Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பங்களிப்பு ரூ3.40 கோடி

Print PDF

தினகரன் 21.10.2010

தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் மக்கள் பங்களிப்பு ரூ3.40 கோடி

கரூர், அக்.21. தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் திட் டத்திற்கு நகராட்சி, பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ3.40கோடி செலுத்தப்பட உள்ளது. தாந்தோணி நகராட்சியின் மக்கள் தொகை 61,963. மக்கள் தொகையானது 2025ம் ஆண்டில் 83,000 மாகவும், 2040ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் என புள்ளி விவரங்களின்படி எதிர்பார்க்கப்படு கிறது. தற்போது தாந்தோணி நகராட்சிக்கு காவிரி குடிநீர் கட்டளை நீர்உறிஞ்சு நிலையத்தில் இருந்து நாள்ஒன்றுக்கு 4.22 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொ ண்டு புதிய குடிநீர் திட்டம் ரூ25.16 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்காக நகராட்சி பகுதியில் 7இடங்களில் ஒரு லட்சம் மற்றும் ஒன்னரை லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளன. ஏற்கனவே, நகராட்சியில் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் அளவு 13.50லட்சம் லிட்டர். புதிதாக அமைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கொள்ளளவு 47லட்சம் லிட் டர். சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துவதற்காக 14குடிநீர் விநியோக பகுதிகள் என பிரிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின்கீழ் திண்ணப்பா நகர் பகுதியில் 10லட்சம் லிட்டர், காந்திகிராமம், செல்லாண்டிபாளையம், தோரணக்கல்பட்டி பகுதியில் தலா 5லட்சம் லிட்டர், மூலக்காட்டானூரில் ஒருலட்சம் லிட்டர் கொள்ளளவிலும் கட்டப்பட உள்ளது. புதிய குடிநீர் திட்டத்திற்கு, நகர்ப்புற நிதியகம் சென்னை (டிஎன்யுடிஎப்) குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை நடைமுறைப்படுத்தி திட்டப்பணியை செயல்படுத்தவும், பெறப்படும் கடன் தொகையினை திருப்பி செலுத்த விதிகள் நிபந்தனைகளை தெரிவித்துள்ளது. நகராட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ3.40கோடி செலுத்தப்பட இருக்கிறது. இத்தொகையை செலுத்துவதற்கு தாந்தோணி நகர்மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு சின்னாறு குடிநீர் திட்டத்தில் பென்னாகரம் மக்கள் மகிழ்ச்சி

Print PDF

தினகரன் 21.10.2010

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு சின்னாறு குடிநீர் திட்டத்தில் பென்னாகரம் மக்கள் மகிழ்ச்சி

பென்னாகரம், அக்.21: சின்னாறு குடிநீர் திட்டத்தின் கீழ், பென்னாகரம் மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வற்றாத ஜீவ நதியான காவிரி ஆறு பாய்ந்தாலும் 16 கி.மீ. தொலைவில் உள்ள பென்னாகரம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தனர். கோடை காலங்களில் குடம் தண்ணீர் ரூ.2க்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சின்னாறு குடிநீர் திட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக

ரூ4.99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் இந்த குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து பொதுகுழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு சின்னாறு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பென்னாகரம் மணியகாரத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வீரமணி, பச்சியப்பன், ஷாஜகான், வையாபுரி, பாரதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பென்னாகரம் இன்பசேகரன் எம்.எல்.. கலந்து கொண்டு வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது அனிபா, தலைமை எழுத்தர் பெருமாள், பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் தி.மு.. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விண்ணப்பித்த அனைவருக்கும் படிப்படியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கடும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வந்த பென்னாகரம் மக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு கிடைப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னாறு குடிநீர் திட்டத்தின் கீழ், பென்னாகரம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இன்பசேகரன் எம்.எல்.. குடிநீர் குழாயை திறந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

 

வள்ளியூரில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன் 21.10.2010

வள்ளியூரில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் குடிநீர் இணைப்பு பணி துவக்கம்

வள்ளியூர், அக். 21: வள்ளியூர் சிறப்பு நிலை பேருராட்சி நெல்லை மாவட்டத்தில் உள்ள அதிக வருமா னம் வரக்கூடிய பெரிய பேரூராட்சிகளில் ஒன்றாகும். இங்கு கடந்த 1977ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நம்பியாறு திட்டத்தின் மூலம் 2400 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 33 ஆண்டுகளாக வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. வள்ளியூர் பேரூராட்சியில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளும் சுமார் 35 ஆயிரம் மக்களும் உள்ள னர். இங்கு தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம், கொடுமுடியாறு குடிநீர் திட்டம், உள் ளூர் குடிநீர் திட்டமான நம்பியான்விளை ஆழ்குழாய் கிணறு, ஊற்றடி ஆழ்குழாய்கிணறு மற்றும் 60க்கும் மேற் பட்ட சிறியகுடிநீர் திட்டங்க ளும் நிறைவேற்றப்பட்டுள் ளன.

புதியதாக 1500 வீட்டு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காகவே கடந்த 2003ம் ஆண்டு ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் கொடுமுடியாறு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வள்ளியூர் நகருக்குள் கொண்டு வரமுடிந்தது. இதனை தொடர்ந்து வள்ளியூர் நகரம் முழுவதும் சிறப்பு பொதுநிதியிலிருந்து குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து வள்ளியூர் பேரூராட்சி தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், "வள்ளியூரில் தற்போது தெருக்களில் குடிநீர் குழாய் கள் அமைப்பதற்காக நம்பி யான் விளை என்ற இடத்திலிருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டள்ளது. இங்கு நல்ல குடிதண்ணீர் ஆதாரம் இருப்பதால் சுமார் 600 பொது குடிதண்ணீர் குழாய்கள் தெருக்களில் அமைக்க பணி கள் தற்போது நடைபெறுகி றது. பணிகள் முடிந்தவுடன் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பேருராட்சி அலுவலகத் தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். கட்டணங்கள் வங்கிகளில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வள்ளியூரில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மர்மம் என்ன?

1977ம் ஆண்டு 6 லட்சம் கொள்ளளவுள்ள நீர்தேக்க தொட்டி மூலம் வள்ளியூரில் 2400 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு வள்ளியூரில் கட்டப்பட்ட ஏராளமான நீர்த்தேக்க தொட்டி மூலம் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இதன் மூலம் வள்ளியூரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க போதிய நீர் ஆதாரம் உள்ளது. மேலும் தற்போது நம்பியான் விளை ஒட்டிய குளக்கரையில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க ஏதுவாக 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதனால் போதுமான நீர் ஆதாரம் வள்ளியூரில் இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டு காலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்காததின் மர்மம்தான் யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.

Last Updated on Thursday, 21 October 2010 08:42
 


Page 152 of 390