Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கம்பம் நகராட்சியில் பராமரிப்பில்லா குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்

Print PDF

தினகரன் 31.08.2010

கம்பம் நகராட்சியில் பராமரிப்பில்லா குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்

கம்பம், ஆக. 31: கம்பம் நகராட்சியில் குடிநீர் தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் விநியோ கம் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கம்பம் நகராட்சியில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக அடிகுழாய்களுக்கு பதிலாக மின்மோட்டார் பம்புகள் அமைக் கும் பணி நடந்தது. நீர்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட்டது.

நகரில் 204 அடிகுழாய்களில், 105ல் மின் விசை பம்புகள் பொறுத்தப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கள் அமைக்கப்பட்டது.

இதில் பெரும்பாலனவை தற்போது பழுதடைந்துள்ளன. 30வது வார்டு, ஆங்கூர்பாளையம் சாலை, விவேகானந்தர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், மின்மோட்டார் பழுதடைந்தது. பல நாட்களாகியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் நீர்தேக்க தொட்டி பயன்பாடு இல்லா மல் உள்ளது.

பகுதிவாசி முருகன் கூறுகையில், ``விவேகானந்தர் தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பல நாட்களாக தண்ணீர் விநியோ கம் இல்லை.

தண்ணீர் குழாய்களும் சேதமடைந்துள்ளது. நகராட்சி ஊழியர்கள் சரிவர பராமரிப்பு பணியை மேற்கொள்வதில்லை. புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாக ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கந்தசாமி கூறுகையில், ``நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் செயல்படாமல் உள்ளன. பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பழுதான மின்மோட்டார்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.

 

அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்து தான் குன்னூருக்கு குடிநீர் எடுக்க வேண்டும் கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டம்

Print PDF

தினகரன் 30.08.2010

அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்து தான் குன்னூருக்கு குடிநீர் எடுக்க வேண்டும் கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டம்

குன்னூர், ஆக.30: கன்டோன்மென்ட் நிர்வாகம் குறிப்பிடும் பகுதியில் இருந்து தான் குன்னூர் நகராட்சிக்கு தேவையான குடிநீர் பெற்று கொள்ள அனுமதிக்கப்படும் என்று கன்டோன்மென்ட் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டமும், மாதாந்திர கூட்டமும் அதன் தலைவர் பிரிகேடியர் ஜாதவ் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி அவஸ்தி முன்னிலை வகித்தார். குன்னூர் ஆர்.டி.ஓ ராஜூ, கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் பாரதியார் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

நடப்பாண்டு ரூ.7 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரத்து 351 வரவாக உள்ளது. பற்றாக்குறை ரூ.31 கோடியே 62 லட்சத்து 99 ஆயிரத்து 577 ஆக உள்ளது. மத்திய ராணுவ அமைச்சகத்திடம் ரூ.39 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 928 கோடி நிதி பட்ஜெட்டிற்காக கோரப்பட்டுள்ளது. இதனை தென்னக ராணுவ முதன்மை அதிகாரிக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் கூட்டம் நடைபெற்றது. குன்னூர் நகர மக்களுக்காக ஜிம்கானா குடிநீர் ஊற்று பகுதியில் தடுப்பணை கட்டி நீர் எடுக்க முடிவு செய்தது. இதற்கு கன்டோன்மென்ட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குறிப்பிட்ட இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் நகராட்சி நிர்வாகம் வேறு இடத்தை தேர்வு செய்தது. இப்பகுதியிலுள்ள 3 இடங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சோதனை செய்யப்பட்டது. அதில் கிடைக்க பெற்ற அறிக்கை ஒரே மாதிரியாக இருந்தது. எனவே கன்டோன்மென்ட் நிர்வாகம் கூறும் பகுதியில் தான் நகராட்சி குடிநீர் எடுக்க வேண்டும் என்று கன்டோன்மென்ட் தலைவர் தெரிவித்தார்.

ஆர்.டி.ஓ ராஜூ கூறும் போது, கன்டோன்மென்ட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ள பகுதியில் கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.

தலைவர்:

அதனை நீங்கள் தான் சுத்திகரித்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட கலெக்டரிடம் பேசி கொள்ளலாம்.

வினோத்(திமுக):

மாநில அரசு சார்பில் கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு எந்த விதமான நிதியும் ஓதுக்கீடு செய்யப்படுவதில்லை. வரும் காலங்களிலாவது நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

ஆர்.டி.:

உங்கள் கோரிக்கை விவகாரம் தனி. குடிநீர் பிரச்னை தனி. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய முடிவு எடுப்பார்.

வினோத்(திமுக):

குடிநீர் பிரச்னைக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் 7 முறை பேச்சு நடத்தினர். ஆனால் கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பது வருந்ததக்கது.

கன்டோன்மென்ட் நிர்வாகம் வசூலிக்க முற்பட்ட நுழைவு வரி வசூலையும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

துணை தலைவர் பாரதியார்:

கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் வருவாயை பெருக்க கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் கலெக்டர் நேரடியாக தடை விதிக்க இயலாது. தனது கருத்தை 56/2வது சட்ட விதிகளின்படி மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்யலாம்.

இப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பள்ளிகள் 2 உள்ளது. அதில் புதிய கட்டிடம் கட்டும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வழி கல்வி பள்ளிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரும், ஆங்கில வழி பள்ளிக்கு மானெக்ஷா பெயரும் வைக்க வேண்டும்.

தலைவர்: புதிய கட்டிடம் கட்டப்பட்டு இதற்கான திறப்பு விழா நடைபெறும் போது உங்கள் கோரிக்கைப்படி பெயர் வைக்கப்படும்.

கடந்தாண்டு நவம்பரில் செய்த கன மழையால் பெருத்த சேதம் கன்டோன்மென்ட் பகுதியில் ஏற்பட்டது. மாநில அரசு சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. எனவே கிர்க்கி கன்டோன்மென்ட் நிர்வாகத்தில் ரூ.2 கோடி கடன் கோரப்பட்டது. 12 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க கிர்க்கி நிர்வாகம் ஒப்பு கொண்டது. ஆனால் வட்டியின்றி கடன் வழங்க வேண்டும் என்று கிர்க்கி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்க வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றிட முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் புஷ்பராஜ், மார்டின், சிவக்குமார், லலிதா, ஸ்ரீதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

 

தென்மேற்கு பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

Print PDF

மாலை மலர் 27.08.2010

தென்மேற்கு பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

சென்னை, ஆக. 27- சென்னையில் மழை நீர் சேகரிப்பை அதிகப்படுத்த தற்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் பயனாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் பூமி குளிரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு பொதுவாக தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழை சீசனில்தான் அதிக மழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். தென் மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

இந்த சீசனில் பொதுவாக சென்னையில் சுமாரான மழை அளவு கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை சீசனில் சென்னையில் ஓரளவு மழை பெய்தது. சமீப காலமாக மழை அளவு அதிகரித்தது.

தொடர்ச்சியாக பெய்த நல்ல மழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் திருப்தி அடையும் வகையில் உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஜூன் மாதம் நிலத்தடி நீர்மட்டம் அளவு 3.5 மீட்டராக இருந்தது. கடந்த மாதத்தில் இருந்து பெய்த மழை காரணமாக சென்னையில் சராசரியாக 0.2 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதை மேலும் அதிகரிக்க செய்ய சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்த மாதம் 17-ந்தேதி இந்த பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டப்படி பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தால் சென்னையில் மழைநீர் சேகரிப்பை 100 சதவீதம் வெற்றியாக்கலாம். அனைத்துக்கட்டிடங்களிலும் முறையான மழைநீர் சேகரிப்பு செய்யும்பட்சத்தில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இப்போதே கட்டமைப்புகளை சீரமைப்பதால் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் வட கிழக்கு பருவமழை சீசனில் கூடுதல் மழை நீர் சேகரிப்பை பெற முடியும். இதற்கிடையே புறநகரில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது பூண்டி ஏரியில் 1,225 கனஅடி, சோழவரம் ஏரியில் 261 கனஅடி, செங்குன்றம் ஏரியில் 1,452 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 1,759 கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே சீசனில் இந்த ஏரிகளில் மிகக் குறைவான தண்ணீரே இருந்தது.

கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் சென்னை, மற்றும் புறநகர் களில் 20 சதவீதம் அளவுக்கு கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதனால்தான் சென்னை குடிநீர் ஏரிகளில் திருப்திகரமான அளவுக்கு தண்ணீர் இருப்பு கிடைத்துள்ளது.

 


Page 174 of 390