Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வீடுகளில் இலவச கருவிகள் குடிநீர் சேமிப்புக்கு துபாய் அரசு அதிரடி

Print PDF

தினகரன்    27.05.2010

வீடுகளில் இலவச கருவிகள் குடிநீர் சேமிப்புக்கு துபாய் அரசு அதிரடி

அபுதாபி, மே 27: ஐக்கிய அரபு எமிரேட்டின் தலை நகரான அபு தாபியில் ஆண்டுக்கு 7500 கோடி லிட்டர் குடிநீரை சேமிக்கும் வகையில் வீடுதோறும் நீர் சேமிப்பு கருவிகளை இலவசமாக பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அபு தாபியில் மொத்தம் 2.2 லட்சம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் தலா 550 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது உலகிலேயே மிகவும் அதிகமாகும். உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நபருக்கு 180 லிட்டர் தண்ணீரே போதுமானது என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அபு தாபிவாசிகள் ஏறக்குறைய 3 மடங்கு அதிகமாக தண்ணீரை செலவழிக்கின்றனர்.

இதைக் குறைக்கும் விதத்தில் வீடுகளில் அனைத்து வீடுகளிலும் குடிநீரை சேமிக்கும் விதத்தில் பல்வேறு சாதனங்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.1000 வரை சேமிக்க முடியும். முதல் கட்டமாக நடப்பு ஆண்டில் 55 ஆயிரம் வீடுகளுக்கு 3.30 லட்சம் குடிநீர் சேமிப்பு கருவிகள் பொருத்தப்படும்.

நீருடன் காற்றையும் கலந்து அனுப்பும் சாதனம், நீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் ரப்பர் வளையங்கள் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் 60 சதவீதம் வரை குடிநீரை சேமிக்க முடியும்.

மூன்று ஆண்டுகளில் அனைத்து வ¦டுகளிலும் இந்த சாதனங்கள் பொருத்தப்பட்டு விடும். அதன் பிறகு ஆண்டுக்கு 7500 கோடி லிட்டர் குடிநீரை சேமிக்க முடியும் என ஐக்கிய அரபு எமிரேட் அரசு தெரிவித்துள்ளது.

 

பண்ருட்டி பகுதிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை

Print PDF
தினகரன்    27.05.2010

பண்ருட்டி பகுதிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை

பண்ருட்டி, மே 27: பண்ருட்டி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஆணையர் உமா மகேஸ்வரி, மேலாளர் விஜயலட்சுமி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்களூர் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு 5 நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பழனி (திமுக):

நகராட்சியில் வரிவிதிப்பு கமிட்டி இருக்கிறதா? சரியாக செயல்படவில்லை. வருவாய் ஆய்வாளர்கள் அதிக அளவில் வரி விதிக்கிறார்கள்.

பரமசிவம் (திமுக):

நகராட்சி பகுதிகளில் மக்கள் குடிக்கும் குடிநீரில் கழிவுகள் கலந்துள்ளது.

நகராட்சியின் நீர் ஒட்டு மொத்தமாகவே சரியாக இல்லை. குப்பைகள் அள்ளுவதில்லை. கெடிலம் ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தட்சிணாமூர்த்தி (திமுக):

வரிவிதிப்பு கமிட்டியில் வரும் மனுக்களை தீர விசாரித்து முடிவு கட்டப்பட வேண்டும்.

துணைத்தலைவர் கோதண்டபாணி:

3 பிரிவாக வரி பிரிவுகள் பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூடுதல் தொகை வசூலித்தால் திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நகராட்சி தலைவர் பச்சையப்பன்:

வரி விதிப்பு கூட்டங்கள் நடத்தப்படும். அதில் குறைகளை கூறலாம். கவுன்சிலர்கள் கூறிய குறைகள் முறையாக ஆய்வு செய்யப்படும்.

வரிகள் பண்ருட்டி நகராட்சி யில் குறைவாகத் தான் உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் பண்ருட்டியை விட அதிகமாக வரி விதிப்பு செய்கின்றனர். கெடிலம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதிரேசன், அப்துல் ரகுப், கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர்மன்ற தலைவர் தகவல்

Last Updated on Thursday, 27 May 2010 11:33
 

சீராக குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

Print PDF

தினகரன்     27.05.2010

சீராக குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

சேலம்: சேலத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் குடிநீர் வினியோகம் வழங்க கமிஷனர் பழனிசாமி தலைமையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

குடிநீர் வினியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.., தரம் உள்ளதாகவும், அதில் 32 சதவீதம் குளோரின் அளவு கண்டிப்பாக இருக்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மட்டும் இருப்பு வைக்கும் வகையில் மட்டுமே வாங்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் பைகளை காற்றுபுகாவண்ணம் சரியான முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தின் கடைசி பகுதியில் குறைந்தபட்சம் குளோரின் அளவான 0.2 பி.பி.எம்., இருக்க வேண்டும் என கமிஷனர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 


Page 230 of 390