தினகரன் 16.08.2010
சங்கராபுரத்தில் குடிநீர் தொட்டி எம்எல்ஏ திறந்து வைத்தார்
சங்கராபுரம், ஆக. 16: சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வார்டுகளில் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் 8 மினி தொட்டி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
பேரூராட்சி மன்ற தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். திமுக நகர அவைத் தலைவர் குமார் வரவேற்றார்.
செயல் அலுவலர் பழனி, திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வீராசாமி, நெடுஞ்செழியன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கையற்கண்ணி எம்எல்ஏ கலந்து கொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். சாகுல் அமீது, வார்டு கவுன்சிலர்கள் ஜான்சன், உமா மகேஸ்வரி, ராஜம், தஸ்கீர், தமிழ்ச்செல்வி, சுப்பிரமணி, நாராயணன், சேகர் மற்றும் தயாளன், கோவிந்தன், ஜல்லிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.