Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குழாய் தொட்டியில் ஜெனரேட்டர் தேவை

Print PDF

தினமலர் 05.05.2010

குழாய் தொட்டியில் ஜெனரேட்டர் தேவை

பெரியகுளம்: பெரியகுளம் குழாய் தொட்டி பகுதியில் ஜெனரேட்டர் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கொடைக்கானல் வனப் பகுதி பேரிஜம் ஏரியிலிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறை அணைவழியாக குழாய்தொட்டியில் சேகரமாகிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் மின்மோட்டார் மூலம் தென்கரை, வடகரை பகுதிகளிலில் உள்ள தலா பத்து லட்சம் லிட்டர் கொள் ளளவு உடைய தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.பெரியகுளம் பகுதி மக்களுக்கு தினமும் 45 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டும். பெரியகுளம் பகுதியில் அடிக் கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் பாதிப்படைகிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி, மின்தடை பிரச்னையை சமாளிக்க ஜெனரேட்டர் வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இத்திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. கோடைகாலத்தில் விரைவில் ஜெனரேட்டர் வாங்கி சீராக குடிநீர் விநியோகிக்க வேண் டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர

Last Updated on Wednesday, 05 May 2010 06:15
 

உடுமலை நகராட்சியின் குடிநீர் கிராமங்களில் சூப்பர் விற்பனை: 50 லிட்டர் 25 ரூபாய்

Print PDF

தினமலர் 05.05.2010

உடுமலை நகராட்சியின் குடிநீர் கிராமங்களில் சூப்பர் விற்பனை: 50 லிட்டர் 25 ரூபாய்

உடுமலை: உடுமலை நகராட்சி குடிநீர் முறைகேடாக வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்டங்கள் மூலம் திருமூர்த்தி அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடுமலை நகருக்கு கொண்டு வரப்படுகிறது. திட்ட குளறுபடி, பணியாளர் பற்றாக்குறை, மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றாமல் வினியோகம் செய்யப்படுவது , 80 சதவீதம் தனியார் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சுவது போன்ற காரணங்களினால் உடுமலையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. இந்நிலையில், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச்சென்று, கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது. குடிமங்கலம், பெதப்பம்பட்டி பகுதிகளில் சில தனியார் வாகன உரிமையாளர்கள் வியாபாரமாக செய்து வரு கின்றனர்.மினி டோர் வாகனங்களில் 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் மற்றும் 'டிரம்' களை ஏற்றிக்கொண்டு வரும் இந்த நபர்கள், தளி ரோட்டிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நகரிலுள்ள பொது குடிநீர் குழாய்கள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், பிரஷர் வால்வுகளில் வெளியேறும் குடிநீரை கேன்களில் பிடித்து விற்பனை செய்கின்றனர். 50 லிட்டர் குடிநீர் 25 ரூபாய்க்கு பெதப்பம்பட்டியில் விற்பனை செய்யப் படுகிறது. இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் முறைகேடாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தளி ரோடு மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து முறைகேடாக குடிநீர் விற்பனை செய்யும் லாரிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. நகராட்சி குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயித்திருந்தாலும், ஒரு சில லாரிகளுக்கு மட்டும் பணம் கட்டியதாக கணக்கு காட்டப்பட்டு, பல லோடு குடிநீர் முறைகேடாக கடத்தப்படுகிறது. உடுமலை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இவ்வாறு முறைகேடாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு, லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 05 May 2010 06:05
 

வடவள்ளிக்கு வந்து சேர்ந்தது கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

Print PDF

தினமலர் 05.05.2010

வடவள்ளிக்கு வந்து சேர்ந்தது கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

பேரூர்: குடிநீர் சோதனை ஓட்டத்தில் பவானி ஆற்றிலிருந்து வடவள்ளிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. வடவள்ளி பேரூராட்சிக்கு, சிறுவாணி குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. வடவள்ளி பேரூராட்சியில் 31 லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால், அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இப் பேரூராட்சியில் நபரொருவருக்கு 70 லிட்டராகவும் உயர்த்தும் எண்ணத்தில் இக் கூட்டு குடிநீர்த் திட்டம் உருவாக் கப்பட்டது. ரூ. 29 கோடி செலவில் பவானி ஆறு நெல்லித்துறை பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, வடவள்ளி பேரூராட்சிகளில் மேல்நிலைத் தெ õட்டிகளுக்கு நீர் ஏற்றப்படுகிறது. பகிர்மானக் குழாய்கள் வழியாக பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடிவானது. இத்திட்டம் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் செயல்படுத்த முடிவாகி,இரு ஆண் டுக்கு முன் பணிகள் துவங்கியது. பணிகள் விறு, விறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டு, பவானியிலிருந்து சோதனை தண்ணீர் ஓட்டம் வடவள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பவானி ஆற்றிலிருந்து வடவள்ளிக்கு சோதனை நீர் வந்ததை, பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, துணை தலைவர் சிவசாமி, முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.

 


Page 243 of 390