Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்த காலத்துக்கு முன்பே நிறைவேறும்

Print PDF

தினகரன்          18.05.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்த காலத்துக்கு முன்பே நிறைவேறும்

தர்மபுரி, மே 18:

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காகவும், பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறவும் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை பென்னாகரம் வந்தார்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மடம் பகுதியில் பெரிய சமநிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடம், தலைமை நீரேற்று நிலையம் ஆகிய இடங்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் பதிக்கும் பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 30 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,334 கோடி ஒப்புதல் பெறப்பட்டு திருத்திய மதிப்பீடாக ரூ.1,928 கோடியில் பணியை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 5 தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் தொகுப்புக்கான முக்கிய பணிகள் டெண்டர் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. ரூ.63.67 கோடி மதிப்பில் முதல் கட்ட முக்கிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும்.

ஒகேனக்கல் திட்ட பணிகளை 30 மாதங்களில் முடிக்க திட்டமிட்டோம். 24 மாதங்களில் விரைந்து முடிக்கும் அளவுக்கு பணிகள் வேகமாக நடக்கிறது. 2 முதல் 5 தொகுப்பு பணிகளில் பைப் லைன் அமைப்பது உட்பட முக்கிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு ஜூன் இறுதியில் இறுதி செய்யப்படும். 24 மாதத்தில் இந்தப் பணிகளும் நிறைவேறும். 2012ம் ஆண்டு டிசம்பரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடியும். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்த காலத்திற்கு முன்பு எப்படி நிறைவேற்றப்பட்டதோ அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் குறித்த காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்படும். இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். கர்நாடக அரசியல்வாதிகள், அரசியலுக்காக உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகின்றனர். இந்த திட்டத்திற்காக ஒகேனக்கல்லில் இருந்து 2.7 டிஎம்சி நீர் எடுக்க போவதாக கூறுகின்றனர். ஆனால், 1.4 டிஎம்சி நீரை பயன்படுத்தத்தான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதலை பெற்று தான் மாநில அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழக எல்லையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எந்த வரம்பு மீறலும், எல்லை மீறலும் இல்லை. இவ்வாறு துணை முதல்வர் கூறினார்.

 

குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி       18.05.2010

குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

திருச்சி, மே 17:திருச்சி மாநகராட்சியில் ரூ. 169 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை, போர்க்கால அடிப்படையில் விரைவாக முடிக்க வேண்டும் எனப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் அறிவுறுத்தினர்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், ரூ. 169 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 8 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் மேலூர்- கொள்ளிடக் கரையோரம் 3 இடங்களில் பிரதான குடிநீர் சேகரிப்புக் கிணறு கட்டுமானப் பணிகளும், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும், உந்துநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கலந்தறிதற்குரிய நிறுவனப் பிரதிநிதிளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, திங்கள்கிழமை காலை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் பணிகளின் முன்னேற்றம் பற்றி நேராய்வு செய்தனர். அப்போது, பணிகளை ஏற்கெனவே குறிப்பிட்ட காலத்துக்குள், போர்க்கால அடிப்படையில் முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, உதவி ஆணையர் பெ. பாஸ்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்       18.05.2010

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

சிதம்பரம்: சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வராததால் அரசிடம் 52.33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கேட்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப் பட்டது. அரசு 6 கோடியே 15 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள ஒரு கோடியே 2 லட்சம் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. நிதி நிறுவனங்களும் நகராட்சிக்கு கடன் தர மறுத்து விட்டதால் நகராட்சி சார்பில் 50 லட்சமும் மீதமுள்ள 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை அரசிடம் ஒதுக்கீடு கேட்டு பெறுவது எனவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி நேற்று அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த விவாதங்கள்:

ஜேம்ஸ் (தி.மு..,): முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுத்தில் குழப்பம் அதிகமாக உள்ளது. சரியாக வழங்கவில்லை. புகைப்படம் மாறி, மாறி வருகிறது. குடிநீர் தட்டுப் பாடு தீரவில்லை. சில பகுதியில் ஒரு வேலை குடிநீர் வருவதே சிரமமாக உள்ளது.

அப்பு சந்திரசேகர் (தி.மு..,): விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. மக்கள் குடிப்பதற்கே அஞ்சுகின்றனர். பழைய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டது. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைத்தால் மட்டுமே குடிநீரில் கழிவுநீர் கலப் பதை தடுக்க முடியும். இதே குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, உஷா, சிவராம தீட்சதர் பேசினர்.

ரமேஷ் (பா...,): ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. கவுன் சிலர்கள் சொல்லும் எந்த பணியும் நடப்பதில்லை. நகரில் சாலைகள் அத்தனையும் மோசமாக உள் ளது. புதைவடிகால் பணியை காரணம் கூறி சாலை அமைக்க முடியாது என கூறுகிறார்கள் என சரமாரியாக புகார்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் திட்டம் பற் றாக்குறை நிதியை அரசிடம் கேட்டு பெறுவது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

 


Page 238 of 390