Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னை- புறநகரில் மழை: ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயருகிறது

Print PDF

மாலை மலர்                              29.10.2010

சென்னை- புறநகரில் மழை: ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயருகிறது

சென்னை- புறநகரில் மழை:  ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு;  நீர்மட்டம் உயருகிறது

சென்னை, அக். 29- கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 832 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை அளவு 15 மில்லி மீட்டர், தண் ணீர் இருப்பு 1682 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அளவு 1220 மில்லியன் கன அடி.

புழல் ஏரி பகுதியில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு 712 கன அடி தண்ணீர் வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 1040 மில்லியன் கனஅடி. இன்றைய அளவு 1408 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த மழை அளவு 72 மி.மீ. ஏரிக்கு தண்ணீரின் வரத்து 556 கன அடி. ஏரியின் நீர் இருப்பு 1506 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த தண்ணீர் 480 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரியில் 409 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 12 கன அடி தண்ணீர் வருகிறது. மழை அளவு 45 மி.மீ. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 197 மில்லியன் கன அடி.

வீராணம் பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய் துள்ளது. ஏரிக்கு 400 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் நீர் இருப்பு 605 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அளவு 409 மில்லியன் கன அடி

சென்னை நகரில் குழாய் மூலம் தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

Last Updated on Friday, 29 October 2010 11:37
 

ராசிபுரம் நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ரூ8 கோடியில் தனி பைப் லைன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

Print PDF

தினகரன்                29.10.2010

ராசிபுரம் நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ரூ8 கோடியில் தனி பைப் லைன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்

ராசிபுரம், அக்.29: ராசிபுரம் நகராட்சியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ரூ8.25 கோடி செலவில் தனி பைப்லைன் அமைத்து குடிநீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு தனி பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வேலு பேசியதாவது:

ராசிபுரம் & பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பல ஊர்களுக்கு குடிநீர் பிரித்து வழங்கப்படுவதால், ராசிபுரத்துக்கு மிகக்குறைவான தண்ணீரே கிடைக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கண்டர்குல மாணிக்கத்தில் இருந்து ராசிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வரை ரூ8.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக தனி பைப் லைன் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18.33 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ராசிபுரம் நகராட்சிக்கு தினமும் 59.7 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த பணிவரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிவடையும். இதற்காக பூலாம்பட்டி காவேரி ஆற்றில் புதிய நிரேற்று மோட்டார் நிறுவப்படும். இந்த திட்டம் நிறைவடைந்தால் ராசிபுரம் நகராட்சிக்கு குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்கும். இவ்வாறு வேலு பேசினார்.

 

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் இறுதியில் குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்               29.10.2010

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் இறுதியில் குடிநீர் விநியோகம்

கோவை, அக்.29: பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்ட பணி 80 சதவீதம் முடிந்தது. வரும் மார்ச் இறுதியில் குடி நீர் விநியோகிக்கப்படும்.

கோவை மாநகராட்சியில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. திட்ட பணி தாமதம் மற்றும் கட்டுமான பொருள் விலையேற்றம் கார ணமாக திட்ட தொகை மே லும் 27 கோடி ரூபாய் உயர் ந்தது. 4 ஆண்டிற்கு முன்பே, திட்ட பணி துவங்கியது. பல்வேறு காரணங்களின் பணி முடங்கியது. தற்போது, திட்டத்தின் அனைத்து பகுதி (பேக்கேஜ்) பணிகளும் வேகமாக நடக்கிறது.

தண்ணீர் ததும்ப காட்சி அளிக்கும் பில்லூர் அணை. உள்படம்: பில்லூர் 2வது கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பார்வையிட்டார். அருகில் கலெக்டர் உமாநாத், மாநகராட்சி ஆனையாளர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துனை மேயர் கார்த்திக், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள்.

கோவை மாநகராட்சியில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. திட்ட பணி தாமதம் மற்றும் கட்டுமான பொருள் விலையேற்றம் கார ணமாக திட்ட தொகை மே லும் 27 கோடி ரூபாய் உயர் ந்தது. 4 ஆண்டிற்கு முன்பே, திட்ட பணி துவங்கியது. பல்வேறு காரணங்களின் பணி முடங்கியது. தற்போது, திட்டத்தின் அனைத்து பகுதி (பேக்கேஜ்) பணிகளும் வேகமாக நடக்கிறது.

திட்ட பணிகளை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனி சாமி, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், கோவை மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகராட்சி மேற் பார்வை பொறியாளர் பூபதி, மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், பணிக்குழு தலைவர் ராமசாமி மற்றும் பலர் நேற்று பார்வையிட்டனர். பில்லூர் அணை அருகே 13.80 கோடி ரூபாய் செலவில் நீர் சேகரிப்பு கிணறு தோண்டும் பணி நடக்கிறது. 30 மீட்டர் ஆழத்திற்கு கிணறு தோண்டவேண்டும்.

ஆனால், இதுவரை 15 மீட்டர் மட்டுமே கிணறு தோண்டப்பட்டுள்ளது. கடின மான பாறை இருப்பதால், வெடி வைத்து, அணையின் தாங்கு சுவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணி நடத்தப்படுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் இந்த பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி மட்டுமே நிறைவடைந்துள் ளது.

பணி முடிந்து, கிணற்றின் உட்பகுதியில் கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடின பாறையால் பணியை வேக மாக நடத்துவதில் சிக்கல் இருக்கிறது.

வெள்ளியங்காட்டில் 28.60 கோடி ரூபாய் செலவில் நீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டும் பணி 90 சதவீதம் முடிந்தது. 1.95 கோடி ரூபாய் செலவில் பெரியகோம்பை நீர் வழிபாதை (டணல்) பணி முடியும் நிலையை எட்டி விட்டது.

கட்டன் மலை நீர் வழி பாதை, நீர் எடுப்பு பணி (திட்ட மதிப்பீடு 19.93 கோடி ரூபாய்) 90 சதவீதம் முடிந்தது. ராமகிருஷ்ணாபுரத்தில் 30 லட்சம் நீர் தேக்க கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இந்த பணி 80 சதவீதம் முடிந்து விட்டது.

மேலும், குடிநீர் பிரதான குழாய் பதிப்பு பணி, ரயில் பாதை வழியாக மண் உந்துதல் முறை (டிரன்ச்லெஸ் மெத்தட்) குழாய் பதிப்பு பணி நடக்கிறது. இதனை அமைச்சர், மேயர், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " பில்லூர் 2வது குடிநீர் திட்ட பணிகள் மொத்தமாக 80 சதவீதம் முடிந்தது.

மார்ச் இறுதி வாரத்தில் குடிநீர் பணிகள் நிறைவடை யும். நீர் சேகரிப்பு கிணறு தோண்டும் பணி துவங்க தாமதமாகி விட்டது. இந்த பணி விரைவாக முடியும் என நினைக்கிறோம்.

பணி முடிந்ததும், மார்ச் இறுதி வாரம் குடிநீர் விநி யோகம் செய்யப்படும். தின மும் 6.5 கோடி ரூபாய் குடிநீர் மாநகர் பகுதிக்கு தடையின்றி வழங்கப்படும். இதற்காக பில்லூர் அணை யில் 3 மெகா மின் மோட்டார் அமைக்கப்படும்.

24 மணி நேரமும் குடிநீர் பெறப்படும். இதுவரை நகரில் 4 நாளுக்கு ஒரு நாள் குடிநீர் என்ற நிலையிருக்கிறது.

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் குடிநீர் வழங்கப்படும். குடிநீர் பற்றாக்குறை நிலை ஏற்படாது, " என்றனர்.

 


Page 147 of 390