Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கரூர் நகராட்சிக்கு ரூ.25 கோடி குடிநீர் திட்டம் நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவு

Print PDF

தினகரன் 17.08.2010

கரூர் நகராட்சிக்கு ரூ.25 கோடி குடிநீர் திட்டம் நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவு

கரூர், ஆக. 17: ரூ.25 கோடி மதிப்பிலான கரூர் நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த பணிகளை மேற் கொள்ள உள்ளது. திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர் மக்களின் குடிநீர் தேவை தீரும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் நகராட்சியில் காவிரி குடிநீர் திட்டம் கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி கூடுதல் குடிநீர் விநியோகத் திட்டப்பணியின் மூலம் ரூ.1.34 கோடியில் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் பற்றாக்குறை, பெருகிவரும் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. கரூர் அருகே உள்ள நெரூரில் இருந்து கரூர் நகரம் வரை கூடுதல் குடிநீர் அபிவிருத்தி திட்டம் நடைபெற சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக குடிநீர் ஆதாரங்கள், இன்னும் 25 ஆண்டுகளில் பெருகும் மக்கள்தொகை ஆகியவை கணக்கிடப்பட்டு திட்ட அறிக்கை நகராட்சியால் தயார் செய்யப்பட்டது. நகராட்சி கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்காக திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அர்பன் லோகல்பாடி, நகராட்சி, பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.2.47 கோடி, தமிழ்நாடு அர்பன் டெவலப்மென்ட் பண்ட் (டிஎன்யுடிஎப்) ரூ.14.80 கோடி, மானியம் ரூ.7.40 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த நிதி முறையே 10 சதவீதம், 60 சதவீதம், 30 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோக அபிவிருத்தி திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர் நகரின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேறிவிடும் என்று கரூர் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஊராட்சிகோட்டையில் இருந்து ரீ300 கோடி தூயகுடிநீர் திட்டம் நவம்பரில் பணி துவங்க முடிவு மேயர் தகவல்

Print PDF

தினகரன் 17.08.2010

ஊராட்சிகோட்டையில் இருந்து ரீ300 கோடி தூயகுடிநீர் திட்டம் நவம்பரில் பணி துவங்க முடிவு மேயர் தகவல்

ஈரோடு, ஆக. 17: ஈரோடு அன்னை நகர் இளையநிலா நண்பர்கள் மன்றம் சார்பில் சுதந்திர தின விழா, மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா, சூரம்பட்டி 1வது வார்டு கவுன்சிலர் சாம்ராட்அசோகனுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவில் திமுக ஒன்றிய அவைத்தலைவர் சின்னசாமி வரவேற்றார். விடியல்சேகர் எம்எல்ஏ கொடியேற்றி வைத்து பேசினார். சூரம்பட்டி நகராட்சி முன்னாள் தலைவர் சுப்ரமணியம் தலை மை வகித்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நந்தகோபால், செந்தில்வேல் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சாம்ராட்அசோகனுக்கு மாலை அணிவித்து திமுக மாவட்ட துணை பொறுப்பாளர் சச்சிதானந்தம் பேசினார். காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்ரமணியம், இளையநிலா நண்பர்கள் மன்றத்தை சேர்ந்த ஈஸ்வரன், முருகன், தனசேகர், குமார், ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கிய மேயர் குமார்முருகேஷ் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் நகராட்சிகள் மற்றும் பி.பெ.அக்ரஹாரம் பேரூ ராட்சி ஆகியவற்றை இணை த்து ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடையில் சாயக்கழிவுகள், கழிப்பிட கழிவுகள் என பல்வேறு கழிவுகளும் ஓடுகிறது. இக்கழிவுநீர் அனைத்தும் பாதாளசாக் கடை மூலமாக சேகரி க்கப்பட்டு காசிபாளையம் அருகிலுள்ள பீளமேடு பகுதியில் காவிரி ஆற்றுக்கு அருகில் சேகரித்து அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆற்றில் விடும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் ஒரு ஆண்டுக்குள் முழுவதுமாக முடிவடைந்து விடும். பயனுள்ள பாதாளசாக்கடை திட்டத்திற்கு மக்கள் நல்ஆதரவு அளிக்க வேண்டும்.

இதேபோல ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக ஊரா ட்சிகோட்டையில் இருந்து ரூ.300 கோடி செலவில் மாசுபடாத குடிநீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஈரோடு மக்களுக்கு விநியோ கம் செய்வதற்கான திட்டத்தின் துவக்கவிழா வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பணியை 2 ஆண்டுக்குள் நிறைவு செய்து மக்களுக்கு தூய குடிநீரை விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மேயர் குமார்முருகேஷ் தெரிவித்தார். முடிவில் ஈ.குமார் நன்றி கூறினார்.

 

மணலி பகுதியில் பழுதான குடிநீர் குழாய் மாற்றும் பணி தொடக்கம்

Print PDF

தினகரன் 17.08.2010

மணலி பகுதியில் பழுதான குடிநீர் குழாய் மாற்றும் பணி தொடக்கம்

திருவொற்றியூர், ஆக. 17: மணலி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் மணலி விமலாபுரம் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் கசிந்து வீணாகிறது. இதனால் சீரான குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து மணலி பாடசாலை தெரு பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பழுதான குழாயை அப்புறப்படுத்தி விட்டு, புதிய குழாய் புதைக்க நகராட்சி நிர்வாகம் க்ஷீ 10 லட்சம் ஒதுக்கியது.

இதற்கான பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நகராட்சி தலைவர் முல்லை ஞானசேகர் தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் பாஸ்கர், துணைத்தலைவர் வளர்மதி பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில், "முதல் கட்டமாக பாடசாலை தெருவில் உடைந்த குழாயை அகற்றிவிட்டு க்ஷீ 10 லட்சம் செலவில் புதிதாக குழாய் பொருத்தப்படுகிறது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள குழாய்களும் படிப்படியாக மாற்றப்படும். அதன்பின்னர், மணலி மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும்" என்றார்.

 


Page 184 of 390