Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நம்பியூரில் ரூ.6 கோடியில் தனி குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 12.08.2010

நம்பியூரில் ரூ.6 கோடியில் தனி குடிநீர் திட்டம்

கோபிசெட்டிபாளையம்: ""நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் தனி குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன,'' என, பஞ்சாயத்து தலைவர் கீதா முரளி கூறினார்.

அவர் கூறியதாவது: நம்பியூர் டவுன் பஞ்சாயத்து வெள்ளாப்பாளையம்-இச்சிபாளையம் ஊஞ்சக்காடு பிரிவு வரை 24.55 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை வசதி, ஆரம்பள்ளி முதல் கரட்டுபாளையம் சாலை 18.25 லட்சம் ரூபாயில் தார்சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. பால்பண்ணை ரோடு - மலையப்பாளையம் ரோடு வரை வடிகால் வசதி, கெடாரை பெருமாள் கோவில் வீதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வீதியில் 3.10 லட்சம் ரூபாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் எம்.எல்.., ஜீவா சுப்பிரமணியம் வளர்ச்சி நிதி 13.14 லட்சம் ரூபாயில் கல்லாங்காட்டுபாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பிளியம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி முதல் மயானம் செல்லும் சாலை வரை ஆறு லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு, வெள்ளாப்பாளையம் அம்பேத்கார் நகர் அரிஜன காலனியில் மயானம் செல்லும் பாதையில் 5.35 லட்சம் ரூபாயில் தார் ரோடு, செட்டியம்பதியில் 2.54 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

டவுன் பஞ்சாயத்து புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 3.40 லட்சம் ரூபாயில் மலையப்பாளையம் சாலை, பி.வி.ஆர்., தியேட்டர் ரோடு சாலை அமைத்தல், 8.90 லட்சம் ரூபாயில் நாச்சிப்பாளையம்- காமராஜ் காலணி இணைப்பு சாலை, வாரச்சந்தையில் 10 லட்சம் ரூபாயில் வணிக வளாகம், கெடாரை, மேட்டுபாளையத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் குட்டை மேம்பாடு, பழைய சூரிப்பாளையம் குறுக்கு வீதியில் 5.80 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, 10 லட்சம் ரூபாயில் வாரச்சந்தை சுற்றுச்சுவர் மற்றும் விற்பனை மேடை அமைத்தல், ஐந்து லட்சம் ரூபாயில் சுடுகாடு மேம்பாடு, 2.70 லட்சம் ரூபாயில் காந்திபுரம் டீச்சர்ஸ் காலனியில் சிமென்ட் சாலை, மூன்று லட்சம் ரூபாயில் சத்யா நகர் குறுக்கு வீதியில் கான்கிரீட் தளம் ஆகிய பணிகள் நடக்கிறது.

இச்சிப்பாளையம் - வலசுவரை 10 லட்சம் ரூபாயில் தார்சாலை வசதி, எம்.எல்.., நிதி 15.40 லட்சம் ரூபாயில் கோவை மெயின் ரோடு, பழைய சூரிப்பாளையத்தில் கான்கிரீட் தளம், புதிதாக 30 தெரு விளக்குகள் அமைக்க எம்.எல்.., சுப்பிரமணியம் நிதி ஒதுக்கியுள்ளார். 33.60 லட்சம் ரூபாயில் பஸ் ஸ்டாண்டில் சுற்றுச்சுவர், கான்கிரீட் தளம், ஆறு லட்சம் ரூபாயில் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் மாக்கினாங்கோம்பை பவானியாற்றில் இருந்து 6.15 கோடி ரூபாயில் தனி குடிநீர்த்திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 5,000 புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகளில் நம்பியூர் டவுன் பஞ்சாயத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். செயல் அலுவலர் மதிவாணன் உடனிருந்தார்.

 

நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர்: அமைச்சர் உறுதி

Print PDF

தினமலர் 12.08.2010

நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர்: அமைச்சர் உறுதி

திருப்பூர்: ""மூன்றாவது குடிநீர் திட்ட கலந்தாய்வு கூட்டம், வரும் 23ல் நடக்கிறது. அதன்பின், நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர் பெற்றுத்தர நடவடிக்கை மேற் கொள்ளப்படும்,'' என நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியில், சமுதாயக்கூட திறப்பு விழா, இலவச "டிவி' வழங்கும் விழா, திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி லட்சுமி வரவேற்றார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச் சர் சாமிநாதன், சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது:தேர்தல் சமயத்தில் நம்ப முடியாத வகையில் இருந்த வாக்குறுதிகள் எல்லாமே இன்று திட்டங் களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான அதிகாரிகளை விரைந்து நியமித்து வருகிறது. கோவை, ஈரோடு சென்று கொண்டிருந்த மக்கள், இன்று திருப்பூரிலேயே தேவையை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டட பராமரிப்பு பணியை விரைவாக செய்வதற்காக, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் பணியிடம் உருவாக்கப்படும். அதற்கான கோப்புகளை நிதித் துறை செயலர், முதல்வர் பார் வைக்கு அனுப்பியுள்ளார். அதேபோல், மாவட்ட நீதிமன்றங்களும் விரைவில் அமைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், 99 சதவீத நிர்வாக பணிகள் நிறைவேறி விட்டன; விரைவில் 100 சதவீதமாக பூர்த்தி பெறும்.கணக்கம்பாளையம் ஊராட்சியில் 2,609 கார்டுகள் உள்ளன. அவற்றில், முதல் கட்டமாக 955 கார்டுகளுக்கு "டிவி' வழங்கப்பட்டு விட்டது. தற்போது, 1,654 பேருக்கு வழங்கும் பணி துவங்குகிறது.

திருப்பூரில் முதல்கட்டமாக வழங் கப்பட்டதை காட்டிலும், இரண் டாம் கட்டமாக வழங்கப்படும் "டிவி'க்கள் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதிகளிலும் பல மடங்கு அதிகமாக உள்ளன.முக்கிய பிரச்னையாக இருப்பது குடிநீர். வரும் 23ல், சென்னையில் துணை முதல்வர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதன் பின், திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள நகராட்சிகளுக்கு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலமாக, நியாயமான கட்டணத்தில் கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். நான்காவது குடிநீர் திட்ட ஆய்வுப்பணிகள் துவங்கிவிட்டன. அத்திட்டம் நிறைவேற் றப்படும் போது, திருப்பூரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

கலெக்டர் சமயமூர்த்தி பேசும் போது, ""முதல்கட்டமாக, மாவட்ட அளவில் 4.70 லட்சம் "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 16 ஆயிரத்து 600 காஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 16 ஆயிரத்து 100 இணைப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு துவங்கியுள்ளது. காப்பீடு திட்டம் வாயிலாக, 5,942 பேர், 14.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். வரும் 15ல் இருந்து குடிசை வீடுகளை கான்கிரீட் விடுகளாக தரம் உயர்த்தும் திட்ட பணிகள் துவங்குகின்றன,'' என்றார்.எம்.எல்.., கோவிந்தசாமி,ஆர்.டி.., சொக்கன், தாசில்தார் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூரில் ரூ.1712 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கருணாநிதி உத்தரவு

Print PDF

மாலை மலர் 11.08.2010

மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூரில் ரூ.1712 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கருணாநிதி உத்தரவு

சென்னை, ஆக. 11- மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும் நிறைவேற்று வதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

105 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள் மற்றும் 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 173 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் இராச பாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

190 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருது நகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக் கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 755 குடியிருப்பு களுக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.

784 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மதுரை மாவட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், .வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1430 குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டம்.

224 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம் புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 965 ஊரகக் குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் என 5 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம் பாட்டுத் திட்டத்தையும், மொத்தம் 1711 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

 


Page 188 of 390