தி.மலை 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு
Tuesday, 15 June 2010 09:02
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 15.06.2010 தி.மலை 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு திருவண்ணாமலை, ஜூன் 13: திருவண்ணாமலை நகராட்சி 7-வது வார்டு பே கோபுரத் தெரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
4- வது தெரு பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு அப்பகுதி மக்கள் நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி பெரியதெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து பே கோபுரம் 4-வது தெருவுக்கு ரூ.2 லட்சம் செலவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியை நகர்மன்றத் தலைவர் இரா .ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார் (படம்). துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் ஆர்.சேகர், கவுன்சிலர் கார்த்திவேல்மாறன், சேட்டு முருகேசன், விஜயரங்கன், நாராயணன் கலந்து கொண்டனர்.
|
குடிநீர்த் திட்டத்துக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு
Tuesday, 15 June 2010 07:12
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 15.06.2010 குடிநீர்த் திட்டத்துக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு
பழனி , ஜூன் 14: பழனியில் குடிநீர் மேம்பாட்டுக்காக மாநிலங்களவை எம்.பி.யான இயற்கை விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
பழனி நகரில் 25,26 மற்றும் 9-வது வார்டுகளில் கோடைக் காலங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் , ராஜா நகரில் சுமார் இரண்டு லட்சம் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி ரூ. 17 லட்சம் செலவில் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிட்டது.
ஆனால் , அதற்கான நிதி கிடைக்காததால் நீண்ட நாள்களாக திட்டம் தாமதமானது.
இந்நிலையில் , இதுகுறித்து தமிழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, பழனி நகர்மன்றத் தலைவரும், 26-வது வார்டு உறுப்பினருமான இராஜமாணிக்கம், 25-வது வார்டு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடிதம் அனுப்பினர். கவுன்சிலர் கந்தசாமி எம்.எஸ். சுவாமிநாதனை நேரில் சந்தித்து நிலைமை குறித்து விளக்கினார்.
இதையடுத்து , பழனி குடிநீர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி எம்.எஸ். சுவாமிநாதன் கடிதம் கொடுத்துள்ளார்.
இக்கடிதம் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடந்த மே 28-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு வந்துள்ளது.
பழனி நகரில் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய எம் .எஸ்.சுவாமிநாதனுக்கு, நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
550 வீடுகளுக்கு வைப்புத்தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு
Tuesday, 15 June 2010 07:01
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 15.06.2010 550 வீடுகளுக்கு வைப்புத்தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு
திருப்பூர் , ஜூன் 14: குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 550 வீடுகளுக்கு வைப்புத் தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கணக்கெடுப்பு செய்ததில் 27 பகுதிகளில் 2 ஆயிரத்து 60 குடிசைகள் இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகளை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.36 ஆயிரம் மானியம் வழங்கியுள்ளன. இதுதவிர, ரூ.4 ஆயிரம் பயனாளிகள் சொந்தப் பணத்தைச் செலுத்தி அந்த வீடுகளை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
இத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு வைப்புத் தொகை இல்லாம லேயே குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள து . முதற்கட்டமாக, 550 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இலவசமாக வழங்கும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது. பூலவாரி சுகுமார் நகரில் நடைபெற்ற இதற்கான விழாவுக்கு மேயர் க.செல்வராஜ் தலைமை வகித்து, குடிநீர் இணைப்பு பணிகளை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் ஆர் .ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், குடிநீர் விநியோக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கட்டிமுடிக்கப்படும் வீடுகளுக்கும் உடனுக்குடன் இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Tuesday, 15 June 2010 07:03
|
|
|
|
Page 214 of 390 |