Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் வடிகால் வாரியத்தில் காலி பணியிடம் : பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF

தினமலர் 26.04.2010

குடிநீர் வடிகால் வாரியத்தில் காலி பணியிடம் : பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை: 'தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர்களாகவும், டான்சி நிறுவனத்தில் ஃபோர்மேனாகவும் பணியாற்ற விரும்பும் தகுதியுடைய நபர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம்' என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர் ஆவர். பி.., பி.எஸ்.சி., பி.காம்., இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருத்தல் வேண்டும். 58 வயதுகுட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

பழங்குடியினர் நாளது தேதி வரை, ஆதிதிராவிடர் 1995 டிச., 31ம் தேதி வரை, கலப்பு திருமணம் செய்துகொண்டோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட முன்னுரிமை உடையோர் 2006 டிச., 31ம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். இதனடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட உள்ள பெயர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிய உரிய கல்வி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம்.இதுபோன்று டான்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபோர்மேன் பணியிடமும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ இன் மெக்கானிக் (டி.எம்..,) தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருத்தல் வேண்டும். பகிரங்க போட்டியினர் 35 வயது, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம் 37 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

பதிவுமூப்பை பொறுத்தமட்டில் பெண்கள் 2010 மார்ச் 30ம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். பகிரங்க போட்டியினர் 1997 ஜூலை 28ம் தேதிவரை, முஸ்லீம்கள் 2001 ஜூன் 30ம் தேதிவரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 2000 டிச. 18ம் தேதிவரை, ஆதிதிராவிடர்கள் 1996 ஜூலை ஒன்றாம் தேதிவரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர். இதனடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட உள்ள பெயர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிய உரிய கல்வி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 29ம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு நேரில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 27 April 2010 07:21
 

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு : எம்.எல்.ஏ.,தகவல்

Print PDF

தினமலர் 26.04.2010

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு : எம்.எல்..,தகவல்

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக பொதுமக்களின் நன்மையை கருத்திற்கொண்டு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் 21 கோடி ரூபாய் சட்டசபையில் அறிவிப்பு செய்திருப்பதாக தொகுதி எம்.எல்..,பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டத்தின் அடிப்படையிலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அடிப்படையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியினை பொறுத்தவரை தற்போது பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், மக்கள் தொகையும் அதிகரித்திருப்பதன் காரணமாகவும் நகராட்சியில் புதிதாக குடிநீர் மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும் நகராட்சி பகுதியினை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சீராக கிடைக்கப்பெறவில்லை எனவும், ஆற்றுப்படுகையிலிருந்து வாட்டர் டேங்குகளுக்கு வரக்கூடிய பைப் லைன்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு இதன் காரணமாகவும் குடிநீர் வினியோகம் தடைபட்டு வருவதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், பொதுநல அமைப்புகள் சார்பிலும் தொகுதி எம்.எல்.. பீட்டர் அல்போன்சிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனையடுத்து கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்ட பணியினை மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அதனை ஆய்வு செய்வதற்காக குழுக்களும் வந்து சென்றன. கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டட திறப்பு விழாவிற்கு வருகைதந்த துணை முதல்வர் ஸ்டாலின் கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்கான பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தொகுதி எம்.எல்..,தெரிவித்திருந்தார். இதன்படி துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்..கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சி மக்களின் நீண்டகால குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்திடும் பொருட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் நேரிடையாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் உள்ளாட்சி துறை சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின் போது தொகுதி மக்கள் சார்பில் இதற்கான கோரிக்கை துணை முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதனடிப்படையில் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் மற்றும் துவக்க விழா கடையநல்லூரில் விரைவில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும். தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் இந்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கான அறிவிப்பினை செய்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்..,தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 27 April 2010 06:59
 

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 26.04.2010

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை

வேலூர், ஏப்.25: வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என எம்.பி. எம்.அப்துல் ரஹ்மான் கூறினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி சார்பில் சுகாதாரத் திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் சார்ப்பனாமேடு ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியது:

வேலூர் மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நீரந்தரத் தீர்வு காண நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று குடிநீர்ப் பிரச்னை மற்றும் சுகாதாரப் பணிகளில் நாட்டமுடன் செயல்பட்டு வருகிறேன். மிக விரைவில் குடிநீர்த் தட்டுப்பாடு போக்கப்படும் என்றார் அவர்.

முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசியது:

மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேனிங் கருவிகள் நவ்லாக் மற்றும் அலமேலுமங்காபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.6.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. வேலூரில் தினமும் குடிநீர் வழங்க முழுமுனைப்போடு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்றார் அவர்.

முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி 70 பேருக்கு தலா ரூ.6000, ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 43 பேருக்கு தலா ரூ.600 வழங்கப்பட்டன.

விழாவில் எம்எல்ஏ சி.ஞானசேகரன், நலப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கே.எஸ்.டி.சுரேஷ், முன்னாள் எம்பி அ.முகமது சகி, மாநகராட்சி துணை மேயர் தி..முகமது சாதிக் பாஷா, காசநோய் துணை இயக்குநர் ராஜாசிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 254 of 390