Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் வினியோகம் முறைப்படுத்தணும்: செய்யாறு நகராட்சியில் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 29.04.2010

குடிநீர் வினியோகம் முறைப்படுத்தணும்: செய்யாறு நகராட்சியில் வலியுறுத்தல்

செய்யாறு: 6 நாளைக்கு ஒரு முறை 2 மணி நேரம் என்பதை மாற்றி, 3 நாளைக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் என குடிநீர் வினியோகிப்பதை முறைப்படுத்த வேண்டும் என செய்யாறு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். செய்யாறு நகராட்சி கூட் டம், அதன் தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகனவேல், இன்ஜினியர் ராஜா, துப்புரவு அதிகாரி பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் மதன், ஓவர்சீயர் ராமன் பங்கேற்றனர்.

துணைத்தலைவர்: குடிநீர் வினியோகம் சீராக வழங்கிட வேண்டும்.

லோகநாதன் (.தி. மு..): நகரில் குடிநீர் வினியோக தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும். கை பம்புகளை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும்.

செல்வபாண்டியன் (தி.மு..): 6 நாளைக்கு ஒரு முறை 2 மணி நேரம் என்பதை மாற்றி, 3 நாளைக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் என குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

இன்ஜினியர்: கலெக்டர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 10 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 2 ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்து விடும்.

செல்வபாண்டியன்: செம் மொழி மாநாடு நடத்துவதற்கும், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

லோகநாதன் (.தி. மு..): செய்யாறு டவுன் பகுதியில் இலவச டி.வி., எப்போது வழங்கப்படும்? பாதாள சாக்கடை திட்டம் என்ன ஆயிற்று?

தலைவர்: முழு மானியமாக வழங்கிட அரசிடம் கோரி வருகிறோம்.

செல்வபாண்டியன்: ஊருக்கு வெளியே அகலமான இடத்தில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும்.

தலைவர்: நகரம் வளர்ச்சி அடைந்தவுடன் இது குறித்து பரிசீலிக்கலாம்.

நடேசன் (காங்.,) கன்னியம் நகர் ஏரியை பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யலாம்.
தலைவர்: இப்போதுள்ள பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். அகன்ற இடவசதி இருக்கும்.

ஆனந்தன் (தே.மு.தி..): காந்தி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும்.

மணிமேகலை: ஆலமரத் தெருவில் மினிகுடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.

கங்காதரன்(தி.மு..): சுடுகாடு பகுதி குழாயில் காற்று கூட வருவதில்லை. தண்ணீர் எப்படி வரும்?

பச்சையப்பன்(.தி. மு..): நகராட்சியில் கமிஷனர் கிடையாது. இன்ஜினியரும் பதவி உயர்வில் சென்று விடுகிறார். நகராட்சி நிர்வாகம் எப்படி செயல்படும்?

ராணி(பா...): எனது வீட்டிலும், வார்டிலும் தண் ணீர் வருவதே இல்லை.

ஓவர்சீயர்: அந்த பகுதி மெயின் குழாய் இணைப் புக்களை ஆய்வு செய்யப்படும்.

கங்காதரன்: குடிநீரில் கலக்கும் பிளீச்சிங் பவுடர் தரமானதாக இல்லை.

தலைவர்: புகார் எதுவும் இல்லை. இருப்பினும், அடுத்த முறை உயர்தரமானதாக நீங்கள் சப்ளை செய்யுங்களேன்.

கங்காதரன்: பொதுக் குழாய்களை எப்படி மூடலாம்?

இன்ஜினியர்: மின்வாரிய அனுமதியின்றி 'கனெக்ஷன்' எடுப்பீர்களா? நகராட்சி என் பது பொதுமக்கள் சொத்து. அனுமதியின்றி குழாய் இணைப்பு எடுப்பது தவறு.

செல்வபாண்டியன்: கன்னியம் நகரில் வீட்டுக்கு வீடு அனுமதியின்றி குழாய் இணைப்பு எடுத்திருக்கிறார்களே. அதை உங்களால் என்ன செய்ய முடிந்தது?

நடேசன் (காங்.,): வார்டு பகுதிகளில் புதிய குழாய் இணைப்பு குறித்து தகவல் தெரிவிப்பதே இல்லை.

சொர்ண ஜெயந்தி திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்

Last Updated on Thursday, 29 April 2010 06:48
 

பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு விஸ்வரூபம் எடுத்தது நீர் தட்டுப்பாடு

Print PDF

தினமலர் 29.04.2010

பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு விஸ்வரூபம் எடுத்தது நீர் தட்டுப்பாடு

கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சி மன்றத்தில், சிறப்பு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.தலைமை எழுத்தர் நடராஜ், பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், வரவு, செலவு குறித்து அறிக்கை சமர்பித்தார்.

தங்கேஷ்: இடுக்கரை செல்லும் சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் பயணிக்க முடிவதில்லை. கிராமத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது; உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

வடிவேல்: எனது வார்டுக்கு உட்பட்ட பஜார் பகுதியிலும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; நிரந்தர தீர்வு காணும் வரை, தற்காலிகமாக, லாரிகள் மூலம் வினியோகிக்க வேண்டும். இதே கோரிக்கையை, கவுன்சிலர்கள் கர்ணன், மோகன்தாஸ், ரவிகுமார், கோபால், சீனிவாசன் தெரிவித்தனர்.தலைவர் போஜன்: நீர் பிரச்னை அதிகமுள்ள பகுதிகளுக்கு, பேரூராட்சி மூலம், லாரிகள் மூலம் தற்காலிகமாக நீர் வினியோகிக்கப்படும். பின், தேவையான இடங்களில் கிணறு அமைத்து, குழாய் மூலம் மாற்றியமைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்.வாப்பு: காளவாய் பகுதியில் கிணறு அமைத்து, குழாய் மூலம் நீர் கொண்டு வர மோட்டார் அறை கட்ட வேண்டும். வார்டுகளுக்கு, நீர் உட்பட பல தேவைகள் இருக்கும் போது, மன்ற ஒப்புதலுடன் கவுன்சிலர்களுக்கு அரசு நிதியை பிரித்து வழங்க வேண்டும்; மாறாக, தன்னிச்சையாக செயல்படக் கூடாது.

துணைத் தலைவர் செந்தில் ரங்கராஜ்: புயல் நிவாரண நிதி, மன்ற ஒப்புதல் இல்லாமல் ஒரே இடத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த கூட்டங்களில், நீர் பிரச்னை உட்பட, வார்டுகளுக்கு தேவையான பணிகளை கவுன்சிலர்கள் எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தலைவர் மற்றும் செயல் அலுவலரின் தன்னிச்சைப் போக்கால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

செந்தில் (தி.மு..,), மோகன்தாஸ் (காங்.,), வடிவேல் (.தி.மு..,), வாப்பு (.தி.மு..,), கருணாகரன் (சுயே) வெளிநடப்பு செய்தனர். மற்ற கவுன்சிலர்களுடன் கூட்டம் நடந்தது.

Last Updated on Thursday, 29 April 2010 06:29
 

மறவபட்டி புதூரில் குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமலர் 29.04.2010

மறவபட்டி புதூரில் குடிநீர் தட்டுப்பாடு

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டி புதூரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. கடந்த சில மாதங் களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சுமார் 2 கி.மீ.,தூரத்தில் உள்ள மூக்கையன்குளம் பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது: ' மறவபட்டி புதூருக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள் ளது. இதனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான திட்ட மதிப்பீடு விபரம் எடுக்கும் பணி முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த வேலைக்கான டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும்' என்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:06
 


Page 250 of 390