Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஸ்ரீவி.,யில் குடிநீர் லாரி சிறைபிடிப்பு

Print PDF

தினமலர் 22.04.2010

ஸ்ரீவி.,யில் குடிநீர் லாரி சிறைபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி..,காலனி பகுதியில் குடிநீர் வழங்காததால் லாரியை சிறைபிடித்தனர்.ஸ்ரீவி., நகராட்சி சார்பில் என்.ஜி..,காலனி பகுதியில் மூன்று நாளுக்கொரு முறை லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் இப்பகுதியிலுள்ள போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு மட்டும் மினி லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நேற்று காலை மினி லாரியில் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு குடிநீர் வழங்கி விட்டு வந்த லாரியை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிறை பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேசியதில் லாரிகள் மூலம் மீண்டும் அப்பகுதியில் குடிநீர் வழங்கப்படுமென தெரிவித்ததையடுத்து லாரியை பெண்கள் விடுவித்தனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:18
 

ஸ்ரீவி., நகராட்சி குடிநீர் வழங்குவதில் சிக்கல்

Print PDF

தினமலர் 22.04.2010

ஸ்ரீவி., நகராட்சி குடிநீர் வழங்குவதில் சிக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., நகராட்சியில் மின் சப்ளை கேளாறு காரணமாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ஸ்ரீவி., நகராட்சி மக்களுக்கு செண்பகதோப்பு பேயனாற்று பகுதியில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு சரி வர மழை இல்லாததால் செண்பகதோப்பு பகுதியில் கூடுதலாக எட்டு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் ஓரளவு சீராக வந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நான்கு நாளுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கிணறுகளில் தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி திடீரென ஐந்து நாளுக்கு ஒரு முறையாக மாற்றி வழங்கப்பட்டது. அதுவும் மேடான பகுதிக்கு சரிவர வராத நிலையும் உள்ளது. இந்நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக ஆறு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வருமென காத்திருந்த பெண்கள் தண்ணீர் வராததால் தவித்து போயினர்.இது குறித்து ஸ்ரீவி.,நகராட்சி ஆணையர் முத்துக் கண்ணு கூறுகையில் 'தற்போது 10 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் காற்றுடன் பெய்த மழையில் ஆழ்துளை கிணறு மின் மோட்டாருக்கு செல்லும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் குடிநீர் வழங்குவதில் ஒரு நாள் மட்டும் தாமதம் ஏற்பட்டது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு மீண்டும் ஐந்து நாளுக்கொருமுறை வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

Last Updated on Thursday, 22 April 2010 07:15
 

கோடையில் முன் ஏற்பாடு இல்லாததால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

Print PDF

தினமலர் 22.04.2010

கோடையில் முன் ஏற்பாடு இல்லாததால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

விருதுநகர் : கோடை காலத்தில் குடி நீர் சப்ளை குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் மின் வாரிய அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்,நகராட்சி ஆணையர்கள்,பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

குடி நீர் தட்டுப்பாடு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதியில் மழை இல்லாமல் அணைகள் முழுவதும் வறண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கோடை காலத்தை மனதில் கொண்டு முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோடை துவங்கிய பின்னர் சிறுமின் விசை தொட்டி, சிறு கூட்டு குடி நீர் திட்டங்களுக்கு திட்டமதிப்பீடு தயாரிக்க கோரியுள்ளது. இந்த பணிகள் துவங்குவதற்குள் கோடை காலம் முடியும் நிலை ஏற்பட்டு விடும்.

லாரிகள் மூலம் சப்ளை: குடிநீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அந்தந்தப்பகுதி அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் விபரத்தினை மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக வழங்க கேட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டப்பணிமின் இணைப்புகளில் தனிப் பீடர் லைன் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின் வாரிய அலுவலர்களுக்கு கலெக்டர் சிஜிதாமஸ் உத்தரவிட்டார்.குடிநீர்வாரிய அதிகாரிகள் சந்திரன்,ரிச்சர்ட் ஸ்டான்லி,உதவி இயக்குனர் (ஊராட்சி)கோமதிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:11
 


Page 261 of 390