Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்

Print PDF

தினமலர் 24.08.2010

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்

சென்னை:மீஞ்சூரில் நடைமுறைக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் தூய்மை குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்து, ஒரு வாரமாக சென்னை, புறநகர் பகுதிகளிலும் வினியோகம் நடந்து வருகிறது.சென்னையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டதால், மக்கள் "மெட்ரோ' குடிநீரைத்தான் நம்பியுள்ளனர். ஆனால், கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு, மீஞ்சூரில் 600 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஜூலை 31ல், முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

மீஞ்சூரிலிருந்து மணலி, மாதவரம், செங்குன்றம் வரையில் அமைக்கப்பட்ட 37 கி.மீ., குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. மீஞ்சூரிலிருந்து கிடைக்கும் குடிநீரின் தன்மையும், பம்பிங் ஸ்டேஷன்களில் வந்து சேரும் குடிநீரின் தன்மையும் பரிசோதனை செய்யப்பட்டது.தூய்மைப் பரிசோதனை முடிந்து, கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.தினமும் கிடைக்கும் 10 கோடி லிட்டரில் மணலிக்கு வந்து சேரும் 1.5 கோடி லிட்டர் மணலி, திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சி பகுதிகளுக்கும், மாதவரத்திற்கு வந்து சேரும் மூன்று கோடி லிட்டர், வடசென்னை பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

செங்குன்றம் பம்பிங் ஸ்டேஷனுக்கு தினமும் 5.5 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வருகிறது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,"பலகட்ட நெம்மேலியில் துவக்கப்பட உள்ள, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், மேலும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால், சென்னையின் குடிநீர் தேவை பெருமளவு நிறைவடையும்' என்றனர்.

 

ஊர்களின் பட்டியல் தயாரிப்பு குடிநீர் தட்டுப்பாடு போக்க போர்க்கால நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

Print PDF

தினகரன் 20.08.2010

ஊர்களின் பட்டியல் தயாரிப்பு குடிநீர் தட்டுப்பாடு போக்க போர்க்கால நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

வேலூர், ஆக. 20: வேலூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் பல இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் நேற்று கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் எந்தெந்த இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது என்பது குறித்து அந்த ஊர்களின் பட்டியலை தயாரித்து தர வேண்டும்.

குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்ய வேண்டும்.வேலூர் பாலாறு புதிய பாலத்தில் விளக்குகள் அமைக்க தேவையான நிதி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. அப்படியிருந்தும் ஏன் இதுவரையிலும் மின்விளக்குகளை அமைக்கவில்லை. உடனடியாக மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.

சாலையோரம் இருக்கும் அனைத்து விளம்பர பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். சிஎம்சி மருத்துவமனையில் இருந்து வரும் கழிவுநீர் பாலாற்றில் கலந்து காங்கேயநல்லூர் பகுதிக்கு வருகிறது. எனவே அதை தடுத்து நிறுத்தி அந்த பகுதியிலேயே விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேச்சு

Print PDF

தினகரன் 20.08.2010

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேச்சு

செங்கோட்டை, ஆக.20: தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் செங்கோட்டை பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக இலவச டிவிகளை வழங்கி கருப்ப சாமி பாண்டியன் எம்எல்ஏ பேசினார்.

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் ரஹீம் தலைமை வகித்தார். ஆணையாளர் ராமகிருஷ்ணராஜா முன் னிலை வகித்தார். தாசில்தார் ராசையா வரவேற்றார். துணைத்தலைவர் ஆதி மூலம், கவுன்சிலர் முஸ்தபா உட்பட பலர் பேசினர். தென்காசி நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் காசிதர்மம் துரை, ராமையா என்ற துரை, பரமசிவன், மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, தென் காசி நகர செயலாளர் ஆயான் நடராஜன், கவுன்சிலர் ரகியானாபீவி, ரவீந்திரன், ஐயப்பன், கல்யாணி, இளைஞரணி ரபீக், சாட்டை யடி சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 7 ஆயிரத்து 401 பயனாளிகளுக்கு இலவச டிவிக்களை வழங்கி கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ பேசுகையில், 1397967985 செங்கோட்டை பகுதியில் திமுக ஆட்சிக் காலத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தலைநகராக மாறுவதற்கு உரிய அனைத்து கட்டமைப்பும் உருவாகி வருகிறது. விரைவில் ரூ.27 கோடியில் தென்காசி புறவழிச்சாலை அமையள்ளது. இதன் துவக்க விழாவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

செங்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதுஎன்றார். மண்டல துணை தாசில்தார் சௌந் தரராஜன் நன்றி கூறி னார்.

 


Page 179 of 390