Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாயில் உடைப்பு 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகிப்பது நிறுத்தம்

Print PDF

தினத்தந்தி            26.09.2013 

குடிநீர் குழாயில் உடைப்பு 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகிப்பது நிறுத்தம்

 

 

 

 

வேலூருக்கு பாலாறு உள்பட பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் பெறப்பட்டு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழ்மொணாவூர் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அது பற்றிய தகவல் கிடைத்தும் மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவின் பேரில், குடிநீர் குழாய் ஆய்வாளர் நிஷார் அகமது ஊழியர்களுடன் சம்பவ இடம் சென்று உடைந்த குழாயை அகற்றிவிட்டு புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

எனவே அல்லாபுரம், தொரப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், சனிக்கிழமை முதல் வழக்கம் போல வினியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கம்பம் நகராட்சியில் ரூ.19 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

Print PDF

தினமணி             05.09.2013

கம்பம் நகராட்சியில் ரூ.19 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

கம்பம் நகராட்சி புதிய குடிநீர் திட்டத்துக்கு, லோயர் கேம்ப்பிலிருந்து பிரதான இரும்பு குழாய் பதிக்கும் பணி துவங்கி உள்ளது.      

  கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், காந்தி நகர், நந்தகோபாலன் கோயில் வளாகம், தாத்தப்பன் குளம், வாரசந்தை வளாகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் மூலம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

  மேலும், 190-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், மின்விசை பம்புகளாக மாற்றப்பட்டுள்ள போதிலும், குடிநீர் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல வார்டுகளிலும் குடிநீர் முற்றிலும் தடைபட்டதால், பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் ரூ. 19 கோடி மதிப்பில் கம்பத்தில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

  இதுவரை, லோயர் கேம்ப் முதல் கம்பம் வரை சுமார் 23 கி.மீ. தொலைவு 1955ஆம் ஆண்டு முதல் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சிமெண்ட் குழாய் பதித்து தண்ணீர் விநியோகம் செய்து வரப்பட்டது. இதில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

  தற்போது, புதிய குடிநீர்த் திட்டத்தில் கம்பம் நகராட்சிக்கு தனியாக லோயர் கேம்ப் முதல் கம்பம் நீரேற்று நிலையம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு புதிதாக பிரதான இரும்புக் குழாய் பதிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

  தற்போது, தனிநபர் ஒருவருக்கு 69 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் முடிந்த பின்னர் இது 98 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் என்றார் நகராட்சித் தலைவர் டி.சிவக்குமார்.

 

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

Print PDF

தினத்தந்தி            31.08.2013

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

குழாயில் உடைப்பு

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்று குடிநீர் பைப் லைன் வரும் வழியில் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் தனியார் கேபிள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேறும் சகதியுமாக பல்லாவரத்துக்கு குடிநீர் வந்தது. இதையடுத்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீரமைத்தனர். ஆனால் நேற்று மீண்டும் சேறு கலந்த தண்ணீரே வந்தது.

குடிநீர் விநியோகம் பாதிப்பு

அப்போது வேறு இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர், அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல்லாவரத்துக்கு குடிநீர் விநியோகம் சீராக மேலும் பல நாட்கள் ஆகும் என தெரிகிறது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குழாய் உடைப்பு வழியாக சேறு கலந்த தண்ணீர் வந்ததால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும்’’ என்றனர்.

 


Page 27 of 390