Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

Print PDF

தினமலர்   01.06.2010

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

நாமக்கல்: நகராட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு அமைப்பதற்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில், நடந்தது. துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்தார். நகராட்சி 7வது வார்டு பாவடி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணற்றில் நீர் குறைந்ததால், 3.85 லட்சம் ரூபாய் மதிப்பில், சேந்தமங்கலம் பிரதான சாலையில் ஆழ் குழாய் கிணறு அமைக்க மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், நகராட்சி 6வது வார்டு குட்டைத்தெரு மக்கள் பயன்பாட்டுக்காக 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும், 2வது வார்டு ஆர்.பி.புதூர் காலனி மற்றும் ஜேக் அண்டு ஜில் பள்ளி தெருவில், 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் குழாய் நீட்டித்தல் பணிக்கும், 13வது வார்டு பேட்டை காலனி, நடராஜபுரம் 4வது தெரு பகுதிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் விநியோக குழாய் பதித்தல் பணிக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

வார்டு 18ல் டாக்டர் சங்கரன் சாலை, வார்டு 9ல் வெள்ளவாரி மேலத்தெரு ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள ஆழ் குழாய் கிணற்றில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில், நீர்மூழ்கி மோட்டார் அமைத்து ஹெச்.டி.பி.., தண்ணீர் தொட்டி அமைக்கவும், வார்டு 4ல் பொன் கைலாஷ் கார்டன்ஸ் பகுதியில் 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைத்து குட்டை தெரு, மேலத்தெரு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 2வது வார்டு குடியிருப்பு பகுதியில் நகராட்சி பூங்கா பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யவும், அன்பு நகரில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ் குழாய் கிணறு அமைக்கவும் மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. முல்லைநகர் மற்றும் திருநகர் பகுதியில் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 12.60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நகராட்சி அலுவலகம், பதிநகர் மற்றும் காவேரி நகர் பகுதியில் உள்ள சம்பு மற்றும் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 16.30 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சுற்று சுவர் மற்றும் காவலர் அறை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

கோவை நகரில் இனி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

Print PDF

தினமலர்     01.06.2010

கோவை நகரில் இனி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை : செம்மொழி மாநாட்டின்போது நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு நாட்களுக்கொரு முறை குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணையிலிருந்து நாளொன்றுக்கு 6 கோடி 40 லட்சம் லி., குடிநீரை நகர மக்கள் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு வடிகால் வாரியத்திடமிருந்து பெறுகிறது. பெறும் குடிநீரை தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்தது. பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்பு மற்றும் பழுது காரணமாக கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகள் மற்றும் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 1, 2, 3 ஆகிய வார்டுகளில் எப்போதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இதை சமாளிக்க, மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளிலில் வினியோகிக்கும் குடிநீரை குறைத்துக்கொண்டு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டல வார்டு பகுதிகளுக்கு சிறுவாணி குடிநீரை பகிர்ந்து கொடுக்க முடிவு செய்யட்டது. அதற்கான தீர்மானம், மாநகராட்சி மன்றத்தில் நிறைவேறியது.

அதன் படி, சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீரில் 60 சதவீதம் இரு மண்டலப்பகுதிகளுக்கும் பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள 40 சதவீதம் லிட்டரை கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப்பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், செம்மொழி மாநாட்டையொட்டி மாநகரிலுள்ள எந்த ஒரு வார்டு பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது. குடத்தை தூக்கிக்கொண்டு பெண்கள் மறியலில் இறங்கக்கூடாது என்பதால் மாநகராட்சி நிர்வாகம் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் "இனி ஒரு மாதம் வரை நான்கு நாட்களுக்கொருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வார்டுக்குரிய பிளம்பர் மற்றும் கவுன்சிலர்கள் வார்டு மக்களிடம் கூறியுள்ளனர். நான்கு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் போதுமான குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள், தேவையான அளவு குடிநீரை சேகரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சிறுவாணி அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது' என்று வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியீடு செய்துவருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி இன்ஜினியர் கூறியதாவது: சிறுவாணி அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் தெற்கு, மேற்கு மண்டலங்களில் செய்யப்பட்டு வந்தது. அணையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், செம்மொழி மாநாட்டுக்கு போதுமான சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியிருப்பதாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கொருமுறை வினியோகம் செய்யப்படும்.பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப்பகுதிகளில் வழக்கம் போல் நான்கு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படும்;அதில் மாற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார

 

செம்பூரில் மேலும் 2 தண்ணீர் குழாய்களில் உடைப்பு

Print PDF

தினகரன்   31.05.2010

செம்பூரில் மேலும் 2 தண்ணீர் குழாய்களில் உடைப்பு

செம்பூர், மே 31: குடிநீர் வெட்டு காரணமாக மும்பை மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன.

மோனோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் காண்டிராக்டரின் அஜாக்கிரதை காரணமாக செம்பூரில் மேலும் இரண்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. செம்பூர் ஆர்.சி. மார்க்கில் 30 அங்குல குழாய் ஒன் றிலும் ஆச்சார்யா மார்க¢ பகுதியில் 12 அங்குல குழாயிலும் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்புகள் காரணமாக சிந்தி காலனி மற்றும் பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல்., மற்றும் டாடா பவர் கம்பெனி ஆகியவற்றுக் கான குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உடைப்புக்கு காரணமான காண்டிராக்டருக்கு எதிராக செம்பூர் காவல் நிலையத்தில் எஃப்..ஆர். பதிவு செய்ய மாநகராட்சி முடிவு செய் துள்ளது.

மோனோ ரயில் காண் டிராக்டரின் அஜாக் கிரதை காரணமாக குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண் டாவது சம்பவம் ஆகும். கடந்த வார துவக்கத்தில் செம்பூரில் 24 அங்குல குடிநீர் குழாய் ஒன்றில் சேதம் ஏற் பட்டது.

கடந்த மழைக்காலத்தில் போதிய மழை பெய்யாத தால் மும்பையில் 15 சதவீத குடிநீர் வெட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் குடிநீர் குழாய் களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் மக்களின் சிரமம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

கடந்த ஜனவரியில் நானா சவுக் பகுதியில் ஒரு குடிநீர் குழாய் உடைந்ததால் சுமார் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணானது. மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் காண்டிராக்டர் ஒருவர் செய்த தவறால் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த மே மாதம் லால்பாக் மேம்பாலம் கட்டும் பணியின்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்தது. இந்த உடைப்பை பழுது பார்த்த செலவுக்காக மும்பை பெருநகர வளர்ச்சி வாரியத்துக்கு (எம்.எம்.ஆர்.டி..) மாநகராட்சி ரூ.13 லட்சத்துக்கு பில் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 226 of 390