Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கல் : கலெக்டர் அலுவலகத்துக்கு மாநகராட்சி அனுமதி

Print PDF

தினமலர்                 29.10.2010

நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கல் : கலெக்டர் அலுவலகத்துக்கு மாநகராட்சி அனுமதி

சேலம் : சேலம் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க மாநகராட்சி ஒப்புதல் அளித்துத்துள்ளது. சேலம் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த வளாகத்தில் 52 அரசுத்துறைகள் செயல்பட உள்ளன. இங்கு பணியாற்றும் 3,000 பேரின் குடிநீர் தேவைக்காக பிரதான குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டிருந்தனர். டிபாஸிட் தொகையாக ஒரு இணைப்புக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டு இணைப்புக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும், மீட்டர் கணக்கீட்டு அடிப்படையில், ஒவ்வொரு குடிநீர் குழாய் இணைப்புக்கு 1,000 லிட்டர் அளவு நீருக்கு ஐந்து ரூபாய் வீதம் நிர்ணயம் செய்து நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது. நேற்று நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று, சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு மேட்டூர் குடிநீர் திட்டம் வழியோரக் கிராமம் மூலம் குடிநீர் வழங்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரியிருந்தனர். மாநகராட்சி நிர்வாகம், செவிலியர் கல்லூரிக்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் வீதம் மீட்டர் கணக்கீடு செய்து வழங்கவும், 1,000 லிட்டருக்கு 20 ரூபாய் வீதம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

"பில்லூர் 2வது திட்ட குடிநீர் கோவைக்கு மார்ச்சில் வழங்கப்படும்':அமைச்சர் பழனிசாமி தகவல்

Print PDF

தினமலர்            29.10.2010

"பில்லூர் 2வது திட்ட குடிநீர் கோவைக்கு மார்ச்சில் வழங்கப்படும்':அமைச்சர் பழனிசாமி தகவல்

மேட்டுப்பாளையம்: ""பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டப்பணிகள் முடித்து, அடுத்தாண்டு மார்ச்சில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என, அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர புனரமைப்பு திட்டத்தில், கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆறு பகுதிகளாக (ஸ்டேஜ்) பிரித்து டெண்டர் விடப்பட்டு, 2008ம் ஆண்டு பணிகள் துவங்கின. பில்லூர் அணை அருகே நெல்லிமரத்தூரில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் மலை குகை நுழைவு வரை நீரேற்று பிரதான குழாய் அமைக்கப்படுகிறது. பெரிய கோம்பை மலை குகையிலிருந்து வெள்ளியங்காடு நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டன; 10 மீட்டருக்கு இரண்டு குழாய்களை இணைக்கும் பணிகள் மட்டும் நடைபெற உள்ளது. வெள்ளியங்காட்டில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அங்கிருந்து கட்டாஞ்சி மலை குகை வரை 23.78 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் செல்லும் பிரதானக் குழாய் அமைக்கப்பட்டது.

கட்டாஞ்சி மலையிலிருந்து ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைத் தொட்டி வரை, குடிநீர் செல்லும் பிரதான குழாய் 14.24 கி.மீட்டருக்கு பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 8.57 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ராமகிருஷ்ணாபுரத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பில்லூர் அணைப்பகுதியில் நடைபெறும் கிணறு தோண்டும் பணிகளையும், வெள்ளியங்காட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அமைச்சர் பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, கண்காணிப்பு பொறியாளர் பூபதி, துணை மேயர் கார்த்திக் உட்பட மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் குழுவினர் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு மட்டும் "ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தில்' 113.74 கோடியில், தனியாக பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் மானியமாக வழங்குகிறது. மாநகராட்சி 30 சதவீதம் தொகையை போட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பணி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆனதால், திட்ட மதிப்பீடு 140 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில் வனத்துறையிடம் இருந்து 1.83 ஹெக்டர் நிலம் வாங்கி அதில் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கு பதிலாக இரண்டு மடங்கு இடம் வருவாய்த்துறையிடம் விலைக்கு வாங்கி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதியில் குடியிருந்து வரும் 11 ஆதிவாசி குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப, நீரேற்று நிலைத்தில் வேலை வழங்கப்படும். குழாய்கள் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என்றனர்.அமைச்சர் பழனிசாமி கூறுகையில்,"" பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளன. அடுத்தாண்டு மார்ச்சில் திட்டம் முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். விரைந்து பணிகளை முடிக்கும்படி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

 

சென்னை குடிநீர் வாரியத்தில் விரைவில் குறுந்தகவல் சேவை

Print PDF

தினமணி                28.10.2010

சென்னை குடிநீர் வாரியத்தில் விரைவில் குறுந்தகவல் சேவை

சென்னை, அக்.27: சென்னை குடிநீர் வாரியத்தில் குறுந்தகவல் சேவை உபயோகத்துடன் புகார் கண்காணிப்பு அமைப்பு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி வெளியிட்ட செய்தி:

சென்னை குடிநீர் வாரியம் 2007-ம் ஆண்டு முதல் ஆன்லைன் புகார் பிரிவினை செயல்படுத்தி வருகிறது. இப்போது குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்.) பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் புகார் பற்றிய தகவலை தொலைபேசி மூலமாக பதிவு செய்தவுடன், சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து குறுந்தகவல் சேவை வாயிலாக புகாரினை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும், அதற்கு உண்டான எண்ணையும் பெற முடியும்.

 


Page 148 of 390