தினகரன் 24.08.2010
விழுப்புரம் நகரத்தில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுகிறது நகரமன்ற தலைவர் ஜனகராஜ் பேச்சு
விழுப்புரம், ஆக 24: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் விழுப்புரம் ஐசிடிஎஸ் சார்பில் குழந்தை பணியாளர்களுக்கான பயிலரங்கம் விழுப்புரத்தில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்குழலி வரவேற்றார். மேற்பார்வையாளர் லலிதா, அங்கன்வாடி பணியாளர் கமலா ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் ஜனகராஜ் கலந்து கொண்டு பேசும்போது, விழுப்புரம் நகரம் வளர்ச்சி அடைவதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல் வேறு முயற்சி எடுத்து வருகி றார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மாநிலம் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
1991ல் நான் நகரமன்ற தலைவராக இருக்கும்போது, தமிழ்நாட்டில் வேறு எந்த நகராட்சியிலும் போடாத அளவுக்கு அதிக சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன. தற்போது பாதாள சாக்கடை திட்டம் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் சேத மடைந்துள்ளன. இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கும் வகையில் உள் ளது. தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் ரூ.13 கோடியை விழுப்புரம் நகராட்சி வளர்ச்சிக்கு நமது அமைச்சர் பொன்முடி பெற்று தந்துள்ளார். இன் னும் நான்கு மாதங்களில் அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலையாக மாற்றப்படும். விழுப்புரம் நகராட்சியில் தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 90 சதவீத மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு இது வரை விழுப்புரம் நகராட்சி யில் வரி ஏற்றப்படவில்லை. தமிழ்நாட்டிலேயே வரி ஏற்றப்படாத நகராட்சி, விழுப்புரம் நகராட்சிதான், என் றார். நகர்மன்ற உறுப்பினர் கள் பஞ்சநாதன், ஸ்ரீவினோத், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.