மாலை மலர் 25.08.2010
கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3 இடங்களில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி
கிணத்துக்கடவு, ஆக. 25- கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் பகவதிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீரை பேரூராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்காக போர்வெல் தண்ணீர் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் கே.விஜயாகதிர்வேலிடம் தங்கள் பகுதிக்கு போர்வெல் தண்ணீர் அத்தியாவசிய பணிகளுக்காக தேவை என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட பகவதிபாளையம் பகுதியில் 12-வது வார்டில் 2 சின்டெக்ஸ் டேங்குகளும், 7-வது வார்டு பகுதியில் ஒரு சின்டெக்ஸ் டேங்கும் அமைத்து போர்வெல் மூலம் ரூ.75 ஆயிரம் செலவில் பகவதிபாளையம் பகுதி மக்களுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா பகவதிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் வே.கனகராஜ் முன்னிலை வகித்தார். வார்டு கவுன் சிலர் டி.கதிரராட்சி மன்ற தலைவர் கே.விஜயாகதிர்வேல் கலந்து கொண்டு குடிநீர் குழாயை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார், ஆறுச்சாமி, அன்னரத்தினம், கே.எம்.கிருஷ்ணன், தேவராஜ், தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.