தினகரன் 01.06.2010
குடிநீர் திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு
பெ.நா.பாளையம், ஜூன் 1: கவுண்டம்பாளையம்& வடவள்ளி பகுதிக்கான பவானி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.
கவுண்டம்பாளையம்& வடவள்ளி பேரூராட்சி பகுதிகளுக்கான பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.31 கோடியே 80 லட்சம் செலவில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளது.
அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நேற்று காலை பவானி குடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதிகளில் பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்பதை பார்த்தார். கவுண்டம்பாளையம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் ரூமையும், வீரபாண்டி பிரிவில் உள்ள நீர் உந்து நிலையத்தையும், செல்லப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்.
பிறகு மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு பவானி குடிநீர் எடுக்கப்படும் இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம், செயல் அலுவலர் தனசேகரன், வடவள்ளி பேரூட்சி தலைவர் அமிர்தவல்லி சண்முகசுந்தரம் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்