தினமணி 02.09.2010
30 கோடி குடிநீர் திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றி
உடுமலை,செப்.1: உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகரில் ரூ30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதன்கிழமை நடந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது. (படம்)
÷உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் என 3 ஒன்றியம், சங்காரமநல்லூர், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் என 4 பேரூராட்சிகள் இவற்றுக்குள் அடங்கிய 112 கிராமங்களுக்கு ரூ| 30 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்ப டுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. 2009 மார்ச் மாதம் பணிகள் துவங்கின. 2010 செ ப்டம்பரில் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
÷இதன்படி திருமூர்த்தி அணை தளி வாய்க்காலில் இருந்து 36 கி.மீ. தொலைவில் ஒன்றிய, பேரூராட்சிப் பகுதிகளுக்கும், 93 கி.மீ. ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 9 நீருந்துகள் (பழைய 5 நீரூந்துகளையும் சேர்த்து), ஏற்கெனவே உள்ள மேல்நிலைத் தொட்டிகள், புதிதாகக் கட்டப்பட உள்ள 5 மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக பதிக்கப்பட உள்ள 29 கி.மீ. நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் இந்தக் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
÷இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புதன்கிழமை கூறியது:
இது வரை 95 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. செப்டம்பர் இறுதிக்குள் அனை த்துப் பணிகளையும் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று சோதனை வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் தளி கால்வாயில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் அதிநவீன மோட்டார்களின் செயல்பாடுகள் சோத னை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கும், மேல் நிலைத் தொட்டிக்கும் தண்ணீர் செல்லும் பாதைகளும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றனர்.
÷மடத்துக்குளம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ப.கா.ரங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.எம்.முபாரக் அலி, மாரி முத்து உள்ளிட்ட பலர் இந்த சோதனை ஓட்டத்தை பார்வையிட்டனர்.