Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வி.கே.புரத்தில் குடிநீர் திட்ட பணிகள்

Print PDF

தினமலர் 26.07.2010

வி.கே.புரத்தில் குடிநீர் திட்ட பணிகள்

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தி வைக்கப்படும் என்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் காரையார் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு முதன் முதலாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் தான் தரையை தொடுகிறது. இந்நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளுக்கும் வீட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அப்போதைய விக்கிரமசிங்கபுரம் பஞ்., மூலம் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

காலப்போக்கில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பெருகி வந்த குடியிருப்புகளால் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் அதிக அளவில் கொடுக்க வேண்டிய நிலை நகராட்சிக்கு ஏற்பட்டது. அதே சமயத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கெடுக்க முடியாத நிலையும் நகராட்சிக்கு ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு தற்போதைய விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தொகுதி எம்.எல்..வும், சபாநாயகருமான ஆவுடையப்பனிடம் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து விளக்கம் அளித்தார். இதன் அடிப்படையில் சபாநாயகர் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளிடம் பேசி 2.56 கோடி ரூபாய் செலவில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிக்கான முதல்கட்ட வேலையை துவக்கி வைத்தார்.

இதனால் விக்கிரமசிங்கபுரம் தங்கம்மன் கோயில், இருதயக்குளம், அய்யனார்குளம், முதலியார்பட்டி, யானைபாறை, கொட்டங்குளம், பொதிகையடி போன்ற 7 இடங்களில் 5 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும், இரண்டு தரை நீர்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டு வந்தது. இதில் பெரும்பாலான பணிகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி இத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க அம்பாசமுத்திரம் நகருக்கு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

இதனால் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சியில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டிகளுக்கு பாபநாசம் பொதிகையடி நீரேற்றும் நிலையத்தில் இருந்துதான் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் பாபநாசம் பொதிகையடி நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் மெயின் குழாய்கள் பதிக்க வேண்டியது இருப்பதால் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு விக்கிரமசிங்கபுரம் நகரில் உள்ள 21 வார்டுகளில் உள்ளவர்கள் குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து பயண்படுத்த வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

 

தூத்துக்குடிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வல்லநாட்டில் ரூ.50 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 22.07.2010

தூத்துக்குடிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வல்லநாட்டில் ரூ.50 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூலை 22: தூத்துக்குடி நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்திற் காக ரூ.50 லட்சம் மதிப்பில் வல்லநாட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத் தார்.

தூத்துக்குடி நகருக்கு வல்லநாடு நீர்த்தேக்கத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 3வதாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் இருந்து பிரதான குழாய்கள் வழியாக நேரடியாகவே குடிநீர் தூத்துக்குடிக்கு கொண்டு வரப் படுகிறது. ஆனால் மின்சாரம் தடைபட்டால் குடிநீரேற்றம் செய்யும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வல்ல நாடு பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் பத்து லட்சம் லிட் டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு மேயர் கஸ்தூரி தங்கம் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கீதாஜீவன் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட் டியை திறந்து வைத் தார். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் அருணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செய லாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கனகராஜ் ஆனந்தராஜ் கலந்து கொண் டனர்.

 

பார்சன்ஸ்வேலி நீர்மட்டம் குறைந்தது ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை அபாயம்

Print PDF

தினகரன் 22.07.2010

பார்சன்ஸ்வேலி நீர்மட்டம் குறைந்தது ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை அபாயம்

ஊட்டி, ஜூலை 22: ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததாலும், மின் உற்பத்திக்காக அணையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வருவதாலும் ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சி உட்பட்ட 36 வார்டு பகுதிக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோவர் அணைகள், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோவர் அணைகள், ஓல்டு ஊட்டி, கிளன்ராக் போன்ற அணைகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இதில் ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் விநியோகம் முக்கிய ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணை மின்வாரியத்திற்கு சொந்தமானது. அணை நீரை கொண்டு தான் குந்தா மின்வாரியம் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்கிறது.

நகராட்சி சார்பில் பார்சன்ஸ்வேலி அணையில் 2 ராட்சத மோட்டார்களை பொருத்தி நீர் வினியோக முறையை செயல்படுத்துகிறது. தற்போது இந்த அணையிலுள்ள நீரை மின்வாரியம் நீர் மின் உற்பத்திக்காக தினமும் எடுப்பதால் அணையின் நீர் இருப்பது வேகமாக குறைந்து வருகிறது.

56 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது சுமார் 22 அடி மட்டுமே நீர் உள்ளது. நீர் இருப்பு மேலும் குறைந்தால் அணையில் சேறும், சகதியுமே மிஞ்சும். இதனால் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இம்முறை பார்சன்ஸ்வேலி மற்றும் போர்த்திமந்து நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. மின் உற்பத்திக்காக தினமும் குந்தா மின் வாரியம் அணையில் இருந்து நீரை எடுத்து வரும் நிலையில் அணையின் நீரின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்யவில்லையெனில் நகராட்சி சார்பில் ஊட்டி நகர் மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படும்

 


Page 201 of 390