Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

"திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்'

Print PDF

தினமலர் 20.08.2010

"திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்'

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள், நான்கு பேரூராட்சிகள் உட்பட 194 குடியிருப்புகள் பயன்பெறும் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தை செப்., மாதம் துணை முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறு கிராமங்களில் இலவச கலர் "டிவி'க்கள் வழங்கும் விழா நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: உடுமலை ஒன்றியத்தில் கடந்த ஆட்சியில், ஐந்தாண்டுகளில் 17 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், தி.மு.., ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 46 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் நான்கு ஊராட்சிகள் என 192 குடியிருப்புகள் பயன்பெறும் புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் 32 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. செப்., மாதத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

பி..பி., திட்டத்தின் கீழ், தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாய் திட்டத்தின் ஆதாரமாக உள்ளது. இதில், நீர் கசிவு காரணமாக விரையமாவதோடு, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதும், உடனடியாக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக, திட்ட நிதி 160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்பணியும் விரைவில் துவங்கும்.ஒரு ரூபாய் அரிசி, விவசாய கடன் தள்ளுபடி, மருத்துவ காப்பீடு, இலவச "டிவி', சமையல் காஸ், திருமண உதவி தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, நல வாரியங்கள், முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

 

கன மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்வு

Print PDF

தினமணி 19.08.2010

கன மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர், ஆக. 18: திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்த கனமழையால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

÷திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது. இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் மூலம் நீர் அனுப்பப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி பூண்டி ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 35 அடியில் 34.80 அடியாக இருந்தது.

÷நாளடைவில் கடுமையான கோடை வெப்பம் காரணமாக 24 அடி வரை நீர்மட்டம் குறைந்து வந்தது. பருவநிலை மாற்றத்தால் இடையிடையே பெய்த மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 26.42 அடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்த கன மழையால் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 26.64 அடியாக உயர்ந்துள்ளது.

÷மேலும் கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு 315 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சி குடிநீர் திட்டத்தில் "திருவெறும்பூர்' : அமைச்சர் உறுதி

Print PDF

தினமலர் 19.08.2010

மாநகராட்சி குடிநீர் திட்டத்தில் "திருவெறும்பூர்' : அமைச்சர் உறுதி

திருச்சி: ""மாநகராட்சி செயல்படுத்தும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், செப்டம்பர் எட்டாம் தேதி திறந்து விடப்படும் 9 எம்.எல்.டி., தண்ணீர் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிக்கு வினியோகிக்கப்படும்,'' என போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு உறுதியளித்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திருச்சி வீட்டுவசதி பிரிவு, நவல்பட்டு அண்ணா நகர் பகுதி 1, 2ல் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் விழா நவல்பட்டு பஞ்.,ல் நடந்தது.நவல்பட்டு பஞ்சாயத்துத் தலைவர் கயல்விழி வரவேற்றார். எம்.எல்.., சேகரன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் சாந்தகுமாரி, கவுன்சிலர் சித்ரவேல் முன்னிலை வகித்தனர்.

குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கி அமைச்சர் நேரு பேசியதாவது:கடந்த 28 ஆண்டு கால போராட்டத்தில் கடுமையான முயற்சிக்குப் பின் தீர்வு காணப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டவுடன், உடனடியாக முதல்வர், வருவாய்த் துறை அமைச்சரிடம் பேசி இங்குள்ளவர்களுக்கும் உரிமைப் பத்திரம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இப்பணியை தான் செய்ததாக வேறு சிலர் கூறுவது முறையா? என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.வீட்டு உரிமைப் பத்திரம் பெறுவதுக்கு தொகையுடன் வட்டியும் செலுத்த கூறப்பட்டது. வட்டியை தள்ளுபடி செய்ய முதல்வரிடம் பேசி நல்ல தீர்வு பெறப்படும். அதற்கு முன்னதாக தாமதிக்காமல் தொகையை செலுத்த வேண்டும். வட்டி தள்ளுபடி செய்யும் வரை தொகையை செலுத்தாமலிருப்பதை தவிர்க்க வேண்டும்.அண்ணாநகர் பகுதி 3 விரிவாக்கத்துக்கு முறையாக வசதிகள் இல்லை என கூறப்பட்டது. அந்த பகுதி பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டதும், அனைத்து வசதியும் செய்து தரப்படும். திருச்சி மாநகராட்சியில் 169 கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில், முதல் கட்டமாக 9 எம்.எல்.டி., நீர் வினியோகத்தை செப்டம்பர் எட்டாம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார். அந்த நீர் முழுவதும் திருவெறும்பூர் பகுதிக்குத் தான் வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அதோடு, திருச்சி மாநகராட்சி எல்லை விரிவாக்கப் பணி நடக்கிறது. திருவெறும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி விரைவில் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படும். அதன்பின், நபருக்கு நாளொன்றுக்கு 110லிட்டர் வீதம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.திருச்சியில் முன்மாதிரியாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் 1,000 கோடி ரூபாய் திட்டத்தை முதல்வர் அளித்துள்ளார்.இவ்வாறு நேரு பேசினார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:35
 


Page 181 of 390