Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

அன்னவாசல் பேரூராட்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி தீவிரம்

Print PDF

தினகரன் 08.06.2010

அன்னவாசல் பேரூராட்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி தீவிரம்

அன்னவாசல், ஜூன் 8: அன்னவாசல் பேரூராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அன்னவாசல் ஒன்றியத்தில் அன்னவாசல் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேட்டுத்தெருவில் 3லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அன்னவாசல் நகரில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர், துணை முதல்வர், கலெக்டர், குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பேரூராட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக அரசு பார்வையிட்டு ஒரு லட்சத்து 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பணிகளை தொடங்கியது. ரூ.27லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

3லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர்தொட்டி கட்டிய பிறகு அன்னவாசல் பொதுமக்களின் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என பேரூராட்சி தலைவர் பிரபா தெரிவித்தார்.

 

அவனியாபுரத்திற்கு காவிரி குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 08.06.2010

அவனியாபுரத்திற்கு காவிரி குடிநீர் திட்டம்

அவனியாபுரம்: காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அவனியாபுரத்தில் செயல்படுத்துவது குறித்த அவசர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. உலகவங்கி உதவியுடன் அவனியாபுரத்தில் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வைகையில் சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. பருவமழை பெய்யாத காலத்தில் அவனியாபுரத்திற்கு குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தச்சம்பத்து கிணறுகளில் உறைகளை இறக்குவது போன்ற நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் இறங்கினாலும், குடிநீர் தட்டுப்பாடு எப்போதாவது ஏற்படும். இதனை தவிர்க்க, காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் அவனியாபுரத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய பணிகள் நடந்து வருகின்றன. குடிநீர் வடிகால் வாரியம் இப்பணிக்கு 62.66 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்துள்ளது. இதற்காக நேற்று நடந்த அவசர கவுன்சில் கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் போஸ்முத்தையா தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ஞானசேகரன் முன்னிலை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர்கள், நகராட்சிகளின் மண்டல துணைஇயக்குனர் அலுவலக இன்ஜினியர்கள் மருதுபாண்டி, நடராஜன் திட்டம் குறித்து விளக்கினர். கவுன்சில் கூட்டத்தில் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர் கார்த்திகேயன் நன்றி கூறினார். திட்ட மதிப்பீட்டு தொகை 62.66 கோடி ரூபாயில் 30.33கோடி ரூபாய் மத்திய அரசும், 12.15 கோடி ரூபாய் மாநில அரசும் மானியமாக வழங்க உள்ளன. மீதமுள்ள தொகை நகராட்சி பங்கு ஆக இருக்கும்.

 

ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 07.06.2010

ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு

ராசிபுரம், ஜூன் 7: ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராசிபுரம் நகர்மன்ற தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சி பகுதி மக்களுக்கு பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பூலாம்பட்டி&ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இடைப்பாடி நகராட்சி பகுதி மட்டுமின்றி இடங்கணசாலை, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர் உள்ளிட்ட வழியோர கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இதனால் திட்டத்தின் கடைசி எல்லையான ராசிபுரம் நகராட்சிக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.

இதை போக்க, ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு தனி குடிநீர் குழாய் அமைக்கும் திட்ட வரைவு உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பாதையின் இடையில் கண்டர்குலமாணிக்கம் பகுதியில் இருந்து ராசிபுரம் ஏடிசி டெப்போ வரை 18 கிலா மீட்டர் தூரத்திற்கு தனி குழாய் அமைக்க ரூ.8.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். ஓராண்டில் பணி கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

விரைவில் பணிகள் துவக்கம்

இதை போக்க, ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு தனி குடிநீர் குழாய் அமைக்கும் திட்ட வரைவு உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பாதையின் இடையில் கண்டர்குலமாணிக்கம் பகுதியில் இருந்து ராசிபுரம் ஏடிசி டெப்போ வரை 18 கிலா மீட்டர் தூரத்திற்கு தனி குழாய் அமைக்க ரூ.8.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். ஓராண்டில் பணி கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

தற்போது, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.58 லட்சத்தில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணியும் விரைவில் நிறைவடையும். இவ்வாறு நகர்மன்ற தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்

 


Page 218 of 390