Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாய் வழி இணைப்புகளால் தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை

Print PDF

தினமலர் 30.09.2010

குடிநீர் குழாய் வழி இணைப்புகளால் தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை

தொண்டி : "தொண்டி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் வழிகளில் 32 இணைப்புகள் கொடுக்கபட்டதால், தொண்டிக்கு குடிநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது ,'என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடந்தது. துணைதலைவர் தியாகராஜன், செயல்அலுவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டனர். கவன்சிலர்கள் விவாதம்:

அயூப்கான்: தொண்டி மருத்துவமனை ,வெள்ளைமணல் தெரு சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

செயல்அலுவலர்: தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும்.

தலைவர்: காவிரி நீர் வராததால் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

செயல்அலுவலர்: பேரூராட்சி சார்பில் கொடுக்கபட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் பலர் கட்டண தொகை செலுத்தாமல் உள்ளனர்.

ராஜகோபால்:குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டியுங்கள் .
அயூப்கான்: மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.

காளிதாஸ்: மின்வாரிய அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அலுவலரிடம் புகார் செய்தபோது, நான் அ. தி.மு..,வை சேர்ந்தவன். முடிந்ததை பார்த்து கொள் என்கிறார்.

செயல்அலுவலர்: வாரம்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கபடும்.

சவுந்தரபாண்டியன்:திருவாடானை அருகே கோவனி, ஆட்டூர் கிராமத்திலிருந்து தொண்டி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தபடுகிறது. இதற்கு வரும் வழிகளில் குழாயை துண்டித்து அதிகாரிகளின் துணையுடன் 32 இடங்களில் குடிநீர் இணைப்பு வழங்கபட்டுள்ளது. இவ்வளவு இணைப்பு இருந்தால் தொண்டிக்கு எப்படி தண்ணீர் வரும்.

செயல்அலுவலர்: நடவடிக்கை எடுக்கபடும்.

ரேவதி: வெள்ளைமணல் தெரு வாறுகாலில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றமாக உள்ளது.

செயல்அலுவலர்: இறைச்சி கடைகளில் இருந்து கொட்டபடும் கழிவுகளை அகற்றபடும்.

தலைவர்: பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இருந்தால் தான் கவுன்சிலர்கள் குறைகளை கூற முடியும். அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல்அலுவலர்: இனி வரும் கூட்டங்களில் அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வலியுறுத்தபடும்,என்றார்

 

குடிநீர் வினியோகம் நகராட்சி தலைவி உறுதி

Print PDF

தினகரன் 29.09.2010

குடிநீர் வினியோகம் நகராட்சி தலைவி உறுதி

கூடலூர், செப்.29: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஐயன்காவு பகுதியில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இப்பகுதி மக்கள் நேற்று கூடலூர் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடந்த வந்தனர்.

தங்கள் பகுதியில் கிணறு, பம்ப், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர பொருத்துனர் இல்லாததால் அடிக்கடி குடிநீர் வினியோகம் தடைபட்டது. தற்போது பணியாற்றி வருபவர் கடந்த 1 மாதமாக விடுப்பில் சென்று விட்டார். இதனால் குடிநீர் வினியோகம் சரி செய்யப்படவில்லை. அன்றாட குடிநீர் தேவைக்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிரந்தர பொருத்துனரை நியமிக்க கோரி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். கூடலூர் நகராட்சி தலைவர் அன்னபுவனேஸ்வரி பேச்சு நடத்தினார்.

அப்போது குடிநீர் பிரச்னை குறித்து இதுவரை புகார் வரவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் போராட்டம் நடத்த தேவையில்லை என்றார். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

Print PDF

மாலை மலர் 24.09.2010

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்: இந்த வாரம் திறப்பு

சென்னை, செப். 24- சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். 2009-10-ம் ஆண்டுக்காக 7 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு வந்தது. மீண்டும் இந்த வாரத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வரை உள்ள கிருஷ்ணா கால்வாயின் மொத்த நீளம் 152 கிலோ மீட்டர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து இந்த கால்வாய் மூலம் திருப்பதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்து சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் வர 4 நாட்கள் ஆகும். தற்போது திருப்பதிக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளதால் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் வந்துவிட்டது.

எனவே, தற்போது சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை திருப்பிவிட்டால் 2 நாட்களுக்குள் ஊத்துக் கோட்டையில் உள்ள தமிழக எல்லைக்கு வந்துவிடும். அங்கிருந்து 25 கிலோ மீட்டர் கால்வாய் மூலம் பூண்டி ஏரியை வந்தடையும்.

இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 1306 மில்லியன் கனஅடியும், சோழவரத்தில் 373 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 1347 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம் பாக்கத்தில் 1599 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருக்கிறது.

இது தவிர வீராணம் ஏரியில் 763 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

இதன் மொத்த இருப்பு கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த தண்ணீரை விட 2500 மில்லியன் கனஅடி அதிகம். கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரிகளின் நீர்மட்டம் மேலும் உயரும். சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு குடிநீர் உள்ளது. தினமும் 660 மில்லியன் குடிநீர் "சப்ளை" செய்யப்படுகிறது.

 


Page 161 of 390