Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னை விடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை

Print PDF

தினமணி 16.04.2010

வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னை விடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலர் ஆலோசனை

வேலூர், ஏப். 15: வேலூர் மாவட்டத்தில் சராசரி மழை பெய்யாததால் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சுந்தரதேவன் ஆகியோர் விடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரனுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கைபம்புகள், பவர் பம்புகள், கிணறுகள், மினி பவர் பம்புகள் மூலம் குடிநீர் வழங்க ரூ.6.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2005 ஆண்டுக்குப் பின் பாலாறு வறண்டு காணப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குடிநீர் பிரச்னையை போக்க ரூ.27 கோடி திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிதி மூலம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கேபிரியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 16 April 2010 09:28
 

குடிநீர் பிரச்னையை போக்க ரூ. 2 கோடி நிதி : வீடியோ கான்பரன்ஸில் ஸ்ரீபதி தகவல்

Print PDF

தினமலர் 16.04.2010

குடிநீர் பிரச்னையை போக்க ரூ. 2 கோடி நிதி : வீடியோ கான்பரன்ஸில் ஸ்ரீபதி தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பது தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை செயலாளர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சுந்தரதேவன் ஆகியோர், கலெக்டர் ராஜேந்திரனுடன் குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது 'வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை எந்த நிலையில் உள்ளது?' என்று ஸ்ரீபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, 'வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க இதுவரை ரூ. 6 கோடியே 15 லட்சம் செலவிடப்பட்டு, பல பணிகள் நடந்து வருகிறது. குடிநீருக்கு பாலாற்றை மட்டுமே வேலூர் மாவட்டம் உள்ளது. பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது. மேலும், மாவட்டத்தில் பெரும்பாலான திறந்தவெளி கிணறு போன்ற நீராதாரங்களும் வறண்டு போய் உள்ளது' என்று கலெக்டர் கூறினார்.இதற்கு பதிலளித்த ஸ்ரீபதி, 'வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்' என்றார். வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுக் கூட்டத்தில் டி.ஆர்.., சரவணவேல்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ. 27 கோடி நிதியை கேட்டு மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தது. இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்துக்கு இப்போது ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Friday, 16 April 2010 06:49
 

குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து தலைமை செயலர் கலந்துரையாடல்

Print PDF

தினமலர் 16.04.2010

குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து தலைமை செயலர் கலந்துரையாடல்

விழுப்புரம் : தமிழகத்தில் குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை செயலர் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் நடத்தினார்.கோடை காலம் நிலவுவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. இதனை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை செயலர் ஸ்ரீபதி, தமிழக வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் சுந்தரதேவன் ஆகியோர் 10 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று காலை வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.

விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல் மாவட்ட கலெக் டர்கள் கலந்து கொண்டனர். கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செயல்படுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ள மாவட்டங்களில் தண்ணீர் இருப்பு குறித்து வடிகால் வாரியம் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை குடிநீர் பிரச்னையை தீர்க்க பயன்படுத்த வேண்டும். பல இடங்களில் மழை அளவு குறைவாக இருந்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை வறட்சி என கூறாதீர்கள். குடிநீர் பிரச்னை என மட்டும் கூற வேண்டும். குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க அதிக நிதி கேட்டு கலெக்டர்கள் பரிந்துரை அனுப்பியுள்ளனர். தற்போது ஒதுக்கும் நிதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து திட்ட அறிக்கை அனுப்ப வேண்டும். குடிநீர் மோட்டார்கள் இயக்க மின்சாரம் நிறுத்தக் கூடாது. மாவட்ட கலெக்டர்கள் மின்வாரியத்தில் பேசி குடிநீர் விநியோகிக்க வசதி செய்து கொள்ளலாம். குடிநீர் பிரச்னையில் மறியல் நிகழும் பகுதிகள் இருந்தால் ஆய்வு நடத்தி குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டன.

நிகழ்ச்சியில் விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி பேசுகையில்,'மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை எந்த பகுதியிலும் இல்லை. சின்ன சேலம், வானூர், மேல்மலையனூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னை சிறிதளவு உள்ளது. திண்டிவனத்தை பொறுத்த வரை மின்சாரம் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டருக்காக அதிக நிதி கோரியிருந்தோம். மின்சாரம் தடையின்றி கிடைத்தால் அதிகளவு நிதி தேவையிருக்காது. ஒதுக்கீடு செய் துள்ள ஒரு கோடி ரூபாயில் குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க வழிமுறைகளை தெரிவிக்கிறோம்' என்றார். டி.ஆர்..,வெங்கடாஜலம், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நவ்ஷாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:46
 


Page 268 of 390