Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம்

Print PDF

தினமலர் 19.04.2010

தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை : ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில், 'தண்ணீர் தண்ணீர்' விழிப் புணர்வு ஓட்டம் சென்னையில் நேற்று நடந்தது.உலகளவில் பல பெண் களும், தங்களது குழந்தைகளும் குடும்பத்திற்கு தேவையான குறைந்தபட்ச தண்ணீர் எடுத்து வருவதற்காக தினமும் 6 கி.மீ., நடக்கின்றனர்.உலகளவில், ஏற்கனவே எட்டு பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. உலகளவில் நிலவும் தண்ணீர் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கவனத்தை கவர்வதற்காக, ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில், சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலிருந்து 6 கி.மீ., துரத்திற்கு ஓடும், 'தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.

இந்நிகழ்ச்சியை, சென்னை குடிநீர் வாரிய தலைவர் சிவ் தாஸ் மீனா துவக்கி வைத்தார். சென்னை மேயர் மா.சுப்ரமணியன், குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்வரண்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமில் நீர் சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் மறுஉபயோகம் பற்றி பொதுமக் களுக்கு விளக்கப்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 06:09
 

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் விநியோகம் : வல்லநாட்டில் சுவீடன் நாட்டு குழு இன்று பார்வை

Print PDF

தினமலர் 17.04.2010

தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் விநியோகம் : வல்லநாட்டில் சுவீடன் நாட்டு குழு இன்று பார்வை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தலைமை நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை சுவீடன் நாட்டு குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர்.
சுவீடன் நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு என்று 'கம்யூனல்' என்ற தொழிற்சங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சங்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.இதனை கொண்டாடும் வகையில் உலகில் உள்ள பிற நாடுகளுக்கு சென்று அங்குள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.உலகத்தின் பல நாடுகளுக்கு செல்லும் இந்த குழுவினர் இந்தியாவில் தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களை தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சுவீடன் குழு தேர்வு செய்துள்ளது. நேற்று நெல்லையில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.இன்று தூத்துக்குடிக்கு சுவீடன் நாட்டு குழுவினர் வருகின்றனர். கிறிஸ்தியானா தலைமையில் எமில், நிக்கல்சன், மேலின், ஜென்னிநிர்சன், பிரடிரிக் ஆர்திக், இமில், பெர்ணாட்ஸ் ஆகியோர் வருகின்றனர்.தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி அனைத்து பணியாளர் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் நெல்லை சீதாராமன் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அவர்களை மாநகராட்சியில் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்கிறார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தை குழுவினர் ஆய்வு செய்கின்றனர

Last Updated on Saturday, 17 April 2010 06:47
 

பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமலர் 17.04.2010

பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் திறப்பு

புதுக்கோட்டை : புதுகையில் எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட 2 தண்ணீர் தொட்டிகளை எம்எல்ஏ நெடுஞ்செழியன் திறந்து வைத்தார்.புதுகை நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பொதுமக்களின் வசதிக்காக 15 தண்ணீர் தொட்டிகள் கட்டுவதற்கு புதுகை சட்டசபை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ. 1.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுகை நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 15ம் வார்டுகளில் மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டியை எம்எல்ஏ நெடுஞ்செழியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புதுகை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், அதிமுக நகர செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராமநாதன், 12வது வார்டு கவுன்சிலர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர

Last Updated on Saturday, 17 April 2010 06:38
 


Page 265 of 390