Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கக் கோரி ஸ்டாலினிடம் மனு

Print PDF

தினமணி 06.08.2010

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கக் கோரி ஸ்டாலினிடம் மனு

கோவில்பட்டி, ஆக. 5: கோவில்பட்டி நகருக்கு தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கக்கோரி தமிழக துணை முதல்வர் ஸ்டாலினிடம், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி மல்லிகா வியாழக்கிழமை மனு அளித்தார்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஸ்டாலினிடம் அவர் அளித்த மனு:

கோவில்பட்டி நகராட்சியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த குடிநீர்த் திட்டத்தின்கீழ், 27 வழியோரக் கிராமங்களான கயத்தாறு, கழுகுமலை, எட்டையபுரம் பேரூராட்சிகளும், சாத்தூர் நகராட்சியும் பயனடைந்து வந்தது.

தற்போது, கோவில்பட்டி நகராட்சியைத் தவிர மற்ற பகுதிகளுக்கு தனியாக குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், தலைமை பணியிடமான சீவலப்பேரியிலிருந்து கோவில்பட்டி வரையுள்ள நீருந்து, குழாய்கள் மிகவும் பழுதடைந்திருப்பதால், அதிகபட்ச குடிநீரை செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கோவில்பட்டி நகராட்சியின் உச்சகட்ட கால (2036-ம் ஆண்டு) மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கும் வகையில், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சீவலப்பேரி- சவலாப்பேரி- புளியம்பட்டி- நாரைக்கிணறு-கொல்லங்கிணறு-கடம்பூர்-குருமலை- மந்தித்தோப்பு வழியாக கோவில்பட்டி நகரம் வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கவும்,

தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கெனவே உள்ள நீர் உறிஞ்சி கிணறுகளுடன் கூடுதலாக 2 கிணறுகள் அமைத்து, 12,454 மில்லியன் லிட்டர் குடி தண்ணீர் கோவில்பட்டி நகருக்கு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

தாங்கள் சட்டப்பேரவையில் 2010- 2011 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கோவில்பட்டி நகருக்கு தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளீர்கள்.

தற்போது, மேற்படி திட்டத்தை செயலாக்கும் திட்ட மதிப்பீடு ரூ. 79.89 கோடியில் தயாரிக்கப்பட்டு, டுபிட்கோ நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதியினை விடுவித்து, கோவில்பட்டி நகருக்கு புதிய குடிநீர் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

நகராட்சி ஆணையாளர் விஜயராகவன், பொறியாளர் சையது அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கக்கோரியும் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.

 

திண்​டுக்​கல் நகர் குடி​நீர்ப் பிரச்​னைக்கு நிரந்​த​ரத் தீர்வு என்ன?

Print PDF

தினமணி 06.08.2010

திண்​டுக்​கல் நகர் குடி​நீர்ப் பிரச்​னைக்கு நிரந்​த​ரத் தீர்வு என்ன?

திண்​டுக்​கல்,​​ ​ ஆக.​ 5:​ திண்​டுக்​கல் நக​ரில் நீண்ட கால​மாக நீடித்து வரும் குடி​நீர் பிரச்னை தீர்க்​கப்​ப​டுமா?​ என்று பொது​மக்​கள் கேள்வி எழுப்பி உள்​ள​னர்.​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ரில் தற்​போது 20 நாளுக்கு ஒரு முறை குடி​நீர் விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​கி​றது.​ இந்​தக் குடி​நீ​ரும் குழாய் இணைப்பு உள்ள அனைத்து வீடு​க​ளி​லும் முறை​யாக வரு​வ​தில்லை.​ பலர் மின்​மோட்​டார் மூலம் தண்​ணீரை உறிஞ்சி விடு​கின்​ற​னர்.​ மோட்​டாரை நிறுத்​திய பின்​னர் தான் மற்ற குழாய்​க​ளுக்கு தண்​ணீர் கிடைக்​கும் நிலை உள்​ளது.​ ​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ரம் பாறை​கள் அதி​கம் நிறைந்த பகுதி.​ இத​னால் சில இடங்​கள் மேடா​க​வும்,​​ சில இடங்​கள் பள்​ள​மா​க​வும் உள்​ளது.​ மேடான பகு​திக்கு தண்​ணீர் வர மின்​மோட்​டா​ரைப் பயன்​ப​டுத்​தும் நிலை உரு​வா​கி​றது.​

​ ​ சிறப்​பான முறை​யில் நீர் மேலாண்மை செய்​வ​தன் மூலம் மின்​மோட்​டார் பயன்​ப​டுத்​து​வ​தைத் தவிர்க்க முடி​யும்.​ திண்​டுக்​கல் அருகே உள்ள கோ.ராம​நா​த​பு​ரம் ஊராட்​சி​யின் நீர் மேலாண்​மைத் திட்​டமே இதற்கு சாட்சி.​ ஊராட்​சி​யில் உள்ள அனைத்து வீடு​க​ளுக்​கும் குழாய் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.​ தண்​ணீர் திறந்து விடும்​போது மின்​மோட்​டா​ரையோ,​​ அல்​லது ஆழ்​து​ளைக் குழாய்​க​ளையோ வைத்து தண்​ணீர் பிடிக்க வேண்​டிய அவ​சி​யம் இல்லை.​

​ ​ நக​ருக்கு ஆத்​தூர் காம​ராஜ் சாகர் அணை மூலமே பெரு​ம​ளவு தண்​ணீர் வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​ 23 அடி கொள்​ளவு உள்ள அணை​யில் சுமார் 7 அடிக்​கும் மேல் சேறு நிரம்பி உள்​ளது.​ இந்த சேற்​றினை அகற்​றும் தொழில் நுட்​பம் தெரி​யாத கார​ணத்​தி​னால் மழைக்​கா​லங்​க​ளில் கிடைக்​கும் நீரினை முழு​மை​யா​கச் சேமிக்க இய​ல​வில்லை.​ ​

​ ​ ​ பேர​ணையி​லி​ருந்து மழைக் காலங்​க​ளில் மட்​டுமே கிடைக்​கும் நீரைக் கொண்டு விநி​யோ​க​மும்,​​ காவிரி கூட்​டுக் குடி​நீர்த் திட்​டம் மூலம் கிடைக்​கும் நீரை​யும் கொண்டே நக​ரின் தேவையை 15 முதல் 20 நாள்​க​ளுக்கு ஒரு முறை என விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​கி​றது.​

​ ​ ​ தற்​போது வைகை அணையி​லி​ருந்து ரூ.100 கோடி செல​வில் தனி​யாக குழாய் பதித்து திண்​டுக்​கல் நக​ருக்கு குடி​நீர் வழங்​கும் திட்​டத்தை மாநில அரசு தயா​ரித்​துள்​ளது.​ ஏற்​கெ​னவே பெரி​யாறு அணை பிரச்​னை​யால் வைகை​யில் தண்​ணீர் என்​பது கேள்​விக்​கு​றி​யா​கும் நிலை​யில் இத்​திட்​டம் முழு​மை​யான பலன் தருமா என்​பது தெரி​ய​வில்லை.​

​ ​ ​ நக​ரின் நிலத்​தடி நீர்​மட்​டம் வெகு​வா​கக் குறைந்து வரு​வ​தால் சுமார் 400 முதல் 500 அடி ஆழம் வரை ஆழ்​து​ளைக் குழாய் பதிக்​கும் நிலை உள்​ளது.​ பல வீடு​க​ளி​லும் நக​ராட்சி விநி​யோ​கம் செய்​யும் குடி​நீ​ரையே அனைத்து உப​யோ​கத்​துக்​கும் பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.​

​ ​ நக​ராட்​சி​யின் எல்​லை​யில் சுமார் 100 ஏக்​கர் பரப்​பில் 7 குளங்​கள் உள்​ளன.​ இவை முறை​யா​கப் பரா​ம​ரிக்​கப்​ப​டா​த​தால் ​ தூர்ந்து போய் வரு​கின்​றன.​ ​ ​ ரூ.100 கோடியை இந்​தத் திட்​டத்​துக்கு செல​வ​ழிப்​ப​தற்​குப் பதி​லாக ஆத்​தூர் காம​ராஜ்​சா​கர் அணை​யில் சேர்ந்​துள்ள சேற்றை முழு​மை​யாக அகற்​றி​யும்,​​ தூர்ந்து வரும் நீரா​தா​ரங்​களை மேம்​ப​டுத்​தி​னால் நிலத்​தடி நீர் அளவை அதி​க​ரிக்க முடி​யும்.​ இது மட்​டுமே தண்​ணீர் பிரச்​னைக்​கா​னத் தீர்​வாக அமை​யும்.​ ​

​ ​ ​ திண்​டுக்​கல் நக​ராட்சி,​​ மாவட்ட நிர்​வா​கம் மட்​டும் இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண முடி​யாது.​ மாநில அரசு நிதியை ஒதுக்கி பணி​க​ளைத் துரி​தப்​ப​டுத்​தி​னால் மட்​டுமே குடி​நீர் பிரச்​னைக்​குத் தீர்வு காண முடி​யும்.​

 

பில்லூர் நீர் சேகரிப்பு கிணற்றில் பாறை வெடி வைக்க அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினகரன் 06.08.2010

பில்லூர் நீர் சேகரிப்பு கிணற்றில் பாறை வெடி வைக்க அதிகாரிகள் ஆய்வு

கோவை, ஆக. 6: பில்லூர் நீர் சேகரிப்பு கிணற்றில் பாறை இருப்பதால் அதனை வெடி வைத்து அகற்ற அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். பில்லூர் 2வது குடிநீர் திட்டம் 113.74 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.

இதில் மின் வாரியத்தின் சார்பில், முதல் பேக்கேஜில் 13.80 கோடி ரூபாய் செலவில் பில்லூர் அணை அருகே நீர் சேகரிப்பு கிணறு மற்றும் பெரிய கோம்பை மலை குகை நுழைவு பகுதி வரை நீரேற்று பிரதான குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள் ளது.

கடந்த 2008ம் ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி இந்த பணி யை நடத்த மின் வாரியத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது. ஆனால், வனத்துறைக்கு சொந்தமான 1.94 எக்டர் நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவியது. படிப்படியாக பிரச்னைகளை சமாளி த்து இடத்தை பெற்று, கடந்த மாதம் கிணறு வெட்டியபோது பிரச்னை மேலும் அதிகமா னது.

100 அடி ஆழத்தில், 20 மீட்டர் அகலத்தில் கிணறு தோண்டப்பட்டு வருகிறது. சில அடி ஆழம் குடி தோண்டிய போது பெரிய பாறை இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் ந்து கிணறு தோண்ட முடியா மல் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே, பாறையை டெட்டனேட்டர் வெடி வைத்து தகர்த்து அகற்றவேண்டும் என மின்வாரியம் தெரிவித்தது. இது தொடர்பாக கோவை ஆர்.டி.ஓ முகமது மீரான், மாநகராட்சி ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்ட அதிகாரிகள், மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று பில்லூர் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். கிணற்றில் இறங்கிய அதிகாரிகள் பாறைகளின் தன்மை களை பரிசோதித்தனர். பெரிய பாறை, 30 அடிக்கும் மேல் இருப்பதாக தெரியவந்தது. இந்த பாறையை அகற்ற பல முறை வெடி வைக்கவேண்டியிருக்கும் என தெரி கிறது.

நீர் சேகரிப்பு கிணற்றிக்கு 50 மீட்டர் தூரத்தில் பில்லூர் அணை அமைந்திருக்கிறது. அதிக திறன் கொண்ட பாறை தகர்க்கும் டெட்டனேட்டர் வெடி வைத்தால் அணையில் அதிர்வு ஏற்படும். அதிர்வினால் அணையில் விரிசல் ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அணையில் உள்ள மீன்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள், வெடி வைத்து பாறை தகர்க்க அனு மதி வழங்கவில்லை.

ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறுகையில், " கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்தி, பாறை தன்மை, அணை பக்க சுவர் தாங்கும் திறன் போன்றவற்றை பரிசோதித்து வெடி வைக்க அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும், " என் றனர்.

 


Page 191 of 390