Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 28.04.2010

ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் ஒதுக்கீடு

ஆம்பூர், ஏப்.27:ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தா. உதயராணி, பொறியாளர் இளங்குமரன், துணைத் தலைவர் தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க் கட்சிகள் விடுத்திருந்த அழைப்பையொட்டி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் என்.எஸ். ரமேஷ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீரை சீராக விநியோகம் செய்வதற்காக ஜெனரேட்டர், மின்மோட்டார், பிளாஸ்டிக் டேங்குகள் வாங்குவதற்கும், பைப் லைன் அமைக்கவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.15 லட்சம் செலவில் சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிகொண்டாவில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை ஆம்பூருக்கு கொண்டு வரவும், அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் சம்பந்தப்பட்ட துறைகளை கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி: தமிழக அரசுக்கு தி.மலை நகராட்சி நன்றி

Print PDF

தினமணி 28.04.2010

கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி: தமிழக அரசுக்கு தி.மலை நகராட்சி நன்றி

திருவண்ணாமலை, ஏப்.27: திருவண்ணாமலை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மூன்றாவது கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் தற்போது 1.7 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகருக்கு சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மூன்றாவது குடிநீர்த் திட்டம் ரூ.36.66 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி ஆணையர் பி.சேகர், பொறியாளர் சந்திரன், நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதுதொடர்பாக நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் கூறியது:

இத்திட்டத்தின் மூலம் ஜெர்மனி நாட்டு மேம்பாட்டு நிதி உதவியுடன் சாத்தனூர் அணையில் இருந்து நீர் கொண்டு வரப்படும். அரசு ஆண்கள் நகராட்சிப் பள்ளி, பச்சையம்மன் கோயில், தேனிமலை பகுதிகளில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும். இத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பயன் தரும் என்றார்.

 

கடையநல்லூர் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 26 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 28.04.2010

கடையநல்லூர் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 26 கோடி ஒதுக்கீடு

கடையநல்லூர், ஏப். 27: கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த, தமிழக அரசு ரூ. 26 கோடி ஒதுக்கியுள்ளதாக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந் நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ரூ. 21.6 கோடியில் நிரந்தர குடிநீர் திட்டம் கொண்டு வர எம்எம்ஏ முயற்சி மேற்கொண்டார்.

தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள குடிநீர் கட்டணத்தில் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை தெரிவித்தது. ஆனால், குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் இத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன், மன்றத்திலும் பதிவு செய்தனர். இதனால், நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்குமோ என அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதனிடையே, சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் என்ற பெயரில் வீடு தோறும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டிய காரணங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில், 1 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள இன்றைய கடையநல்லூரில், நகராட்சியாக உருவான போது போடப்பட்ட குடிநீர்க் குழாய்களும், மேல்நிலைத் தொட்டிகளும் மட்டும்தான் உள்ளன. இதனால் 3 தினங்களுக்கு ஒருமுறைதான் நாம் குடிநீர் பெற்று வருகிறோம்.

இந்நிலை மாற, சுமார் 21 கோடியில்புதிய குடிநீர்த் திட்டத்தை கடையநல்லூர் எம்எல்ஏ கொண்டு வர முயல்கிறார். இதை கவுன்சிலர்கள் எதிர்க்கின்றனர். எனவே பொதுமக்களுக்கான இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கவுன்சிலர்களில் பலர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். கருத்து மாறுபாடுகள் காரணமாக திட்டம் வருவது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் பீட்டர்அல்போன்ஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில், நிரந்தர குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதல்வர், துணை முதல்வரிடம் கோரினேன். அதையேற்று அரசு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கி, அறிவித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். இத் திட்டத்தை முழு மானியத்தில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்

 


Page 251 of 390