கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பதிசாரம் பகுதியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரூ14 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பண்ட்அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பளப்பட உள்ளன.குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறி யாளர் எம்.சுப்பிரமணியன், நிர்வாக பொறியாளர் பெருமாள், உதவிபொறியா ளர் ராஜகோபால் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உடைப்பு சீரமைப்பு பணிகள் நாளை (இன்று) நிறைவு பெற்றுவிடும், நாளை மறுநாள் (நாளை) முதல் பழையாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் துவங்கிவிடும். உடைப்பு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறதுஎன்றார்.

இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பதிசாரம் பகுதியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரூ14 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பண்ட்அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பளப்பட உள்ளன.குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறி யாளர் எம்.சுப்பிரமணியன், நிர்வாக பொறியாளர் பெருமாள், உதவிபொறியா ளர் ராஜகோபால் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உடைப்பு சீரமைப்பு பணிகள் நாளை (இன்று) நிறைவு பெற்றுவிடும், நாளை மறுநாள் (நாளை) முதல் பழையாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் துவங்கிவிடும். உடைப்பு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறதுஎன்றார்.

குமரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் திருப்பதிசாரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Last Updated on Wednesday, 15 December 2010 06:29
 

பெங்களூரில் ஏரிகளை சுத்தமாக்க ஆணையர் உத்தரவு

Print PDF

தினகரன்          15.12.2010

பெங்களூரில் ஏரிகளை சுத்தமாக்க ஆணையர் உத்தரவு

பெங்களூர், டிச. 15: பெங்களூரில் உள்ள ஏரிகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தும் படி சம்மந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சித்தையா உத்தரவிட்டுள்ளார்.

மாநகரின் ராஜராஜேஷ்வரி நகரில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஏரிகள் இன்று காணாமல் போய்விட்டது. ஏரிகள் ஆக்கிரமிப்பை தடுக்காமல் விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருக்கும் ஏரிகளை அழிவில் இருந்து காப்பாற்றி கொள்வது அவசியம் என்பதால், மாநரம் முழுவதும் உள்ள ஏரிகளை புனரமைத்து பாதுகாக்கும்படி மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஏரிகளை தூர் வாரிய பின், ஆக்கிரமிப்ப நடக்காமல் தவிர்க்கும் வகையில் ஏரியை சுற்றி கம்பிவேலி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜராஜேஸ்வரி மண்டலத்தில் 64 புதிய பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதில் 5 பூங்காவில் மழைநீர் சேமிப்பு வசதி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும் என்றார்.

 

2வது குடிநீர் திட்டத்திற்கு ரூ8.5 கோடியில் பில்லூர் குழாய் : மாநகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினகரன்            15.12.2010

2வது குடிநீர் திட்டத்திற்கு ரூ8.5 கோடியில் பில்லூர் குழாய் : மாநகராட்சியில் தீர்மானம்

கோவை, டிச. 15: கோவை மாநகராட்சியில் பில்லூர் 2வது குடிநீர் திட்டத்திற்கு 8.5 கோடி ரூபாய்க்கு குடிநீர் குழாய் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியிலிருந்து கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 12 ஆண்டிற்கு முன், ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து கிழக்கு மண்டலத் தில் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் பழுதடைந்து விட்டதால் அடிக்கடி உடை ப்பு ஏற்படுகிறது.

பீளமேடு, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், சவுரிபாளையம், வரதராஜபுரம், நீலிக்கோணம்பாளையம், சிங்காநல்லூர், எஸ்..எச்.எஸ் காலனி, நேதாஜிபுரம் பகுதியில் தற்போதுள்ள குழாய்களை மாற்றி 8.5 கோடி ரூபாய் செலவில் குழாய் பதிக்க முடிவு எடுக்கப்பட்டது. 5.7 கி.மீ தூரத்திற்கு 900 மி.மீ முதல் 1000 மி.மீ விட்டம் கொண்ட எம்எஸ் மற்றும் டி.ஐ குழாய் அமைக்க கூட்டத்தில் ஒப்பு தல் பெறப்பட்டது.

இயக்கம் மற்றும் பராமரி ப்பு பற்றாக்குறை நிதி தொகை யில் திட்ட பணி நடத்தப்படும். அரசு சார்பில் 4.44 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை மாநகராட்சி நிர்வாகம் தனது பங்களிப் பாக செலுத்தும். குழாய் பதித் தால் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 16 வார்டுகளில் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலை திட்டத்தில், கோவை நகரில் 15 இடத்தில் சிமெண்ட் ரோடு, தார் ரோடு, நடைபாதை, மழை நீர் வடிகால் அமைக்க ஒப் புதல் பெறப்பட்டது. 1.88 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படும்.

 


Page 123 of 390