Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர்த் தட்டுப்பாடு 130 பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும், 60 புதிய கிணறுகளை தோண்டவும் நடவடிக்கை

Print PDF

தினமணி 24.04.2010

குடிநீர்த் தட்டுப்பாடு 130 பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும், 60 புதிய கிணறுகளை தோண்டவும் நடவடிக்கை

திருவண்ணாமலை, ஏப்.23: கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும், 60 புதிய கிணறுகளை தோண்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அரசு ரூ.2 கோடியை மாவட்டத்துக்கு ஒதுக்கி உள்ளது. கடந்த காலங்களில் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், சிறுமின் விசை மோட்டார் பம்புகளும் நிறுவப்பட்டன. ஆனால் அவை போதிய பலனைத் தரவில்லை.

இதனால் தற்போது ஏற்கெனவே உள்ள 130 கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 60 புதிய கிணறுகள் தோண்டப்படும். விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். கிணறுகள் அமைக்க வேண்டிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்

 

முறையற்ற குடிநீர் இணைப்பு இருந்தால் கவலை இல்லை இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தினால் போதும் : மாநகராட்சிமக்களுக்கு வாய்ப்பு

Print PDF

தினமலர் 24.04.2010

முறையற்ற குடிநீர் இணைப்பு இருந்தால் கவலை இல்லை இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தினால் போதும் : மாநகராட்சிமக்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்பு செய்திருப்பவர்கள் இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தி அதனை முறைப்படுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக எண்ணிக்கையில் முறையற்ற முறையில் வீட்டு குடிநீர் இணைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் இதுபோன்ற இணைப்பினை வைத்திருப்பதால் உள்ளா ட்சி அமைப்புகளுக்கு இழ ப்பீடு ஏற்படுகிறது. அத்துடன் சோதனையின் போது முறையற்ற குடிநீர் இணை ப்பு கண்டுபிடிக்கப்படும் போது அவை துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.இதுபோன்ற நடவடிக்கையால் சிலர் வி..பிக்கள் மூலம் சிபாரிசு செய்வதும், சிலர் நகர உள்ளாட்சி அமைப்பினை எதிர்த்து கோர்ட்டிற்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் நகர்புற உள்ளாட்சி அமைப்புக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதனால் அரசு முறையற்ற குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் நிரஞ்சன்மார்டி புதிய அரசாணை எண் 65ஐ கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.

தற்போது இந்த ஆணை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வந்துள்ளது. இதனை தொட ர்ந்து இந்த புதிய உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கமிஷனர் (பொ) ராஜகோபாலன் கூறியதாவது;தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது அனுமதியற்ற வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளவர்கள் மாநகராட்சியை அணுகினால் உடனடியாக அந்த இணைப்பு முறைப்படுத்தி கொடுக்கப்படும். மாநகராட்சியில் தற்போது வசூலிக்கப்படும் வைப்புத் தொ கையை போன்று இரண்டு மடங்கு வைப்பு தொகை இதற்காக முதலில் கட்டி விட வேண்டும்.அரசின் இந்த புதிய நடைமுறை மூன்று மாத காலம் மட்டும் செயல்படுத்தப்படும். அதற்குள் முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்பை பொதுமக்கள் முறைப்படுத்தி கொள்ளலாம். அரசின் இந்த அறிய வாய்ப்பை தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக அலுவலக நாட்களில் மாநகராட்சி பொ றியியல் பிரிவினை அணுகலாம். இவ்வாறு ராஜகோபாலன் தெரிவித்தார

Last Updated on Saturday, 24 April 2010 06:12
 

மின் தடையால் குடிநீர் சப்ளைக்கு சிக்கல்

Print PDF

தினமலர் 24.04.2010

மின் தடையால் குடிநீர் சப்ளைக்கு சிக்கல்

வேலூர்:வேலூரில் மின்தடை காரணமாக குடிநீர் ஆதரங்களில் நீர் இறைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் சப்ளை செய்வதில் மாநகராட்சிக்கு சிக்கில் ஏற்பட்டு வருகிறது.வேலூர் மாநகராட்சிக்கு பொன்னையாறு, பாலாறு, கருகம்பத்தூர், ஒட்டேரி ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு நகரம் முழுவதும் சப்ளை செய்யப் படுகிறது. 4 குடிநீர் ஆதாரங்கள் மூலமாக நாள்தோறும் 114 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. இதன் மூலம் வேலூரில் உள்ள 48 வார்டுகளுக்கும் முறையே 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஆனது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தினமும் பல மணி நேர மின் தடை காரணமாக குடிநீர் ஆததரங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 114 லட்சம் லிட்டர் கிடைத்த குடிநீர் இப்போது 84 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

நீர் வரத்து குறைவால் வார்டுகளுக்கு 6 நாளுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, 'குடிநீர் ஆதாரங்களில் அவ்வப்போது மின்தடை காரணமாக குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிநீர் ஆதாரங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கூறியுள்ளோம்' என்றார்.

Last Updated on Saturday, 24 April 2010 06:08
 


Page 257 of 390