Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

விழுப்புரம் பாப்பான்குளத்தில் குடிநீர்தட்டுப்பாடைபோக்க நிரந்தரதீர்வுகாணப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

Print PDF

தினகரன் 30.06.2010

விழுப்புரம் பாப்பான்குளத்தில் குடிநீர்தட்டுப்பாடைபோக்க நிரந்தரதீர்வுகாணப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

விழுப்புரம், ஜூன் 30: விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் 500 குடும்பங்கள் வசிக்கிறது. இந்த பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யும் அளவு படிப்படியாக குறைந்தது.

இதற்கிடையில் விழுப்புரம் & வேலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கிய போது குடிநீர் குழாய் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சேதமடைந்தது. ரயில் பாதையை கடந்து குடிநீர் குழாய் அமைப்பதில் சிக்கல் உள்ளது. ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நக ராட்சி நிர்வாகம் ஆகிய 3 நிர்வாகங்களும் ஒன்றாக இணைந்து முயற்சி மேற்கொண்டால்தான் ரயில் பாதையை கடந்து குடிநீர் குழாய் கொண்டு வரமுடியும் என்ற சூழல் நிலவுகிறது.

இப்பிரச்னை தொடர்ந்து நீடித்து வருவ தால் மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரி மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந் தது.

விழுப்புரம் மேலவீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணியால் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வருவது தடைப்பட்டது. குடிநீருக்காக ரயில் பாதையை கடந்து அரை கி.மீ., தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். அந்த பகுதிக்கு சரியான பாதை வசதி இல்லை. அங்கன்வாடி மையமும் கிடையாது. அடிப்படை கல்விக்கும் ரயில் பாதையை கடந்து தான் குழந்தைகள் செல்ல வேண்டும்.

விழுப்புரம் பாப்பான்குளத்துக்கு குடிநீர் வசதி, பாதை வசதி, அங்கன்வாடி மையம் வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்துக்கு அப்பகுதி மக்கள் நேற்று காலை திரண்டனர். இதையறிந்து விழுப்புரம் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், ரயில்வே நிர்வாகத்துடன் பேசி நிரந்தரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர் மன்ற ஜனகராஜ் கூறினார். மேலும் சர்வேயர் கனகராஜியை வரவழைத்து அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்து ஆலோசித்தார். அங்கன்வாடி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

கொடைக்கானலில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 30.06.2010

கொடைக்கானலில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்

கொடைக்கானல், பிப். 15: கொடைக்கானல் நகரில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என துணை முதல்வர் மு..ஸ்டாலின் கூறினார்.

கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.5 கோடியே 5 லட்சம் செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.

புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:

கொடைக்கானலில் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாத சூழ்நிலை இருந்தது. இதனால் பஸ்களை சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கும் நிலை இருந்ததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. பொதுமக்களுக்கு மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.

இதனைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டினரும் ரசிக்கக் கூடிய வகையில் நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, எனக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டது. மக்களுக்குத் துணை நிற்பதற்காக துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டையில் மட்டுமே இருந்துகொண்டு மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறேன்.

கடந்த 2006-ல் இந்த பஸ் நிலையத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இப்போது திறப்பு விழா காணும்போது மகிழ்ச்சியடைகிறேன்.

திமுக ஆட்சியில் கொடைக்கானல் நகராட்சியில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 1383 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.13 கோடியே 73 லட்சம் செலவில் 217 பணிகள் முடிவடைந்துள்ளன.

நகரில் தினசரி குடிநீர் வழங்க குழாய்கள் அமைத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரூ.87 கோடியே 54 லட்சம் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன், ஞானதேசிகன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், ஒன்றியத் தலைவர் அப்துல் ரசாக், நகர்மன்ற உறுப்பினர்கள், நகரச் செயலர் மாயன், மகளிர் சுய உதவிக் குழுவின உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் நன்றி கூறினார்.

 

குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்

Print PDF

தினகரன் 29.06.2010

குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்

சென்னை, ஜூன் 29: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை குடிநீர் வாரியம் பகுதி "" வின் கீழ் இயங்கும் துணை பகுதி பொறியாளர் அலுவலகம் 35 மற்றும் பணிமனை அலுவலகம் 149 ஆகியவை புருட்டிஸ் காசில்ஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் சென்னை&28 என்ற முகவரியில் இயங்கி வந்தது.

இந்த அலுவலகம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் எண்.128, ஆர்.கே.மடம் சாலை (மாநகராட்சி விளையாட்டுத் திடல் அருகில்), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை&28 என்ற முகவரியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை குடிநீர் வாரியம் பகுதி அலுவலகம்&1 எண்.4/1 ரத்தின சபாபதி முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை&21 என்ற முகவரியில் இயங்கி வந்தது.

இந்த அலுவலகம் ஜூலை 1ம் தேதி முதல் எண்.19/35 ராமானுஜ ஐயர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை&21 என்ற முகவரியில் செயல்பட உள்ளது.

பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்த புதிய அலுவலகங்களை அணு கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 205 of 390