Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க 50 நிலத்தடி நீர் தேக்கங்கள்

Print PDF

தினகரன்       03.12.2010

குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க 50 நிலத்தடி நீர் தேக்கங்கள்

புதுடெல்லி, டிச. 3: ‘குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 50 நிலத்தடி நீர்த்தேக்கங்கள் கட்டப்படும்என்று உயர் நீதிமன்றத்தில் டெல்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி சதாரா பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை தீர்த்து வைக்க, குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிடும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி ஆராய குடிநீர் வாரியம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் அதிகாரிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி மாநில தலைமை செயலாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டது.

அத்துடன் சதாரா பகுதியில் உள்ள மஹல்ல கங்காராம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குடிநீர் வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை 2021ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்க முன்னோடி திட்டம் (மாஸ்டர் பிளான்) ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரின் முக்கியமான பகுதிகளில் 50 நிலத்தடி நீர்த் தேக்கங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கனவே வழங்கி விட்டது.

நிலத்தடி நீர்த்தேக்கங்கள் கட்டும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலத்தடி நீர்த் தேக்கத் திட்டம் முடிவடைந்த பிறகு நகரம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுள்ளது.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

Print PDF

தினமலர்             02.12.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

செங்குன்றம் : கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழை மற்றும் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக புழலேரி, சோழவரம் ஏரிகளின் நீர் இருப்பு ஜிவ்வென அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் புழலேரி முழு அளவில் நிரம்பி விடும். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் நீர் பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் சென்னை குடி நீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டிய வடகிழக்கு பருவ மழை மற்றும் தமிழகத்தை மிரட்டிய, "ஜல் புயல்' எதிரொலியால் கணிசமான அளவிற்கு மழை கிடைத்தது. தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பருவ மழை நீடித்தது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 330 கோடி கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட புழலேரியில், 269 கோடியே 50 லட்சம் கன அடி நீர் இருப்பு இருந்தது. (கடந்த ஆண்டு இதே நாளில் இங்கு 165 கோடியே 20 லட்சம் கன அடிக்கு நீர் இருப்பு இருந்தது). ஏரியின் மொத்த நீர் மட்ட உயரம் 21.2 அடி. இதில் தற்போது 18.43 அடி உயரத்திற்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து வினாடிக்கு மொத்தம் 885 கன அடி நீர் புழலேரிக்கு வருகிறது. இங்கிருந்து, சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 133 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 41 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகியது. புழலேரிக்கு அருகில் மொத்தம் 88 கோடியே 10 லட்சம் கன அடி நீர் இருப்பு அளவு கொண்ட சோழவரம் ஏரியில், 69 கோடியே 80 லட்சம் கன அடிக்கு நீர் இருப்பு இருந்தது. (கடந்தாண்டு 60 கோடியே 70 லட்சம் கன அடி நீர் இருந்தது).

இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட உயரம் 17.86 அடி. இதில் 15.36 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு மழை மற்றும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 450 கன அடி நீர் வரத்து நீடிக்கிறது.
இதில், 300 கன அடி அளவு நீர் பேபி கால்வாய் மூலம் புழலேரிக்கு வெளியேற்றப்படுகிறது. இங்கு அதிகபட்சமாக 126 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகியிருந்தது. பலத்த மழை தொடர்ந்தால்,மேற்கண்ட ஏரிகள் அடுத்த இரு தினங்களில் முழு அளவிற்கு நிரம்பி விடும். பராமரிப்பு இல்லை: புழலேரியின் ஷட்டர் அமைந்துள்ள மதகு பகுதிக்கு செல்லும் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்புகள் பராமரிப்பின்றி "துரு' பிடித்துள்ளன. சில இடங்களில் அவை விஷமிகளால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏரியை பார்வையிட வருபவர்கள் ஏரிக்குள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே வரும்முன் காக்க, பொதுப் பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பது நல்லது.

 

நகராட்சி கூட்டத்தில் தகவல் ஆலந்தூரில் ரூ67 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணி

Print PDF

தினகரன்                 02.12.2010

நகராட்சி கூட்டத்தில் தகவல் ஆலந்தூரில் ரூ67 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணி

ஆலந்தூர், டிச.2: ஆலந்தூர் நகரமன்ற கூட்டம் தலைவர் துரைவேலு தலைமையில் நடந்தது. ஆணையர் மனோகரன், இன்ஜினியர் மகேசன் முன்னிலை வகித்தனர்.

துணை தலைவர் சந்திரன் பேசுகையில், குடிநீர் அபிவிருத்தி பணிக்காக டெபாசிட் மற்றும் இணைப்பு தொகையை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். எதிர்கட்சி தலைவர் வெங்கட்ராமன், கவுன்சிலர்கள் குமார், கலா கலைவாணன் ஆகியோரும் இதை வலியுறுத்தினர்.

நகராட்சி தலைவர் துரைவேலு கூறுகையில், ‘ஆலந்தூரில் ரூ66.86 கோடி புதிய குடிநீர் திட்ட பணிக்கு மத்திய அரசு 35 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம், நகராட்சி 25 சதவீதம், டுபிக்சில் நிறுவனம் 25 சதவீதம் செலவிடுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் பராமரிப்பு பணிக்காக, ரூ3 ஆயிரமாக இருந்த டெபாசிட் தொகை ரூ5 ஆயிரமாகவும், மாதக் கட்டணம் ரூ50 ஆக இருந்ததை ரூ150 ஆக உயர்த்தி வசூலிக்கும்படி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. நலசங்கத்தினர், கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மாநகராட்சியுடன் இணைந்த பிறகு அது பற்றி பரிசீலிக்கப்படும்என்றார்.

 


Page 129 of 390