Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கவுண்டம்பாளையம் - வடவள்ளி குடிநீர் திட்ட வெள்ளோட்டம்

Print PDF

தினமலர் 15.04.2010

கவுண்டம்பாளையம் - வடவள்ளி குடிநீர் திட்ட வெள்ளோட்டம்

பேரூர் :வடவள்ளி, கவுண்டம்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான சோதனை நீர் ஓட்டம் துவங்கியது.வடவள்ளி பேரூராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் நகராட்சிகளின் மக்கள்தொகை 72 ஆயிரம்.இரு பேரூராட்சியிலும் தனிநபர் ஒருவருக்கு 31 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதை 70 லிட்டராக உயர்த்த புதிய கூட்டுகுடிநீர் திட்டம் துவக்கப் பட்டது. ரூ. 29 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்த திட்டமிட்டனர். பணிகள் 2007ம் ஆண்டு பிப்., 24ல் துவங்கியது.பவானி ஆற்றிலிருந்து நெல்லித்துறையில் நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தனர். இங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள செல்லப்பனூர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு, தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள் மூலம் 14.40 கி.மீ தூரத்திலுள்ள நெ.4 வீரபாண்டி பிரிவிலுள்ள நீர்சேகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மீண்டும் 15.55 தூரத் தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டம் பாளையம் நீர்சேகரிப்பு தொட்டிக்கு வந்து சேரும். கவுண்டம்பாளையத்தில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டிகள் மற்றும் வடவள்ளி பேரூராட்சியில் எட்டு மேல்நிலைத்தொட்டிகளுக்கும் மற்றும் ஏற்கனவே கல்வீரம்பாளையத்தில் பயனில் உள்ள நீர்சேகரிப்பு தொட்டிக்கும் நீர் ஏற்றப்படும். இரு பேரூராட்சிக்கு தேவையான குடிநீர் அந்தந்த மேல்நிலைத்தொட்டிகளிலிருந்து 37.61 கி.மீ பகிர்மான குழாய்கள் மற்றும் பயனில் உள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட் டுள்ளது. தற்போது இத்திட்டப்பணிகள் 96 சதவீதம் முடிக்கப்பட்டு, இரு பேரூராட்சிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.பவானி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், குழாய் மூலம் சோதனை ஓட்டமாக கவுண்டம்பாளையம் வந்து சேர்ந்தது. ஓரிரு வாரங்களில் இக்குடிநீர் திட்டம், இரு பேரூராட்சிகளுக்கும் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கை முடிவுக்கு வந்துள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானி ஆற்றிலிருந்து சோதனை ஓட்டமாக வந்த தண்ணீரை, வடவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், பேரூராட்சி துணைத்தலைவர் சிவசாமி, கவுண் டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Last Updated on Thursday, 15 April 2010 07:40
 

கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனையோட்டம்

Print PDF

தினமணி 13.04.2010

கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனையோட்டம்

பெ.நா.பாளையம், ஏப். 12: கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வண்ணம் ரு. 30.38 கோடி செலவில் நடைபெற்று வந்த கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளன.

பவானி ஆற்றின் நெல்லித்துறையிலிருந்து ராட்சதக் குழாய்களின் மூலம் இப்பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு அதன் பணிகளை 2007-ம் ஆண்டு, கோவையில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நெல்லித்துறையிலிருந்து கவுண்டம்பாளையம் வரை 37கி,மீ. தூரம் குழாய்கள் பதித்தல், வீரபாண்டிப் பிரிவில் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணித்தல், கவுண்டம்பாளையத்தில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தொட்டி மற்றும் கவுண்டபாளையம், வடவள்ளி பகுதிóகளில் 15 மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்த வண்ணம் இருந்தன.

தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்ததால், இதன் நீர்வரத்தை சோதனை செய்ய குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டது. இதன்படி சனிக்கிழமை மாலை நெல்லித்துறையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீரபாண்டி சேமிப்பு நிலையத்தில் சேகரிக்கப்பட்டது.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை கவுண்டம்பாளையத்தில் உள்ள சேமிப்புத்தொட்டிக்கு அனுப்பப்பட்டது. அத்தண்ணீர் எவ்வித தடையுமின்றி சங்கனூர் பள்ளத்திலிருந்த குழாய்க்கு வந்து சேர்ந்தது. இதனை நகராட்சித் தலைவர் கே.எம்.சுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர் மனோகரன், உதவிப் பொறியாளர் பூவலிங்கம், நந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

"கவுண்டம்பாளையம் முதல் வடவள்ளி வரை குழாய்கள் பதிக்கும் பணி ஒருசில தினங்களில் முடிவடைந்து விடும். இது முழுமையாக நிறைவடைந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இதுவரை இப்பகுதியில் பில்லூர் மற்றும் சிறுவாணி குடிநீர்ப்க் திட்டங்களின் கீழ் தினமும் 31 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. புதிய திட்டத்தின் வாயிலாக தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்' என்று, நகராட்சித் தலைவர் சுந்தரம் கூறினார்

Last Updated on Tuesday, 13 April 2010 09:57
 

தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 13.04.2010

தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம்

திருத்தணி, ஏப். 12: தினமணி செய்தி எரிரொலியால் திருத்தணி நகர பஸ் நிலையத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷திருத்தணியில் முருகன் கோயில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல் நிலையம், வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பொது மருத்தவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

÷பஸ் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரம் பள்ளி மாணவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லுகின்றனர். திருத்தணி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

÷தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், கோடைக்காலமாக இருப்பதால் பயணிகள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் திருத்தணி பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது.

÷இது குறித்தான செய்தி படத்துடன் அண்மையில் தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிரந்தரமாக குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (படம்).

÷தற்போது பஸ் நிலையத்தில் பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகள் தங்களது குடிநீர் தாகத்தை தீர்த்து கொள்கின்றனர்.

 


Page 271 of 390