Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தேவைக்கு ரூ.25 லட்சம் தஞ்சை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 03.06.2010

குடிநீர் தேவைக்கு ரூ.25 லட்சம் தஞ்சை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு குடிநீர் தேவைக்காக ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வீடியோ கான்ஃபரன்ஸ் ஆய்வில் உத்தரவிட்டார். தமிழக அரசு தலைமை செயலாளர் ஸ்ரீபதி மற்றும் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷனர் சுந்தரதேவன், வருவாய்த்துறை செயலர் தனவேல் ஆகியோர் கலெக்டர் சண்முகம் மற்றும் அலுவலர்களுடன் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் கோடைகால அவசர குடிநீர் தேவை குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்திட முதல்கட்டமாக ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும், அதன்மூலம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் மூலம் அவசர குடிநீர் தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்தார். இதில் பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் தேவதாஸ் பொன்னையா, நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

 

தஞ்சை மாவட்ட குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 02.06.2010

தஞ்சை மாவட்ட குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு

தஞ்சாவூர், ஜூன் 1: தஞ்சாவூர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என விடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியருடன் உரையாடிய தலைமைச் செயலர் ஸ்ரீபதி தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்துடன் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், வருவாய்த் துறை செயலர் கி. தனவேல் ஆகியோர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவை குறித்து விடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தலைமைச் செயலர் ஸ்ரீபதி மாவட்டத்தில் குடிநீர்த் தேவையை உடனடியாக சரி செய்ய முதல் கட்டமாக ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உரையாடலில் ஆட்சியர் சண்முகம் ஒதுக்கப்பட்ட நிதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவசர குடிநீர்த் தேவைகளுக்கு பயன்படுத்தபடும் எனவும், மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் தேவதாஸ் பொன்னையா, நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் சாந்தி, குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர்கள் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்: கமிஷனரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்

Print PDF

தினமலர் 02.06.2010

திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்: கமிஷனரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்

திருநெல்வேலி:திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.திருநகர் நலச்சங்க செயலாளர் ராமையா, மாநகராட்சி கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் மண்டலத்தில் 27வது வார்டு திருநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். குடிநீருக்காக வெகுதூரம் அலையவேண்டியுள்ளது. எனவே மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

என்.ஜி..நியூ காலனி மக்கள் நலச்சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், "நீலகண்டநகர், ராஜ்நகர் சந்திப்பு பகுதியில் பாலம் வேலை நடைபெறவில்லை. ரோடுகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பணிகளை உடனே துவக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.வண்ணார்பேட்டை இந்திரா காலனி மக்கள் அளித்துள்ள மனுவில், "வண்ணார்பேட்டை 9வது வார்டு இந்திரா காலனியில் சுடலை கோயில் சந்து ஆரம்பத்தில் இருந்து பைபாஸ் ரோடு திருப்பம் வரை உள்ள தெருவில் மழை நேரங்களில் மழை நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி விடுகிறது. ரோடு உயர்ந்துவிட்டதால் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது. மழைநீரில் கொசுக்கள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வசதியாக வடிகால் ஓடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

 


Page 222 of 390