Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

காவிரி குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திணறும் திருப்புத்தூர் பேரூராட்சி

Print PDF
தினமலர் 30.04.2010

காவிரி குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திணறும் திருப்புத்தூர் பேரூராட்சி

திருப்புத்தூர்:திருப்புத்தூரில் காவிரி குடிநீர் திட்டம், முறையாக செயல்படுத்தப்படாததால், வினியோக குளறுபடி நிலவுகிறது. ஊழியர் பற்றாக்குறையால் புதிய இணைப்புகள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்புத்தூர் பேரூராட்சியில் கடந்த ஆண்டு, 16 கோடி ரூபாயிலான, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ஆறு மேல்நிலை தொட்டிகள் மூலம், தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்படுகிறது. ஆனாலும், நகரின் குடிநீர் தேவை பூர்த்தியாகவில்லை.அவலம்:பழைய 1, 200 இணைப்புகளுக்கு மட்டும் தினமும் ஒரு மணி நேரம், வினியோகிக்கப்படுகிறது. மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால், பல இணைப்புகளில் 'காற்று' மட்டுமே வருகிறது. இக்குளறுபடியால் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரு குடம் மூன்று ரூபாய் 50 காசு என, விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடர்கிறது.புதிய இணைப்பு கோரி 1, 000 பேர் மனு செய்தும், மூன்று மாதமாக கிடப்பில் உள்ளது.

மொத்தம் 5, 000 இணைப்புகளை இலக்காக கொண்டுள்ள, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஊழியர்கள், பேரூராட்சியில் இல்லை. குடிநீர் வினியோகம், நூறு அடி குழாய்கள், 130 மின் மோட்டார் தொட்டிகள், 750 தெரு விளக்குகள், 75 பொது குழாய்களை பராமரிக்க ஒரு எலக்ட்ரீசியன் மட்டுமே உள்ளார். வால்வு ஆப்பரேட்டர், பிட்டர், பிளம்பர், பம்ப் ஆப்பரேட்டர், மின் ஊழியர்கள் இல்லை. இந்த ஊழியர்களை உடனே நியமிப்பது அவசியம். இல்லாதபட்சத்தில், குடிநீர் திட்டத்தின் நோக்கம் முழுமையடையாது. 'கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை' ஏற்படும்.

இதுகுறித்து செயல் அலுவலர் மங்களேஸ்வரன் கூறுகையில், ''கடந்த 1971 ல் பழைய குடிநீர் திட்டம் செயல்பாடுத்தப்பட்ட போது, குடிநீர் வாரிய ஊழியர் சிலர், பேரூராட்சிக்கு மாற்றப்பட்டனர். இதில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். காவிரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, போதிய ஊழியரை நியமிக்க வேண்டும்,'' என்றார்.பேரூராட்சி தலைவர் சாக்ளா கூறுகையில், ''ஊழியர் இன்றி, புதிய இணைப்பு வழங்க முடியவில்லை. பராமரிப்பு பணிகளும் சிரமமாக உள்ளது. தனியார் மூலம் புதிய இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதல் ஊழியரை நியமிக்க, அரசை வலியுறுத்தியுள்ளோம். விரைவில்புதிய இணைப்புகள் வழங்கப்படும். மாலையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என்றார்.

Last Updated on Friday, 30 April 2010 06:31
 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'

Print PDF

தினமலர் 30.04.2010

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'

சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்., 30, மே 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், மேட்டூரில் இருந்து வரும் குடிநீர் மெயின் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் குடிநீர் கசிவு போன்றவற்றை சீர் செய்யும் பணி மற்றும் நீரேற்று நிலையத்தில் தூர் வாரும் பணி ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வரும் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தொங்கும் பூங்கா, அய்யந்திருமாளிகை, அம்மாபேட்டை மேல்நிலை குடிநீர் டேங்க், கீழ்நிலை குடிநீர் டேங்க், பொன்னம்மாபேட்டை, எருமாபாளையம், கிச்சிப்பாளையம், குகை, கருங்கல்பட்டி ஆகிய மேல்நிலைத்தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வரும் பகுதிகளுக்கு ஏப்., 30, மே 1 ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Last Updated on Friday, 30 April 2010 06:20
 

எப்போது முடியும் 2வது நீர் திட்டம்?தடையில்லா வினியோகத்துக்கு ஆவல்

Print PDF

தினமலர் 30.04.2010

எப்போது முடியும் 2வது நீர் திட்டம்?தடையில்லா வினியோகத்துக்கு ஆவல்

கூடலூர்:கூடலூர் நகரில் தொடரும் நீர் பிரச்னைக்கு தீர்வு காண, இரண்டாவது திட்டப் பணிகளை விரைவாக முடித்தால், தடையின்றி நீர் கிடைக்க ஏதுவாகும்.கூடலூர் நகராட்சிப் பகுதி மக்களுக்கு, ஹெலன் நீர் திட்டம் மூலம், கடந்த பல ஆண்டுகளாக வினியோகிக்கப்படுகிறது. நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால், திட்டம் மூலம் வினியோகிக்கப்படும் நீரில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைப் போக்க, நகராட்சி மூலம் சில பகுதிகளில் கிணறு அமைத்து நீர் வழங்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாதது, கோடையில் பற்றாக்குறை ஏற்படுவது போன்ற காரணங்களால், கிணற்றிலிருந்து நீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நிரந்தர தீர்வு காண, புதிய நீர் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையேற்று, கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில், பாண்டியார் - புன்னம்புழா ஆற்றின் கரையோரம் ராட்சத கிணறு அமைத்து 2வது நீர் திட்டம் மூலம் மக்களுக்கு வினியோகிப்பது குறித்து, நகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.

திட்டத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன் 5.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டாலும், கிணறு அமைக்க, இரும்புபாலம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வனத்துறை அனுமதி கிடைப்பதிலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கோழிப்பாலத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை, தனியார் வசமிருந்து மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது; இதனால், பணிகள் உடனடியாக துவங்கவில்லை.இழுபறிக்கு பின் சிக்கல் தீர்க்கப்பட்டு, கடந்தாண்டு திட்டப் பணிகள் துவங்கின. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்து, நீர் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்; ஆனால், பணிகள் இதுவரை முழுமை பெறவில்லை. எனவே, நீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து, தடையின்றி நீர் வினியோகிக்க மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Last Updated on Friday, 30 April 2010 06:00
 


Page 248 of 390