தினகரன் 09.06.2010
சிறுவாணியில் இருந்து கூடுதல் குடிநீர் கேட்கிறது மாநகராட்சி
கோவை, ஜூன் 9: சிறுவாணியிலிருந்து கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் கே ட்டு காத்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
கோவையின் குடிநீராதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகி றது. இன்னும் 3.5 மீட்டர் அளவிற்கு மட்டுமே நீர் தேங்கியுள்ளது.
தற்போது அணையிலிருந்து தினமும் 7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மாநகராட்சிக்கு தின மும் 5.6 கோடி லிட்டர் குடி நீரும், வழியோர கிராமங்களுக்கு 1.4 கோடி லிட்டர் குடிநீரும் வழங்கப்படுகிறது.
இப்போது வழங்கப்படும் அளவின் படி தினமும் குடிநீர் எடுத்தால் 10 முதல் 15 நாளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இப்போது வழங்கப்படும் குடிநீர், 50 சதவீத பகுதிக்கு கூட குடிநீர் திரு ப்தி கரமாக வழங்கமுடியவில்லை. கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது.
அணையில் நீர் தேக்கம் அதிகமாக உள்ள காலங்க ளில் மாநகராட்சிக்கு 8.7 கோடி லிட்டர் குடிநீர் வழங் கப்பட்டு வந்தது.
அணை வறட்சியால் தினமும் 3.1 கோடி லிட்டர் அளவுக்கு குடிநீர் குறைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை இன்னும் துவங்காமல் இருப்பதால் குடிநீர் வாரியத்தினர் கூடு தல் குடிநீருக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் தலைமையில் கூடுதல் குடி நீர் வழங்க 3 முறை ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட் டது. விரைவில் வழங்குவ தாக குடிநீர் வாரியத்தினர் சம்மதித்தனர்.
ஆனால் இப்போது கூடு தல் குடிநீர் வழங்கினால், செம்மொழி மாநாடு நடக் கும் நேரத்தில் பற்றாக்குறை ஏற்படும். பருவ மழை துவங் காவிட்டால் பாதிப்பு அதிக மாகி விடும். எனவே கூடு தல் குடிநீர் வழங்க முடி யாது என குடிநீர் வாரியத்தினர் மறுத்து வருகின்ற னர். கோவை நகரில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாகவே இருக்கிறது. வெயில் காரணமாக குடிநீர் பயன் பாடு அதிகமாக இருக்கிறது. குடிநீர் குறைப்பு நீடித்தால் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கணபதி உள்ளிட்ட பகுதி யில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே சிக் கலை சமாளிக்க கூடுதல் குடிநீர் வழங்க மாநகரா ட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத் தில் அணை முழு வறட்சி நிலையை எட்டி விடும் வாய்ப் புள்ளது. பருவ மழை தாமத மாகி வருவதால் குடிநீர் வாரியத்தினர் தவிப்படைந்துள்ளனர்.