Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

Print PDF

தினகரன்            07.12.2010

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின

சென்னை, டிச.8: தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிகளின் கொள்ளளவு:

பூண்டி ஏரியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 3,002 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. வரத்து 1,813 கன அடி. முழுமையாக நிரம்பியதால் 4 ஷட்டர்கள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,988 கன அடி வெளியேற்றப்படுகிறது. பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீருக்கு 10 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. 2,855 கன அடி நீர் நிரம்பியுள்ளது. வரத்து 1,700 கன அடி. குடிநீருக்கு 93 கன அடி வெளியேற்றப்படுகிறது. நேற்று பகல் 12.30 மணியளவில் 2 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, அடையாறு ஆற்றின் வழியாக கடலுக்கு செல்கிறது.

புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. 3,150 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. உயரம் 21.20 அடி. 20.67 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வரத்து 1200 கன அடி. 700 கன அடி வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. வரத்து 100 கன அடி. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நேற்று திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து 3ம் மதகு வழியாக 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வெளியேறும் தண்ணீரின் அளவு, படிப்படியாக உயர்த்தி 500 கன அடியாக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் மணப்பாக்கம், ரமாபுரம் வழியாக சென்று கூவம் ஆற்றை அடையும். தற்போது மழை அளவு குறைந்துள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து, ஏரியின் 3வது மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை பார்க்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் குவிந்தனர்.

 

குடிநீர்த் தொட்டிகளை பாதுகாக்க முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நகராட்சி நிர்வாகம் முடிவு

Print PDF

தினகரன்             07.12.2010

குடிநீர்த் தொட்டிகளை பாதுகாக்க முன்னாள் ராணுவத்தினர் நியமனம் நகராட்சி நிர்வாகம் முடிவு

பொள்ளாச்சி, டிச 7: பொள்ளாச்சி நகரில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகங்களில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கென 20 நபர்களை பணியமர்த்த அரசு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 12 ஆயிரத்து 700 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 270 தெருக்குழாய்களும் உள்ளன. அம்பராம்பாளையம் அருகே ஆழியார் ஆற்றில் இருந்து பெறப்படும் குடிநீர் 8 இடங்களில் உள்ள 11 மேல் நிலை குடிநீர்த் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் பாதுகாக்கப்பட வேண்டிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ள வளாகத்திற்கு பாதுகாப்பு பணி க்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் ஆட் கள் பற்றாக்குறை பிரச்னை யால் மேற்படி வளாகங்களில் பல இடங்களில் பாது காப்புக்கு காவலர்கள் நிய மிக்க முடியாமல் நகரா ட்சி நிர்வாகம் தவித்து வந்தது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர் பாக நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண், பொறியாளர் மோகன் ஆகி யோர் கூறியதாவது, நகரில் வெங்கடேசா காலனியில் 2, மகாலிங்கபுரத்தில் 2, சுதர்சன் நகர், வி.கே.வி. லே அவுட், கே.ஆர்.ஜி.பி. நகர், கந்தசாமி செட்டியார் பூங்கா மற்றும் சோமசுந்தராபுரம் லே அவுட் ஆகிய இடங்களில் தலா 1 என மொத்தம் 11 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் சேமித்து விநியோகிக்கப்படும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கள் அமைந்துள்ள வளாகங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய இடங்களாகும். இதற்கென நகராட்சியின் பணியாளர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். பணியில் இருந்து ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மேற்படி பகுதிகளில் பல இடங்களில் காவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் சீராக விநியோகிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்படி இடங்களில் முன் னாள் ராணுவத்தினரை காவலர்களாக நியமிக்க அரசிடம் அனுதி கோரப்பட்டது. இதனை பரிசீலித்து அரசு அனுமதியும் வழங்கியுள்ளது.ஆகவே 12 காவலர்கள், 5 பம்ப் ஆபரேட்டர்கள், 3 வடிதள இயக்குநர்கள் என மொத்தம் முன்னாள் ராணுவத்தினர் 20 நபர்களை நியமிக்க முடிவு செய்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 7 ஆயிரத்து 191 வீதம் 2010 டிசம்பர் மாதம் முதல் 2011 நவம்பர் வரை ஒரு ஆண்டுக்கு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம் சம்பளமாக வழங்கவும் அரசிடம் அனு மதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

சிறுவாணி நீர் மட்டம் குறைகிறது நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது

Print PDF

தினகரன்                 07.12.2010

சிறுவாணி நீர் மட்டம் குறைகிறது நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது

கோவை, டிச.7: சிறுவாணி அணை நீர் மட்டம் குறைய துவங்கியது. நீர் பிடிப்பில் மழை ஓய்ந்தது. சிறுவாணி அணையின் நீர் மட்டம் 878.50 மீட்டர் (கடல் மட்ட உயர கணக்கின் படி). நேற்று அணையின் நீர் மட்டம் 874.91 மீட்டராக காணப்பட்டது. நேற்று முன் தினம் 874.92 மீட்டராக இருந்தது. அணையின் நீர் மட்டம் 2 மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மட்டுமே அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 3 நாளாக மழை பெய்யவில்லை. நீரோடைகளில் வரும் நீர் வரத்து, 80 சதவீதம் வரை குறைந்து விட்டது.

அணை நிரம்ப, நீர் மட்டம் இன்னும் 3.6 மீட்டர் அளவிற்கு உயரவேண்டும். அணையின் நீர் தேக்க பரப்பு14.5 சதுர கி.மீ. கடந்த மாதத்தில், சிறுவாணி நீர் பிடிப்பில் 249 மி.மீ மழை பெய்தது. அணையின் நீர் மட்டம் கடந்த 45 நாளில், 14 செ.மீ அளவிற்கு உயர்ந் தது. இன்னும் மொத்தமாக 360 மி.மீ அளவிற்கு மழை பெய்தால் அணை நிரம்பி வழியும். மழை நின்று விட்டதால் அணை நிரம்பும் வாய்ப்பு குறைந்து விட்டது. சிறுவாணி அணையிலிருந்து தினமும் 8.3 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

சிறுவாணி அணையின் தென்மேற்கு திசையில், 4 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிரம் புழா அணை, நடப்பாண்டில் 3 முறை நிரம்பியுள்ளது. இந்த அணை சிறுவாணியை விட 1.5 மடங்கு பெரியது. இதே போல், சிறுவாணி அணை யின் தெற்கு திசையில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மலம்புழா அணை நடப்பாண்டில் இருமடங்கு நிரம்பியது. மலம்புழா அணை சிறுவாணி அணையை விட 2 மடங்கு பெரிதானது.

ஒரே நீர் பிடிப்பு பகுதி அமைந்துள்ள இரு அணை நிரம்பியபோது சிறுவாணி அணை மட்டும் நிரம்பாமல் நீர் மட்டம் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், சிறுவாணி அணை நிரம்பிய பின்னரே காஞ்சிரம் புழா மற்றும் மலம்புழா அணைகள் நிரம்பியுள்ளது. ஆனால், நடப்பாண்டில் சிறுவாணி அணை நீர் மட்டம், 72 சதவீத நீர்தேக்க நிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.

 


Page 127 of 390