Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.22.75 கோடியில் புதிய குடிநீர்திட்டம்: நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF

தினமலர் 15.09.2010

ரூ.22.75 கோடியில் புதிய குடிநீர்திட்டம்: நகராட்சி சேர்மன் தகவல்

திருச்செங்கோடு: ""திருச்செங்கோடு நகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 22.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, நகராட்சி சேர்மன் நடேசன் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:திருச்செங்கோடு நகராட்சி 25.2 சதர கி.மீ., பரப்பளவு கொண்டது. 33 வார்டுகள் கொண்ட இங்கு ஒரு லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்திருந்தும் குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. வார்டுகளுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யமுடியாத நிலையில், பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்.

நகராட்சி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 22.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு நிதிஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டம் காவிரி ஆற்றில் சமயசங்கிலி தடுப்பணையில் துவங்கி ஆவத்திபாளையம், கருமாபுரம் வழியாக திருச்செங்கோட்டில் முடிகிறது.நகரில் சந்தைப்பேட்டையில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும், சண்முகாபுரம், அம்பேத்கார் நகர் மற்றும் வாலறைகேட் ஆகிய இடங்களில் தலா ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் அமைக்கப்படுகிறது. நகரில் உள்ள 33 வார்டுகளிலும் 92.33 கி.மீ., நீளத்திற்கு புதிய குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கப்படுகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் திருச்செங்கோடு நகராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.நகராட்சி கமிஷனர் இளங்கோவன், பொறியாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மழையால் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

Print PDF

மாலை மலர் 14.09.2010

மழையால் நீர்வரத்து குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

மழையால் நீர்வரத்து
 
 குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு 
 
 கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம்

சென்னை, செப்.14- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு அவ்வப்போது தணணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று இரவு பெய்த மழையால் ஏரிகளுக்கு மீண்டும் தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 9.4 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. செங்குன்றத்தில் 1 மி.மீ., சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் பகுதியில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது. வீராணத்தில் 12.2 மி.மீ. மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 58 கன அடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 140 கன அடியும், சோழவரத்துக்கு 185 கனஅடியும், செம்பரம் பாக்கத்துக்கு 93 கனஅடியும் வருகிறது. வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1300 வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 755 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 454 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த தண்ணீரை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. என்றாலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20அடி. இன்றைய நீர்மட்டம் 11.11 அடி. பூண்டி ஏரியின் இன்றைய நீர்மட்டம் 27.90 அடி. இதன் மொத்த உயரம் 35 அடி. சோழவரம் ஏரி உயரம் 17.86 அடி. இன்றைய நீர்மட்டம் 9.14 அடி. செம்பரம்பாக்கத்தில் தற்போதைய நீர்மட்டம் 15.79 அடி. மொத்த உயரம் 24 அடி. வீராணம் ஏரியில் இன்று காலை நீர்மட்டம் 12.20 அடி. இதன் மொத்த உயரம் 15.60 அடி.

தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பருவமழையும் தொடங்க இருக்கிறது. எனவே ஏரிகள் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது என்று குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஏரிகள் நிரம்பி வழிந்து வீணாக கடலில் கலக்கும் உபரி தண்ணீரை சேமிக்க மும்பை மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 14.09.2010

ஏரிகள் நிரம்பி வழிந்து வீணாக கடலில் கலக்கும் உபரி தண்ணீரை சேமிக்க மும்பை மாநகராட்சி திட்டம்

மும்பை, செப்.14: மும்பை ஏரிகளில் நிரம்பி வழிந்து தினசரி கடலில் கலக்கும் லட்சக்கணக்கான லிட்டர் கூடுதல் மழைநீரை சேமித்து வைப்பது குறித்து மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கூடுதல் தண்ணீரை எப்படி சேமிப்பது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி அதிகாரிகளை மாநகராட்சி கமி ஷனர் சுவாதீன் ஷத்திரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷத்திரியா இது குறித்து கூறுகையில், "நகரில் உள்ள மூன்று ஏரிகளில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது. இதை சேமிப்பது அவசியம்Ó என்றார்.

துள்சி மற்றும் பவாய் ஆகிய இரண்டு ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பி விட்டன. தற்போது அவை நிரம்பி வழிந்து கொண்டி ருக்கின்றன. துள்சி ஏரியில் இருந்து மும்பை நகருக்கு தினசரி 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை ஆகிறது. மற்றொரு ஏரியான விஹார், கிழக்கு புற நகரில் உள்ள குர்லா, கலீனா மற்றும் பவாயின் ஒரு சில பகுதிகளுக்கு தினசரி 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்கிறது. இது தவிர தொழிற்சாலைகளுக்கும் தண் ணீர் சப்ளை செய்கிறது.

பவாய் ஏரியின் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் உபரி நீரை சேமித்தால் அதை குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஏரிகளில் உபரி நீரை சேமித்து வைப்பது கஷ்டமான காரியம்தான் என்ற போதிலும் அது சாத்திய மானது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

எனினும் பவாய் ஏரியை சுற்றிலும் குடியிருப்பு கட்டி டங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஏரியில் உபரி நீரை சேமித்து வைப்பது கடினம் ஆகும். அப்படி செய்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதே சமயத்தில் விகார் மற்றும் துள்சி ஏரிகளின் உயரத்தை 4 முதல் 5 அடி வரை அதிக ரித்து தண்ணீரை தேக்கி வைக்கலாம் என குடிநீர் சப்ளை நிபுணர் ஆனந்த் தேவ் தார் கருத்து தெரிவித்துள்ளார்.

 


Page 166 of 390