Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்

Print PDF

தினமலர்             28.11.2013

17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்

திருப்பூர் : இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்கள் 17 இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வந்த நிலையில், உடைப்புகளை சீரமைக்கும் பணி பணிகள் நடந்தன. குடிநீர் திட்டத்தை மறு சீரமைப்பு செய்வதே நிரந்தர தீர்வாக அமையும். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, அன்னூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊராட்சிகளிலுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம் கடந்த 1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து 54 கி.மீ., தூரம் குழாய்கள்வழியாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, 332 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது; மாநகராட்சிக்குள் 9 கி.மீ., நீளத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது, அவிநாசி ரோடு குறுகியதாக இருந்த நிலையில்; போக்குவரத்து வளர்ச்சிக்கு ஏற்ப, ரோடு அகலப்படுத்தப்பட்டது. 21 ஆண்டுகளில், ரோடு விரிவாக்கம் காரணமாக, குழாய் ரோட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அதிகபட்சம் 13 டன் எடை கொண்ட வாகனங்கள் சென்று வந்த ரோட்டில், 40 டன் எடை வரை எடை கொண்ட வாகனங்கள் செல்வதால், காரணமாக குழாய்கள் பாதிப்படைகின்றன.

குழாய் இணைப்புகளில் உள்ள ரப்பர் வாஷர்கள், 21 ஆண்டு பழையானதாலும், குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின் வெட்டு பிரச்னை காரணமாக,"வாட்டர் ஹார்மர்' எனப்படும் அழுத்தம் மாறி, மாறி வரும் சூழல் காரணமாகவும், திட்ட குழாய்களில் பல இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுதினமும் சராசரியாக மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ரோடு குண்டும், குழியுமாக மாறுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கிறது. போதிய குடிநீர் கிடைக்காமல், வழியோர மக்களும் பாதிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில், அன்னூர் பகுதியில் மூன்று இடங்களிலும், அவிநாசி பகுதியில் இரண்டு இடங்களிலும், திருப்பூர் பகுதியில் 12 இடங்களிலும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது.இதனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக உடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குடிநீர் கசிந்த பகுதிகளில் உள்ள ரப்பர் வாசர்கள் மாற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் கன ரக வாகனங்களால் உடைப்பு ஏற்படாமல் இருக்க, அதிர்வை தாங்கும் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டன. சீரமைப்பு பணி காரணமாக வழியோர கிராமங்களில் இரண்டுநாள் குடிநீர் வினியோகம் பாதித்தது. நேற்று காலை பணிகளை நிறைவு பெற்று; குடிநீர் பம்பிங் பணிகள் துவங்கியது. 17 உடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு லட்சம் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது அதன் ஆயுட் காலம் 30 ஆண்டுகள் எனவும், மோட்டார்களுக்கு 15 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ; கன ரக வாகனங்களால் ஏற்பட்ட உடைப்பு ஆகிய காரணங்களில் அதிகளவு பாதித்த திட்டமாக இது உள்ளது.

திட்டத்தை மறு சீரமைப்பு செய்யவும், எதிர்கால ரோடு விரிவாக்கத்தையும் ஆய்வு செய்து, ரோட்டோரத்தில் மாற்றி அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். திட்டத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது

Print PDF

தினமணி             28.11.2013

இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது

உடுமலையில் நவம்பர் 28 மற்றும் 29 (வியாழன், வெள்ளி) ஆகிய இரண்டு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகரம் வரை குடிநீர் கொண்டு வர அமைக் கப்பட்டுள்ள இரண்டாவது குடிநீர்த் திட்ட பிரதானக் குழாய்களில் போடிபட்டி, அண்ணா நகர், பள்ளபாளையம் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

 இவற்றைச் சரி செய்யும் வகையில் உடுமலை நகரம் முழுவதும் நவம்பர் 28 மற்றும் 29 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. இதனால், குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், குடிநீரை காய்ச்சிப் பருகுமாறும் வேண்டப்படுகின்றனர்.

 

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

Print PDF

தினமலர்          19.11.2013

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

குன்னூர்:குன்னூரில், கூடுதல் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துரித கதியில் நடந்து வருகிறது.

தண்ணீர் பஞ்சத்தில், தாளம் போடும் குன்னூர் நகர மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

ஏப்ரலில் செயல்படும்

குன்னூரின் பிரதான நீராதாரமான ரேலியா அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் இணைப்பு பெற்று, 9.50 கி.மீட்டர் தொலைவில் உள்ள, கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்படும்.

அங்கு, 3 நீர்தேக்க தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர், அட்டடி, வண்டிச்சோலை, புரூக்லேண்ட், கரடிப்பள்ளம், மோர்ஸ்கார்டன் பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பப்பட்டு, அங்கிருந்து நகர மக்களுக்கு நீர் வினியோகம் செய்யப்படும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் உள்ள 30 வார்டு மக்களும் பயன் பெற முடியும்.

"ரேலியா அணையில் இருந்து கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டிக்கு, குழாய் பொருத்தப்பட்டு, நீர் கொண்டு வரப்பட்டு விட்டது; சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடியும் தருவாயை எட்டியுள்ளது.

அடுத்தாண்டு, மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெற்று, ஏப்ரல் மாதம் முதல், நகர மக்களுக்கு நீர் வினியோகம் துவங்கும்' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேலியா அணையே ஆதாரம்

இத்திட்டம் வெற்றி பெற, ரேலியா அணையின் நீர் இருப்பு, திருப்திகரமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களை போன்று, ரேலியா அணை வறட்சியால் தரை தட்டினால், இத்திட்டத்தின் கீழ் நீரை பெறுவது கடினம். எனவே, ரேலியா அணையை தூர்வாரி, அணையின் கொள்ளளவை அதிகப்படுத்தி, நீர் இருப்பை நிலையாக வைக்க வேண்டிய அவசியம் நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

 


Page 22 of 390