Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.1 கோடியில் வாழைமலையாறு குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 18.06.2010

புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.1 கோடியில் வாழைமலையாறு குடிநீர் திட்டம்

புளியங்குடி : "புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க சுமார் 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வாழைமலையாறு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என நகராட்சி தலைவர் துரையப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:- புளியங்குடி பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து அரசியல் கட்சி ஒன்று ஆர்ப்பாட்டமும், கூட்டமும் நடத்தியது. அதில் என்னையும், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்..வையும் அவதூறாக பேசியுள்ளனர். நகராட்சி தலைவர் என்ற முறையில் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து அரசு நிதியாக ரூ.50 லட்சமும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், நகராட்சி பொது நிதியையும் சேர்த்து சுமார் 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வாழைமலையாறு குடிநீர் திட்டத்தை தயார் செய்து விரைவில் நிறைவேற்ற உள்ளோம். மேலும் தெருக்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் மின் மோட்டார்கள் பொருத்தி தொட்டிகளில் தண்ணீர் தேக்கி மக்களுக்கு வினியோக்கிப்படுகின்றது. உண்மை இவ்வாறு இருக்க சிலர் உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 100 : தூத்துக்குடி மாநகராட்சி புது ஸ்டைல்

Print PDF

தினமலர் 18.06.2010

6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ. 100 : தூத்துக்குடி மாநகராட்சி புது ஸ்டைல்

தூத்துக்குடி : 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நூறு ரூபாயிற்கு விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் சரவணன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணி 2.402 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிமென்ட்தளம், சிறுகால்வாய் கட்டும் பணிகளுக்கு ஏழரை கோடி ரூபாயிற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி ராஜாஜி பூங்கா நீர்த்தேக்க நிலைய வளாகத்தில் புதியதாக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிணற்றுநீரை குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக தனியார் லாரிகள் மூலம் பிடித்து செல்ல ஏதுவாக 6 ஆயிரம் லிட்டருக்கு நூறு ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இந்த பணத்தை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான தீர்மானமும் இன்றைய அவசர கூட்டத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

 

வேலூர் மாநகராட்சியில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை ரூ.2 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 17.06.2010

வேலூர் மாநகராட்சியில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை ரூ.2 லட்சம் ஒதுக்கீடு

வேலூர், ஜூன் 17: வேலூர் மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வார்டுகளுக்கு 10&12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் தண்ணீரும் பொதுமக்களுக்கு முறையாக செல்லாததால் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடக்கிறது.

மாநகராட்சிக்கு முக்கிய நீர் ஆதாரங்களான கருகம்பத்தூரில் தினமும் 2 லட்சம் லிட்டர், பொன்னையில் 15 லட்சம், ஓட்டேரியில் 5&8 லட்சம் லிட்டர் சப்ளை ஆகிறது. இதில் ஓட்டேரியில் நிலத்தடி நீர் பாதிப்பால் எதிர்பார்த்தபடி தண்ணீர் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்து நகருக்கு வந்து சேரும் தண்ணீரின் அளவில் வேறுபாடு இருக்கிறது. இதனால் வழியில் யாராவது தண்ணீரை திருடுகிறார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் சப்ளை லைனை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் 10வது வார்டு பகுதியில் நேற்று வழங்கப்பட்ட குடிநீரில் கழிவு நீர் கலந்துவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 32வது வார்டு ராமர் கோயில் பஜனை தெருவில் கடந்த 45 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறி சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

தண்ணீர் கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதால் மேயர் கார்த்திகேயன், ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் நேற்று மாலை திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து இருவரும் கூறியதாவது:

வார்டுகளில் நிலவும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பைப்லைன் இல்லாத பகுதிகளுக்கு லாரி தண்ணீர் வழங்கப்படும்.

பொன்னையில் ரூ.10 லட்சம் மதிப்பில் 4 போர் வெல் போடும் பணி நடக்கிறது. இதில் 2 போர்வெல்லில் இருந்து நாளை (இன்று) முதல் தண்ணீர் சப்ளை செய்யப்படும். சார்பனாமேட்டில் 2 போர்வெல் போடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 


Page 211 of 390