Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உடுமலைக்கு 2ம் கட்டகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா? : நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை

Print PDF

தினகரன்              15.12.2010

உடுமலைக்கு 2ம் கட்டகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா? : நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை

உடுமலை, டிச. 15: உடுமலைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மற்றும் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வழியோர கிராமங்களான தளி, ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

2ம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் கடந்த 1984ம் ஆண்டு அணை பகுதியில் இருந்து உடுமலை நகர் வரை சுமார் 15 கிமீ தூரத்துக்கு சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டது. பல ஆண்டுஆகிவிட்டதால் இந்த குழாய்கள் பலவீனமடைந்து அடிக்கடை உடைப்பு ஏற்படுகிறது. மேலும், வழிநெடுகிலும் புளியமரங்கள் இருப்பதால் அவற்றின் வேர்கள் குழாய்களில் ஊடுருவி உடைப்பை ஏற்படுத்துகின்றன.அடிக்கடி குழாய் உடைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. ஓரிரு நாள் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு பழுதுபார்க்கின்றனர். இதற்காக ஒரு தடவைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பல லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்கிறது.குடிநீர் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

 இப்பிரச்னைக்கு தீர்வு காண பழைய குழாய்களை முற்றிலும் மாற்றிவிட்டு புதிதாக இரும்பு குழாய்களை பதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசுக்கு நகராட்சி தலைவர் வேலுச்சாமியும் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, இரும்பு குழாய்கள் பதிக்கவும், கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்தவும் ரூ.24 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர் பங்கேற்கும் ஆலோ சனை கூட்டம் நடக்கிறது. இதில் இத்திட்டத்தை அனுமதிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.

இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டால், உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

புதுப்பிக்கப்பட்ட குளம் திறப்பு

Print PDF

தினமலர்           13.12.2010

புதுப்பிக்கப்பட்ட குளம் திறப்பு

பம்மல்: புதுப்பிக்கப்பட்ட பம்மல், சூரியம்மன் கோவில் குளம், திருப்பனந்தாள் ஏரி ஆகியவற்றை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். பம்மல் நகராட்சி பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் திருப்பனந்தாள் ஏரி, சூரியம்மன் கோவில் குளம் ஆகியவை 2.3 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. சுற்றுலாத் துறையுடன் இணைந்து நகராட்சி இந்த நீர்நிலைகளின் கரையை பலப்படுத்தி, சாலை, மின்விளக்கு அமைத்து அழகுபடுத்தியுள்ளது. இதை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி, நகராட்சி தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் இதற்கான விழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், பம்மல் நகராட்சியில் 1.52 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

 

கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Print PDF

தினமணி            13.12.2010

கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

கிருஷ்ணகிரி, டிச. 12: கிருஷ்ணகிரிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்ததால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

÷கிருஷ்ணகிரி நகராட்சிக்கு தேவையான குடிநீர், சுண்டேகுப்பம் அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீதம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

÷சில மாதங்களுக்கு முன்பு சுண்டேகுப்பம் கிராமத்தில் உள்ள கோயிலின் மதில்சுவர், குடிநீர் குழாய்கள் மீது கட்டப்பட்டதாம். இந்நிலையில், குடிநீர் குழாய்களை இணைக்கும் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை குழாய் வெடித்து, சாலையில் குடிநீர் வெள்ளம்போல் பாய்ந்தது.

தகவலறிந்த நகராட்சி ஆணையர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என ஆணையர் தெரிவித்தார்.

 


Page 124 of 390