Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கடலூரில் குழாய் உடைப்புதேவனாம்பட்டினத்திற்கு குடிநீர் "கட்'

Print PDF

தினமலர்             20.12.2013

கடலூரில் குழாய் உடைப்புதேவனாம்பட்டினத்திற்கு குடிநீர் "கட்'

கடலூர் :கடலூர் பாரதி சாலையில், உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர், திருவந்திபுரம் மலையில் இருந்து நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் எதிரே, பாரதி சாலையில் நகரப் பகுதிக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாயில் நேற்று, திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.இதையறிந்த நகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, ஐந்தரை அடி ஆழம் பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட பைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பைப் உடைப்பு ஏற்பட்டதால், அண்ணா நகர், கே.கே.நகர், நேரு நகர், பத்மாவதி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 20ம் தேதி காலை குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.நாளை (21ம் தேதி) காலை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

 

ஆத்தூர் நகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம்

Print PDF

தினகரன்                09.12.2013

ஆத்தூர் நகராட்சி பகுதியில் 16 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம்

ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் 16 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நகராட்சியின் மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர், வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மழை அதிக அளவில் பெய்துள்ள போதிலும் நகராட்சி பகுதியில் தேவையான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நகராட்சியின் மூலம் வீட்டு குழாய்களில் காவிரி குடிநீர், 16 தினங்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், மேட்டூரிலிருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது போதுமானதாக இல்லாத காரணத்தால், இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால், 16 நாட்களுக்கு ஒருமுறையும் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முறையாக வழங்கப்படாத குடிநீருக்கு நகராட்சி நிர்வாகத்தால் கட்டணம் மட்டும் சரியாக வசூலிக்கப்படுகிறது. நகராட்சிக்கு செலுத்தும் குடிநீர் வரிக்கு, தனியார் வாகனங்களில் வாங்கும் அளவிற்கு கூட நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

 

குடிநீர் குழாயில் உடைப்பு

Print PDF

தினமலர்          02.12.2013

குடிநீர் குழாயில் உடைப்பு

சிதம்பரம் : வ.உ.சி.தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் 5 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் நகராட்சியில் 19வது வார்டு முதல் 23வது வார்டு வரை உள்ள தெருக்களுக்கு மானா சந்து வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகம் குழாய் சரியாக பராமரிக்காததால், குடிநீர் செல்லும் குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வாடிக்கையாக இருந்து வருகிறது.

உடைந்த குழாயைச் சரியாக சீரமைக்காததால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக நகர மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வ.உ.சி தெருவில் குடிநீர் செல்லும் பிரதான குழாயில் திடீரென பழுது ஏற்பட்டு உடைந்து குடிநீர் ஆர்ட்டிஷியன் ஊற்று போல் வெளியேறி தெருக் களில் ஆறாக ஓடியது.

வ.உ.சி.தெருவில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்டதெருக்களில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. வ.உ.சி. தெரு பகுதி மக்கள் பைப்பு உடைந்து தண்ணீர் வெளியேறிய இடத்தில் தண்ணீர் பிடிக்க குவிந்தனர்.

மானா சந்து வாட்டர் டேங் குடிநீர் விநியோகம் குழாய் சரியான முறையில் பராமரிக்காததால், இது போன்று அடிக்கடி பழுது ஏற்படுவதும், பழுது ஏற்பட்ட இடத்தின் மூலம் மழை நீர் மற்றும் கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் நகர மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

 


Page 21 of 390