Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீரை சேமிக்க விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்

Print PDF

தினகரன் 07.06.2010

குடிநீரை சேமிக்க விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்

மும்பை, ஜூன் 7: மும்பை யில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் தண்ணீரை மிச்சப்படுத் தவும் குடிநீர் சப்ளையை மேம்படுத்தவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழைய குடிநீர் குழாய்களை பழுது பார்த்தல், புதிய குழாய் கிணறுகளை தோண்டுதல், கடல்நீர் சுத்திகரிப்பாலை களை அமைத்தல், மழை நீரை சேகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தமது பங்குக்கு தண்ணீரை மிச்சப்படுத்து வதற்கான சில யோசனை களை தெரிவித்தார். விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள் என்பதும் அந்த யோசனைகளில் ஒன்று. ஓட்டலுக்கு வருவோர் தங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் ஊற்றிக் கொள்ளும் வகையில் டேபிளில் தண்ணீர் குவளையை வைக்கும் படியும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.

தண்ணீர் கசியும் குடிநீர் குழாய்களை பழுது பார்த்தல், தண்ணீர் நிரம்பி வழியாமல் இருப்பதற்காக தண்ணீர் தொட்டி நிரம்பு வதற்கு முன்பே மோட்டாரை நிறுத்தி விடுதல், கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவை மேயர் தெரிவித்த பிற யோசனைகள் ஆகும்.

இது சம்மந்தமாக ஸ்ரத்தா ஜாதவ் மேலும் கூறிய தாவது:

தண்ணீரை சேமிப்பதற் காக சச்சின் மூலம் பிரசா ரத்தை தொடங்கி இருக்கி றோம். வேறு பல யோசனை களையும் வைத்துள்ளோம். அவை குறித்து இந்தி, மராத்தி மற்றும் உருது போன்ற பல்வேறு மொழி களில் போஸ்டர்கள் அடித்து பிரசாரம் மேற் கொள்வோம். மும்பையின் புறநகர் பகுதி களில்தான் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இப்பிரச்னையில் உதவ இளைஞர்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மும்பையில் பகுதிவாரியாக வாரத்துக்கு ஒருமுறை 100 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத் தும் மாநகராட்சியின் திட்டத்துக்கு மேயர் அனு மதி அளித்து இருந்தார். இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் அமல் படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி யதால் இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பருவமழை தாமதத்தால் பீதியடைய தேவையில்லை போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது

Print PDF

தினகரன் 07.06.2010

பருவமழை தாமதத்தால் பீதியடைய தேவையில்லை போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது

மும்பை, ஜூன் 7: இந்த ஆண்டு பருவமழை தாமத மாக பெய்தாலும்கூட மும் பையில் தண்ணீர் பிரச்னை ஏற்படாது. காரணம், ஜூலை மாதம் வரையில் தேவைப்படும் தண்ணீரை மாநகராட்சி தேக்கி வைத்து இருக்கிறது.

மாநகராட்சி முன்கூட்டி யே நன்றாக திட்டமிட்டு கடந்த ஆண்டில் இருந்து குடிநீர் வெட்டுகளை அமல் படுத்தி வந்திருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு அக் டோபரில் இருந்து 15 சத வீதம் குடிநீர் வெட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மும்பை நகருக்கு வரும் ஜூலை 21ம் தேதி வரை தேவைப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப் பட்டுள் ளது. எனவே பருவ மழை தாமதமானாலும் எந்த பாதிப்பும் வராது. மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும் போது, "மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகை யில் மும்பை மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது.

ஏனெ னில் கடந்த ஆண்டு குளிர் காலத்தின் போது தண்ணீ ரை குறைவாகவே சப்ளை செய்தோம். அதிக குளிராக இருந்ததால் பொதுமக்கள் அதை உணர்ந்து கொள்ள வில்லை. இதன் மூலமாக இந்த ஆண்டு கோடை காலத்துக்கு தேவைப்படும் தண்ணீரை சேகரிக்க முடிந் ததுÓ என்றார்.

 

பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

Print PDF

தினகரன் 07.06.2010

பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

பெங்களூர், ஜூன் 7:பெங்களூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் திப்பகொண்டனஹள்ளி அணையின் நீர்மட்டம் 12 அடியாக குறைந்துவிட்டது. இதனால் பெங்களூர் குடிநீர் வினியோக வாரியம் 135 எம்.எல்.டி. தண்ணீருக்கு பதிலாக 20 எம்.எல்.டி. தண்ணீரை தினமும் பெற்றுவருகிறது.

ஆர்.டி.நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வடக்கு புவனேஸ்வரி நகர் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை மோசமாக பாதித்துள்ளது. பெங்களூர் கிழக்கு பகுதியிலும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் குடங்களை கட்டி தண்ணீர் கொண்டு வந்து ரூ.8க்கு விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தண்ணீரால் பரவக்கூடிய நோயும் அதிகரித்துவருகிறது. டி.ஜே.ஹள்ளி, சுல்தான்பாளையா, டேனரி சாலை, பிரேசர் டவுன், பின்னமங்களா, கே.ஆர்.புரம், நியூ திப்பசந்திரா, விஜினபுரா, மாகடி சாலை, விஜய்நகர், டி.தாசரஹள்ளி, சித்தாபுரா, லக்கசந்திரா தொட்மாவள்ளி ஆகிய இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டி.ஜி. ஹள்ளி அணையில் 74 அடி வரை நிரப்பமுடியும் என்றாலும் 2009ம் ஆண்டு 31 அடி வரை தான் தண்ணீர் நிரம்பியது. போதிய மழையின்மை காரணமாக அணை நிரம்பவில்லை. கடந்த மே மாதம் முதல் குடிநீர் வினியோக வாரியம் 240 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளது.

ஆனால் இதுவும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்று குடிநீர் வினியோக வாரியத்தின் தலைமை இன்ஜினியர் வெங்கடராஜூ தெரிவித்தார்.

 


Page 219 of 390