தினகரன் 27.08.2010
மார்ச் 2011 இறுதிக்குள் பில்லூர் திட்டம் முடிவுக்கு வரும் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கோவை, ஆக. 27: பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மார்ச் 2011க்குள் நிறைவு பெற்றுவிடும் என மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர் ராஜ்குமார் பேசுகை யில், ‘பில்லூர் 2வது திட்டப் பணி எந்த நிலையில் உள் ளது. எப்போது மாநகரத்திற்கு 2வது திட்ட குடிநீர் விநியோகிக்கப்படும்’ என்றார்.
கமிஷனர் அன்சுல் மிஸ் ரா பதிலளிக்கையில், முதல் பிரிவு (பேக்கேஜ்) பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்துறை மூலம் செயல்படுத்த வேண் டும். 3,4வது பணிகள் முடிந்துவிட்டது.
5வது பிரிவு பணியில் 3 கி.மீ தூரத்திற்கு மட்டுமே பணி நடக்க வேண்டியுள் ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து அனு மதி வந்த ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும். முழு பணியும் அடுத்தா ண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
24 மணி நேர குடிநீர் விநியோகம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் செயல்படுத்தக்கூடிய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.