Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

செஞ்சியில் ரூ15 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணி தீவிரம் பிப்ரவரி மாதம் குடிநீர் வினியோகம்

Print PDF

தினகரன்              24.11.2010

செஞ்சியில் ரூ15 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணி தீவிரம் பிப்ரவரி மாதம் குடிநீர் வினியோகம்

செஞ்சி, நவ. 24: செஞ்சியில் ரூ. 15 கோடியில் தென் பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்ட பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒருமாதத்தில் இந்த பணிகள் முடிந்து பிப்ரவரி மாதத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செஞ்சி நகரில் குடிநீர் பற்றாக்குறை பல ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 1992ம் ஆண்டு அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.3 கோடியில் அனந்தபுரம், செஞ்சி, கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செஞ்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் மூலம் தான் இப்போதும் செஞ்சி நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பெருகியுள்ள வீடுகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு 1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் போதுமானவையாக இல்லை. இதனால் செஞ்சியில் மீண்டும் சமீபத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய குடிநீர் திட்டம் தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி, எம்.எல்., கண்ணன், பேரூராட்சி தலைவர் மஸ்தான் ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 15 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் தென்பெண்ணை ஆற்றில்இருந்து செஞ்சிக்கு தனியாக தரம் வாய்ந்த குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன் செஞ்சியில் நடந்த விழாவில் இத்திட்டத்துக்கான அடிக்கல்லை துணை முதல்வர் ஸ்டாலின் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து டெண் டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் விழுப்புரத்தில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டம் மூலம் குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைக்கி றார். இதனால் புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது. தென்பென்ணை ஆற்றிலிருந்து குழாய் அமைக் கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ராட்சத குழாய்களை சாலையோர மாக அமைக்கும் தொழிலாளர்கள் அவற்றின் இணைப்பு களை சரியாக பொருத்தி வருகின்றனர். இப்பணி செஞ்சி அருகே அத்தியூர் வரை நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பணிகள் முடிவடைந்து வரும் பிப்ரவரி மாதம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தை துணை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கி றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய குடிநீர்த்திட்டத்தால் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாளைய கனவு நிறைவேறுவதுடன், இனி தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி              23.11.2010

கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு

வெள்ளக்கோவில், நவ. 22: வெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி (படம்) அமைச்சர் பேசியது:

இந்த விழாவில் வெள்ளக்கோவில், முத்தூர், உத்தமபாளையம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 472 சைக்கிள், 59 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா, 236 பேருக்கு இலவச டிவி என மொத்தம் ரூ. 21 லட்சத்து 32ஆயிரத்து 927 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ. 114 கோடியே 14 லட்சம் மதிப்பிலான இலவச டிவி.க்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ. 4 கோடி செலவில் புதிய தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிப் பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கொடுமுடியிலிருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் பெற, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

ஓட்டல்களுக்கு காவிரி குடிநீர் நகராட்சிலாரி மூலம் சப்ளை

Print PDF

தினமலர்               23.11.2010

ஓட்டல்களுக்கு காவிரி குடிநீர் நகராட்சிலாரி மூலம் சப்ளை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு நகராட்சி குடிநீர் லாரி மூலம் காவரிகுடிநீர் வினியோகம் செய்வது தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மாவட்டத்தில் காவிரி நீர் வினியோகம் பல வழிகளில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு வரும் நீரை ஓட்டல்களுக்கு வினியோகித்து வருகின்றனர். இதற்காக நகராட்சி வாகனங்களே பயன்படுத்துவதும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் இதற்காக நகராட்சி வாகனங்கள் வெளியில் சென்ற போதும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த நூதன விற்பனையில் பெரிய அளவில் பணபரிமாற்றம் நடப்பதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

மக்களுக்கு காவிரி நீர் வரவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், தனிநபர் லாபத்திற்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி வருவது வேதனைக்குறியதாகும். மாவட்டம்தோறும் காவிரி குடிநீர்வினியோகம் குறித்து ஆய்வு நடத்தி வரும் அதிகாரிகளுக்கு, மாவட்ட தலைநகர் ராமநாதபுரத்தில் நடந்து வரும் இந்த கூத்து தெரியாமல் போனது வேதனைக்குறியது தான். அரசையும் ஏமாற்றி, பொதுமக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் இந்த செயலை இனியும் அனுமதித்தால், காவிரி நீரை லாரியில் ஏற்றி விற்கும் அவலநிலையும் ஏற்படலாம். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்ட போது,"" ஓட்டல்களுக்கு நகராட்சி வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்வதை அனுமதிக்க முடியாது. இது குறித்து நகராட்சி கமிஷனரின் கவனத்துக்கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 


Page 135 of 390