Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்! மாநகராட்சியில் தொடரும் அலட்சியம்

Print PDF

தினமலர் 22.09.2010

தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீண்! மாநகராட்சியில் தொடரும் அலட்சியம்

சேலம்: சேலம் மாநகரத்தில் மக்கள் குடிநீர் இன்றி அவஸ்தைபடும் இந்த நேரத்தில் யாருக்கும் பயன்படாமல் தினம்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலக்கும் அவலம் நடந்து வருகிறது.சேலம் மாநகராட்சிக்கு நங்கவள்ளி குடிநீர் திட்டம், ஆத்தூர் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டம் மூலம் மாநகர மக்களுக்கு தினம்தோறும் 750 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சேலம் மாநகரத்தில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி சார்பில் மொத்தம் 84 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் வசிக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 120 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு நபருக்கு 70 முதல் 80 லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.ஏற்கனவே மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளாலும், பல வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்குமேல் குடிநீர் விநியோகம் செய்து வருவதாலும் மாநகராட்சிக்கு கிடைக்கவேண்டிய வருமானம் குறைந்தும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காமலும், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை சேலத்தில் தலைவிரித்தாடி வருகிறது.

தினம் தோறும் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிரச்னையால் மக்கள் பொறுமையிழந்து காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் வாரத்துக்கு மூன்று போராட்டங்கள் குடிநீர் பிரச்னையை மையமாக வைத்து நடக்கிறது. .தி.மு.., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பின் பேரில் கடந்த மாதம் அ.தி.மு.., சார்பில் சேலம் மாநகராட்சி குடிநீர் பிரச்னை குறித்து பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சேலம் திருமகள் பைபாஸ் லாரி அசோசியேஷன் பங்க் அருகில் இருக்கும் குடிநீர் பைப்பின் கேட் வால்வு உடைந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது.உடைந்த இந்த கேட் வால்வில் இருந்து மிக அதிகமாக குடிநீர் எந்நேரமும் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

வெளியேறும் குடிநீரை அந்த பகுதி மக்கள் பிடித்துச்செல்கின்றனர்.இந்த பகுதியில் நாமக்கல், சங்ககிரி பகுதியில் இருந்த வெளிமாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கிறது. அவர்கள் இந்த பகுதியில் லாரிகளை நிறுத்திவிட்டு துணிகள் துவைத்தும், குளித்துவிட்டும் செல்கின்றனர். இந்த குடிநீர் பைப் நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கேட் வால்வு உடைந்து பல ஆண்டுகள் ஆகியும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் இன்னும் சரிசெய்யப்படவில்லை.இப்படி குடிநீர் பைப் உடைந்து சாக்கடையில் கலந்து வருவதை பலமுறை படத்துடன் சுட்டிக்காட்டியும் கூட அதிகாரிகள் விழித்துக்கொள்ளவில்லை. அதைப்பற்றி மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, தண்ணீரின் மதிப்பை அறிந்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தாமதிக்காமல் சரிசெய்ய வேண்டும்.

 

முக்கிமலை கிராம மக்களுக்கு நீர் இணைப்பு : பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி

Print PDF

தினமலர் 21.09.2010

முக்கிமலை கிராம மக்களுக்கு நீர் இணைப்பு : பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி

மஞ்சூர் : ""முக்கிமலை கிராம மக்களுக்கு, விரைவில் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்,'' என, செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார்.

பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிமலை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தை சேர்ந்த சிலர், வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வேண்டி, 1997ம் ஆண்டு விண்ணப்பம் அளித்து 700 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தினர்; இதுவரை தண்ணீர் இணைப்பு வழங்கவில்லை. இப்பகுதியை சேர்ந்த சுகுமாறன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டு மனு அனுப்பினார்.

மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, இணைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இரு மாதங்களுக்கு முன், தண்ணீர் இணைப்புக்காக 2,650 ரூபாய் டெபாசிட் தொகை, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்பட்டது; இதுவரை வழங்காததால், கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டத்தில், செயல் அலுவலர் ஜெயராமிடம், விண்ணப்பித்தவர்கள் விளக்கம் கேட்டனர்.

செயல் அலுவலர் ஜெயராம் கூறுகையில், ""தண்ணீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த முக்கிமலை கிராம மக்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இணைப்பு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

 

27ம் தேதி புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்

Print PDF

தினமலர் 21.09.2010

27ம் தேதி புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சிக்கு வரும் 27ம் தேதி அன்று மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் ஒப்புதல் பெற்று புதிய குடிநீர் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியில் காலாவதியான பைப்லைன் திட்டத்தை கொண்டு ஏறக்குறைய ஒரு லட்சம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி எதிர்கட்சிகள் சார்பில் குடிநீர் திட்டத்திற்கான 80கோடி நிதியை ஒதுக்கீடு செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தை மா.கம்யூ., நகரச் செயலாளர் சீனிவாசன் துவக்கினார். தற்போது உண்ணாவிரதம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. இதில் கோவில்பட்டி தாசில்தார் கந்தசாமி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் உண்ணாவிரத பந்தலில் சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 27ம் தேதி குடிநீர் நிதி ஒதுக்கீடு அறிவிப்பதாகவும், அதையும் மாநில நகராட்சி நிர்வாகம் தான் அறிவிக்க இயலும் என்றும், அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாகவும், எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வழங்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகராட்சிகளின் நெல்லை மண்டல நிர்வாக இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோ வில்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்தை வரும் 27ம் தேதி அன்று மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் ஒப் புதல் பெற்று புதிய குடிநீர் திட்டம் ஏற்றுக் கொள்ளப் படஉள்ளது என்று அதிகா ரிகள் தெரிவித்தனர். இதை யனைடுத்து உண்ணாவிர தம் போராட்டம் வாபஸ் பெறபட்டது.

 


Page 164 of 390