Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

Print PDF

மாலை மலர் 26.07.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

சென்னைக்கு குடிநீர் வழங்கும்
 
 ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

நகரி, ஜூலை. 26- ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டு கண்டலேறு அணையை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்னை புழல் ஏரிக்கு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருவதால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் மொத்த உயரம் 885 அடி. தற்போது அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து இருப்பதால் 830.80 அடி உயரத்தை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் அணை நிரம்பி விடும்.

இந்த அணை நிரம்பினால் சென்னைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர நீர்ப்பாசன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு கூடுதல் பாலாற்று தண்ணீர் தாம்பரம் எம்எல்ஏ உறுதி

Print PDF

தினகரன் 26.07.2010

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு கூடுதல் பாலாற்று தண்ணீர் தாம்பரம் எம்எல்ஏ உறுதி

தாம்பரம், ஜூலை 26: ‘சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு கூடுதலாக பாலாற்று நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ உறுதி அளித்துள்ளார்.

சிட்லபாக்கம் பேரூராட்சியில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட பொதுமக்கள், செம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும், ஏரியில் குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையை சீரமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், முதியோர், விதவை உதவி தொகை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு போன்றவை உட்பட ஏராளமான கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும், அதன் விவரத்தை வழங்கவும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

அப்போது, "பேரூராட்சிக்கு தினமும் 9 லட்சம் லிட்டர் பாலாற்று தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், வீட்டு இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை, கூடுதலாக 25 ஆயிரம் லிட்டர் கிடைத்தால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கலாம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் வாரியத்திடம் இருந்து கூடுதலாக பாலாற்று தண்ணீர் பெற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ராஜா எம்எல்ஏ உறுதி கூறினார். நிகழ்ச்சியில், சிட்லபாக்கம் வருவாய் ஆய்வளார் சரவணன், செயல் அலுவலர் (பெறுப்பு) வெங்கடசன், உள்ளாட்சி உறுப்பினர்கள், பொது நலசங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் திட்ட துவக்க விழா

Print PDF

தினகரன் 26.07.2010

குடிநீர் திட்ட துவக்க விழா

மார்த்தாண்டம், ஜூலை 26: குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் சிறுமின்விசை பம்பு ரூ.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.

நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி தலைமை வகித்து குடிநீர் சப்ளையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் குரல்செல்வி, ஜெயன், கவுன்சிலர் பொன்.சகாதேவன், பிரவின்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 200 of 390